ராஜராஜ சோழன் சிறப்புகள் | ராஜ ராஜ சோழன் வரலாறு தமிழில் | ராஜராஜ சோழனின் சோழ நாடு எப்படி இருந்தது

 


கல்வெட்டுன்னா என்ன அது எதுக்கு இருக்கு ராஜராஜ சோழன் கல்வெட்டுல என்ன எழுதி இருக்கு தமிழ்நாட்டில எத்தனையோ கோவில்கள் உள்ளன அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருக்கு ஆனா இதுல எத்தனை கல்வெட்டு நீங்கப் படிச்சு இருக்கீங்க படிக்கிறத கூட விட்டுவிடுவோம் நம்மள நிறைய பேருக்குக் கோவில்களுக்குப் போகும்போது அங்கு இருக்கிற கல்வெட்டுகள் எல்லாம் நம்ம கண்களுக்குத் தெரியலை என்பது தான் கசப்பான உண்மை இத ஒரு சவால எடுத்து இந்த நிலைமையை மாற்றப் போகிறோம்

முதலில் கல்வெட்டுனா என்ன அதுல என்ன எழுதி இருக்கும் என்பதை பார்க்கப் போகிறோம் அதன் பிறகு ராஜ ராஜ சோழனின் ஒரு கல்வெட்டைப் பற்றி வரிவரியாக அதில் என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள போகிறோம் கடைசியாக அந்தக் கல்வெட்டை வைத்து ஒரு காலத்துல சோழ நாடு எவ்வளவு பெரிதாக இருந்தது என்பதை பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம்

கல்வெட்டு என்பது ஒரு கல்லை வெட்டி அதில் ஒரு வரலாற்று பதிவை எழுதி வைப்பது என்பதாகும் கண்களால் கட்டப்பட்ட கோவில் சுவர்களில் பொதுமக்கள் அனைவரும் பார்ப்பதற்கு ஏற்றது போல் எந்த ஒரு காலத்திலும் அழியாத மாதிரி உளியால் செதுக்கி வைப்பதன் கல்வெட்டு எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் அனைத்து கோவில் சுவர்களிலும் கோவிலுக்கு நன்கொடை அளித்த அனைவரது பெயர்களைப் பட்டியலப்பட்டு இருக்கும் அதில் அவங்கள் கோவிலுக்கு நன்கொடை கொடுத்த ரூபாய் மதிப்பையும் குறிப்பிடப்பட்டிருக்கும் பழங்கால கல்வெட்டும் இதே மாதிரி தான் ஆனா அந்தக் காலத்து மக்களைச் சாதாரணமாக மதிப்பிட முடியாது எந்த ஒரு விஷயத்திற்கும் மிகவும் சிறப்பாக ஓலைச்சுவடிகளில் பதிந்து வைத்துள்ளனர் அது மட்டுமில்லாமல் பொது மக்களுக்கும் தெரிகிற மாதிரிக் கோவில் சுவர்களில் கல்வெட்டாகக் குறிப்பிட்டுள்ளார்கள் மன்னர்கள் கொடுத்த சாசனங்களை செப்பேடுகளிலும் பதிந்துள்ளார்கள் இதே மாதிரி பதிந்து வைப்பதற்கு என்ன தானம் பண்ணார்கள் அரசன் ஒரு கோவிலுக்கு நிலத்தைத் தானமாகக் கொடுக்கும்போது அதை வரியிலி நலம் குடுத்தாரு அந்த நிலத்திலிருந்து வரும் அனைத்து வருமானமும் கோவிலுக்குச் சேரும் ஆனா கோவில் நிறுவனம் அந்த நிலத்திற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை

கல்வெட்டில் என்ன எழுதியிருக்கும்

ஒரு கல்வெட்டில் இவர் இவ்வளவு மதிப்புள்ள பொருட்களைக் கோவிலுக்குக் கொடுத்தார் அப்படி மட்டும் போடாமல் தானம் கொடுத்தவர் எந்த ஊரு அப்போ ஆட்சி பண்ண மன்னர் யாரு அவருடைய வரலாறு என்னன்னு எத்தனையோ குறிப்புகள் இடம் பெற்றிருக்கும் இதை முழுமையா பார்க்கப் போகிறோம் ஒரு கல்வெட்டில் ஏழு பகுதிகள் இருக்கும் முதலில் மங்கலச்சொல் ஸ்வஸ்திஸ்ரீ அப்படின்னு இடம்பெற்றிருக்கும் இதற்கு மங்களம் உண்டாகட்டும் என்று அர்த்தம் இரண்டாவது மெய்க்கிருத்தி உண்மையான புகழ் என்று அர்த்தம் கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் எந்த மன்னர் ஆட்சி செய்தாரோ அவர்களின் புகழைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் மெய்கீர்த்தி என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல அது ஒரு வரலாற்று பொக்கிஷம் எத்தனையோ மன்னர்களின் வரலாறை மெய்கீர்த்தி மூலமாகத் தெரிந்து கொள்கிறோம் மூன்றாவது காலம் அனைத்து விதமான தானம் எப்ப கொடுத்தார்கள் என்பதை குறிப்பிடப்பட்டு இருக்கும் நான்காவது கொடைச்செய்தி யார் கொடை கொடுத்தார்கள் என்ன கொடை கொடுத்தார்கள் யாருக்கு கொடுத்தார்கள் என்பதை குறிப்பிடப்பட்டிருக்கும் சிவன் கோவிலுக்குக் கொடுக்கப்படுகின்ற நீல தானத்திற்கு பெயர் தேவதானம் ஒரு பௌத்த கோவிலுக்குக் கொடுக்கப்படுகின்ற நில தானத்திற்கு பெயர் பள்ளிச் சந்தம் பிராமணர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற நில தானத்திற்கு பெயர் பிரம்மதேயம் ஐந்தாவது சாட்சி இந்தச் சாட்சிக்கு நிறைய பேருடைய கையெழுத்து வரும் ஓலைச்சுவடியில் கையெழுத்து போட்ட அனைவரது பெயர்களும் கல்வெட்டில் இடம்பெற்று இருக்கும் ஆறாவது காப்புச் சொல் இந்த நிபந்தனத்தை பாதுகாப்பவர்களுக்கு என்ன புண்ணியம் கிடைக்கும் அளிக்கிறவங்களுக்கு என்ன பாவம் கிடைக்கும் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏழாவதாக எழுதியவர் கடைசியாக இந்தக் கல்வெட்டில் யார் பொறித்தார்களோ அவர்களது பெயர் இடம் பெற்று இருக்கும் ஒரு கல்வெட்டு என்பது அவ்வளவுதான்

கல்வெட்டு எப்படி உருவாகிறது

முதலில் அரசன் அவரது ஆணையை வார்த்தையாகச் சொல்கிறார் அரசன் சொன்ன அந்த ஆணையைத் திருமந்திர ஓலை அதிகாரி ஓலையில் எழுதுகிறார் அந்த ஓலையைத் திருமந்திரம் ஓலை நாயகம் அப்படி என்கின்ற அதிகாரி சரி பார்க்கிறார் அதற்கு அப்புறம் உடன் கூட்டத்து கருமம் ஆராயும் அதிகாரி அதை மறுபடியும் சரி பார்க்கிறார் அதன்பிறகு வரி கணக்கு எல்லாம் சரியா இருக்குதா என்று சரி பார்க்கிற புரவுவரித் திணைக்களத்தார் அதைச் சரி பார்க்கிறார்கள் அதற்கு அப்புறம் வரிப்பெத்தக அதிகாரி கொடையா கொடுக்கப்படுகின்ற நிலத்திற்கு வரி கிடையாது என்பதை பதிவு செய்கிறார் அதற்கு அப்புறம் விடையில் அதிகாரி என்பவர் கோவில் எந்த ஊரில் உள்ளதோ அந்த ஊரின் சபைக்கு அனுப்பி வைக்கிறார் அதை ஒரு சபை வாங்கி கோவில் நிர்வாகத்திடம் கொடுக்கிறார்கள் கடைசியில் கோவில் நிர்வாகத்தார் இந்த விஷயங்களைக் கோவில் சுவர்களில் கல்வெட்டாக வெட்டி வைக்கிறார்கள்

சோழ நாடு மிகவும் பெரியதாக உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் எங்க ஆரம்பித்து எங்கு முடிந்தது என்பது தெரியுமா சோழ நாட்டின் வரைபடத்தைப் பார்த்து உள்ளீர்களா ராஜராஜ சோழனின் மெய்க்கிருத்திய வைத்துச் சோழ நாட்டின் வரைபடத்தை உருவாக்கப் போகிறோம் காந்தளூர் சாலை ராஜராஜ சோழனின் முதல் வெற்றி இங்குக் களம் அறுத்தல் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை ஆனால் எதுவா இருக்கலாம் என்று அறிஞர்கள் மூன்று விஷயத்தைக் கூறியுள்ளார்கள் ஒன்று கப்பல் படை அழித்தது இரண்டு வேத பாடசாலை அளித்தது மூன்று போர்ப்பயிற்சி சாலை பள்ளியை அளித்தது இவை மூன்றே ஏதாவது ஒன்றாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது இது போன்று சோழ நாட்டில் 12 வெற்றிகள் பெற்றுள்ளன இவற்றை ஒன்று ஒன்றாகச் சேர்த்தாலே சோழ நாட்டின் வரைபடம் நம்மளுக்கு கிடைத்துவிடும்.


பொன்னியின் செல்வன் கதை சுருக்கம்


Beatmark Download


Post a Comment

0 Comments