இன்று நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகும் ஒரு மன்னன் இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தமிழ் மன்னன் அவர் தான் இராஜேந்திர சோழன். அவரின் வாழ்க்கை வரலாற்றைத் தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். தன் வாழ்க்கையில் ஒரு போரில் கூடத் தோல்வியைச் சந்திக்காத மன்னர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்கள் யார் என்பதை நாம் இந்தப் பதிவில் பார்ப்போம்.
தமிழ் மன்னர்கள்:
இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், செம்பியன், இரும்பொறை, குலோத்துங்கன், நெடுங்கிள்ளி, மாறவர்மன், சுந்தரபாண்டியன், சேரன் செங்குட்டுவன், நரசிம்ம வர்ம பல்லவன், நந்திவர்மன், சிம்ம விஷ்ணு, மாமல்லன், பரந்தகன், நெடுஞ்சடையன். இந்திய மன்னர்கள்: சந்திரகுப்தர், விக்ரமாதித்தன், மகாராணா பிரதாப் சிங், பாஜிராவ் பேஷ்வா, கிருஷ்ணதேவராயர், அஜாத சத்ரு, ப்ரித்விராஜ் சவுக்கான், கானோஜி ஆங்ரே, சத்ரபதி சிவாஜி. வெளிநாட்டு மன்னர்கள்: அலெக்சாண்டர் ஜூலியஸ் சீசர், டெமிட்ரியஸ், செங்கிஸ்கான், சைரஸ், அபூபக்கர், ஷுவாங் ஜியாலாங். உலக வரலாற்றில் இத்தனை மன்னர்கள் தன் வாழ்நாளில் ஒருமுறை கூடப் போரில் தோல்வியைச் சந்திக்காத மன்னர்களாக இருக்கிறார்கள். இதில் தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்த இத்தனை பேரில் ஒரு தந்தை, மகன் இருவரும் தன் வாழ்க்கையில் ஒரு போரில் கூடத் தோல்வியைச் சந்திக்காத மன்னர்கள் என்றால் அது இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் இவர்கள் இருவர் மட்டும்தான். இந்த உலகத்தில் வேறு எந்த ஒரு மன்னருக்கும், எந்த ஒரு வம்சதிற்கும், எந்த ஒரு நாட்டிற்கும் இப்படியொரு சிறப்பு கிடையாது.
இராஜேந்திர சோழனின் பிறப்பு:
மாமன்னர் இராஜராஜ சோழனுக்கும், வானவன் மகாதேவிக்கும் 971ல் மகனாகப் பிறந்தார் ராஜேந்திர சோழன். இவர் மிக இளம் வயதிலேயே சோழ படையின் தளபதியாகத் தந்தை நடத்திய பல போர்களில் ஈடுபட்டு பல போர்களை வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். இவர் தந்தையின் தலைமை இல்லாமலே பல போர்களில் தளபதியாகப் பொறுப்பேற்று பல வெற்றிகளைப் பெற்று கொடுத்திருக்கிறார். இராஜேந்திர சோழன் தந்தையைப் போலவே அனைத்து விஷயத்திலும் மிகச் சிறந்து விளங்கி இருக்கிறார். தந்தை இறந்த பிறகு 1012ல் மன்னராக முடி சூட்டிக்கொண்டு 1044 வரை கிட்டத்தட்ட முப்பது மூன்று ஆண்டுகள் மன்னராகப் பொறுப்பேற்றார். இவரின் ஆட்சிக்காலம் சோழர்களின் பொற்காலம்.
இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு;
இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், சிரீவிசயம், மலேயா (சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தைச் சோழநாட்டுடன் இணைத்தவர். அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராசேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது. இந்தியாவில் வாயு கடவுளுக்குக் கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளகத்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. இராசேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்குத் தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மாதண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 'பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராசேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிரரையும் வென்றான். இணை அரசனாக நிர்வகித்தல் இராசராச சோழரின் ஆட்சிக் காலத்திலேயே (பொ.ஊ. 1012), இராசேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான். இராசராசரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராசேந்திர சோழன், இராசராச சோழனின் படைகளுக்குப் பொறுப்பேற்று வெற்றியைத் தேடித் தந்தான். இராஜேந்திர சோழனின் வாழ்க்கையில் மானியக்கேட போர் மிகவும் முக்கிய பங்கு வைக்கிறது. ஏனெனில் இராஜராஜ சோழன் 1007ல் (இன்றைய மும்பை) மானியக்கிடத்தின் மீது போர் தொடுத்து செல்லும்போது அந்த நாட்டின் தலைநகரத்தை மட்டும் கைப்பற்ற முடியவில்லை மொத்த பகுதிகளின் கைப்பற்றிவிட்டார். ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1012 இல் இராஜேந்திர சோழன் மானியக்கேடத்தின் மீது போர் தொடுத்து ஒட்டுமொத்த தலைநகரத்தையும் சேர்த்து மொத்த நாட்டையும் கைப்பற்றி விடுவார். இராஜேந்திர சோழன் வெற்றி பெற்று தஞ்சாவூர் சென்றதும் இராஜராஜ சோழன் போர் வெற்றியின் அளவற்ற மகிழ்ச்சியில் அதே ஆண்டில் இராஜேந்திர சோழனை மன்னனாக முடிசூட்டுவார். சோழ தேசத்துக்கான இராசேந்திர சோழனின் பங்களிப்பு, இராசராச சோழனின் படையில் பட்டத்து இளவரசனாகக் பொ.ஊ. 1012-இல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராட்டிரகூடர்களுக்கு எதிரான இராசராசனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும் ஆகும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராசேந்திரன் துங்கபத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.
ஈழத்தின் மீதான படையெடுப்பு முதலாம் இராசராச சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாகக் கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கில் உள்ள ரோகண நாட்டின் மீது பொ.ஊ. 1018-இல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராசேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களைக் கைப்பற்றிச் சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டுவந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மகிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப் பற்றிச் சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மகா வம்சமும்" கூறுகிறது.
பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு;
ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராசேந்திரன் பொ.ஊ. 1018-இல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களைக் கவர்ந்தான் என்றும், தொடர்ச்சியாகக் கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராசராச சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராசேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களைப் படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.
இராசேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை சடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையிலிருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்தச் சோழ-பாண்டியன் இராசேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட இல்லை.இராஜேந்திரன் பொ.ஊ. 1021-இல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்குக் பொ.ஊ. 1015-இல் ஐந்தாம் விக்ரமாதித்தனுக்கு பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய இரண்டாம் ஜெயசிம்மன் பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் காலத்தில் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளைத் தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்தபொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜெயசிம்மன் இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.
இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும், தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் ஏழாம் விஜயாதித்தனை (VII) ஆதரித்துக் குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதிச் சண்டையில் இராஜேந்திரன், இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.
இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன், இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரை ஆற்றின் கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம்வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு பொ.ஊ. 1022-இல் மணம்முடித்துச் சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் இரண்டாம் ஜெயசிம்மன் பொ.ஊ. 1031-இல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனைக் கீழைச் சாளுக்கிய மன்னனாக்கினான் இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்துக் பொ.ஊ. 1035-இல் விஜயாதித்தனையும், அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியிலிருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரேந்திரனை வேங்கி மன்னனாக அறிவித்தான். ராஜேந்திர சோழன் மிகத்திறமையான, அதி புத்திசாலியான, தைரியமான ஒரு மன்னன். ஆவார் அவரின் சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் அந்தக் காலகட்டத்தில் எந்த ஒரு மன்னனுக்கும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக இருந்தது. இந்தியாவில் ஆண்ட மன்னர்களும், தமிழ் மன்னர்களும், தங்களுக்குள்ளே சண்டை போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்தியாவை தாண்டி, கடல் கடந்து போரிட்டு பல நாடுகளை வென்ற ஒரே மன்னன் ராஜேந்திர சோழன் மட்டும் தான். கிட்டத்தட்ட தெற்காசியாவில் பாதி நாடுகளைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தார். இவருடைய ஆட்சி காலம் சோழர்களின் பொற்காலம். இவர் தன்னுடைய தந்தை போலவே கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டினார். அது கங்கைகொண்ட சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது. இவர் ராணுவத்தில் பல பிரிவுகளைக் கொண்டு வந்திருந்தார். ராணுவ வீரர்கள் அனைவருக்கும் நிறைய சலுகைகள் கொடுத்தார். இப்போது நாம் இந்திய ராணுவத்தில் என்னென்ன சலுகைகள் இருக்கிறதோ, அந்தச் சலுகைகள் அனைத்தையுமே இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர் தன் ராணுவத்திற்கு கொடுத்திருந்தார். கிட்டத்தட்ட இந்திய ராணுவமே இவருடைய ராணுவத்தை பார்த்துதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இப்போது நாம் இந்திய ராணுவம் எப்படி காலட் படை, கப்பல் படை, விமானப்படை என்று செயல்படுகிறதோ, இவை அனைத்திற்கும் முன்னோடி ராஜேந்திர சோழன் தான். இந்த உலகத்தில் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்த ஒரு மன்னன் இராஜேந்திர சோழன் மட்டும் தான். இவரைப் போன்ற ஒரு மன்னன் இந்தப் பூமியில் இதற்கு முன் பிறந்ததும் இல்லை, இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை. இந்த உலகில் தலைசிறந்த மன்னர்கள் நிறைய பேர் இருந்தாலும், இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் இவர்கள் அளவுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் யாரும் கிடையாது.
பாரி வள்ளல் பற்றிய செய்திகள்
Effect Download
0 Comments