பாரிவள்ளல் கடை சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ் மன்னன் தான் பாரிவள்ளல் அவரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பாரிவள்ளல் பரம்பு மலையைச் சுற்றியுள்ள 300 கிராமங்களை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னர் தான் பாரிவள்ளல். அவர் சங்க கால தமிழ் சங்கத்தில் வாழ்ந்த ஏழு கடைகள் வள்ளல்களில் ஒருவர். நாம் அனைவரும் கடையெழு வள்ளல்கள் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் பாரிவள்ளல் தான். அந்த அளவுக்கு இவர் மிகவும் பெயர் புகழ் வாய்ந்த ஒரு குறுநில மன்னர்.
இந்தப் பாரி வள்ளல் என்ற மன்னனுக்கு முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்ற ஒரு சிறப்புப் பெயரும் உண்டு. அதற்கான காரணம் நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். பாரி வள்ளல் ஒருமுறை வேட்டைக்கு சென்று திரும்பி வரும்பொழுது தன்னுடைய தேரில் முல்லைக் கொடி படர்ந்து இருப்பதை பார்த்திருக்கிறார். அந்த இடத்தில் வேறொரு மன்னர் இருந்திருந்தால் முல்லைக்கொடியை அகற்றி விட்டுத் தேரை எடுத்துச் சென்று இருப்பார்கள். ஆனால் பாரி மன்னன் அப்படி செய்யாமல், தன் தேரை முல்லைக்குத் தானமாகக் கொடுத்திருக்கிறார். அதனால் தான் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்று இன்றும் புகழப்படுகிறார்.
இந்தப் பாரி மன்னன் ஆட்சிக் காலத்தில் மிகப் பெரிய புலவராக இருந்தவர் தான் கபிலர். அவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து புலவர்களுக்கும் தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்தக் கபிலர் பாண்டிய மன்னனின் அவைப் புலவராகவும் இருந்திருக்கிறார். இந்தக் கபிலர் எந்த ஒரு மன்னனையும் அவ்வளவு எளிதாகப் புகழ்ந்து பேசமாட்டார். இந்தக் கபிலரின் பெருமையை அறிந்த பல மன்னர்கள் நீங்கள் எங்கள் நாட்டிற்கு வாருங்கள் எங்கள் நாட்டில் கொஞ்ச நாட்கள் தங்கி இருங்கள் என்று பல மன்னர்கள் அழைத்தாலும், இவர் நான் பாண்டிய மன்னனோடு தான் இருப்பேன், மதுரையில் தான் இருப்பேன் என்று எங்கும் வராமல் மதுரையிலே இருந்திருக்கிறார். அப்படி இருக்கும் சமயத்தில்தான் இவருக்குப் வேள் பாரி மன்னனை பற்றிய செய்திகள் கிடைத்திருக்கிறது.
அவர் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி என்ற தகவலும் இவருக்குத் தெரிந்திருக்கிறது. இப்படி வேள்பாரி மன்னனைப் பற்றிய பல தகவல்கள் கபிலருக்கு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு வேள் பாரி மன்னனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில், அவர் பரம்பு மலைக்குக் கிளம்பி சென்று இருக்கிறார். கபிலர் பாரி வள்ளலைச் சந்தித்த பிறகு பாரிவள்ளலின் உபசரிப்பை கண்டு மயங்கி விட்டார். அதன் பிறகு இத்தனை ஆண்டுக் காலம் நாம் பரம்பு மலைக்கு வராமல் மதுரையில் இருந்திருக்கிறோமே என்று எண்ணி மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார். கபிலர் அதன் பிறகு பாரி மன்னனின் அவை புலவராகப் பரம்பு மலையிலேயே தன் வாழ்கையை வாழ்ந்து இருந்திருக்கிறார்.
பாரி மன்னனுக்கு அங்கவை, சங்கவை என்ற இரண்டு மகள்கள் இருந்தார்கள். அந்த இரண்டு மகள்களால் தான் அவருக்குப் பிரச்சினையே வந்தது. பாரிவள்ளலின் இரண்டு மகள்களும் பேரழகிகளாக இருந்தார்கள். அவர்கள் இருவரும் தமிழ்ப் புலமையும், தமிழ்ப்பற்றும் நிறைந்து விளங்கினர். இவர்கள் இருவரும் கபிலரோடு சேர்ந்து பல பாடல்களைப் பாடியும் இருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் அழகாக இருந்தாலே மன்னர்கள் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அந்தப் பெண்களைத் திருமணம் செய்ய நினைப்பார்கள். அப்படி இருக்கும்போது இவரின் இரண்டு மகள்களும் அழகாகவும், அறிவாகவும் இருந்ததால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மன்னர்களும் இவரின் மகள்களைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டார்கள். இவரின் மகள்களைப் பற்றிய செய்திகள் பாண்டிய மன்னனின் காதுகளுக்குச் சென்றது. பாண்டிய மன்னர் இந்தப் பெண்களை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ஏற்கனவே பாண்டிய மன்னனுக்கு திருமணம் ஆகி இருந்தது. இரண்டு பெண்களையும் திருமணம் செய்து தன் அந்தப் புறத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பாண்டிய மன்னன் ஆசைப்பட்டான்.
அதற்காகப் பாரி வள்ளலுக்கு ஒரு ஓலைச் சுவடி எழுதி அனுப்பினார். ஓலையைப் பார்த்த பாரி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாலும், பாண்டிய மன்னனுக்கு முதலில் பெண் கொடுக்க முடிவு செய்தான், அதன் பிறகு கொஞ்சம் நிதானமாக யோசித்து அவர் திருமணமானதை எண்ணி, தன் இரு மகள்கள் அந்தப்புரத்தில் இருப்பதைவிட, தன் நாட்டின் மகாராணியாக இருப்பது மேல் என்று பாண்டிய மன்னனுக்கு பெண் தர முடியாது என்று மறு ஓலை எழுதி அனுப்பி இருக்கிறார். பாரி பெண் தர முடியாது என்று மறு ஓலை எழுதி அனுப்பியதால் பாண்டிய மன்னனின் கோபம் தலைக்கேறியது. ஏற்கனவே அனைத்துப் புலவர்களும் பாரியின் பெருமையையும், புகழையும் பாடி வருகின்றனர். இதனால் பாரி மீது மூவேந்தர்களுக்கும் மிகப் பெரிய கோபம் இருந்தது. அப்படி இருக்கும் மிகப் பெரிய பாண்டிய மன்னனுக்கு பெண் தர முடியாது என்று என்று கூறியவுடன் சேரன், சோழன், பாண்டியன் மூவரும் ஒன்று திரண்டு ஒரு பெரும்படையை உருவாக்கிப் பாரியின் பரம்பு மலைமீது படை எடுத்துச் சென்றார்கள். பரம்பு மலை பாண்டிய நாட்டுக்குள்ளே இருந்த ஒரு மலைதான். அந்தப் பறம்பு மலையைத் தான் பாரி வள்ளல் ஆட்சி செய்து வந்தான்.
மூவேந்தர்கள் பெரும் படையுடன் நீண்ட காலாகப் பரம்பு மலையை முற்றுகையிட்டார்கள். ஒரு சிற்றரசன் தானே இவன் என்ன செய்துவிடப் போகிறான் என்று நினைத்து மூவேந்தர்கள் பாரி வள்ளல்மீது போர் தொடுத்தார்கள். பாரி மன்னனுக்கு ஆதரவாக இருந்தவர் கபிலர் மட்டும்தான். பாரி மன்னனும், கபிலரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இதன்பிறகு மூவேந்தர்களும் பரம்பு மலையை நீண்ட காலமாக முற்றுகையிட்டு தான் இருந்தார்கள். அதன் பிறகு கூடப் பாரிவள்ளல் இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் பரப்பு மலையில் மிக அதிக அளவில் வளங்கள் இருந்தன. அந்த வளங்களை வைத்துப் பாரி வள்ளல் நாட்டு மக்களைச் செல்வச் செழிப்புடன் வைத்திருந்தான். கபிலர் மூவேந்தர்களுக்காக ஒரு பாடல் எழுதுகிறார் நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுக் காலம் இந்தப் பரம்பு மலையை முற்றுகையிட்டாலும், உங்களால் பாரி மன்னனை தோற்கடிக்க முடியாது. வேண்டுமென்றால் கூத்தாடிகள் போல் வேடமிட்டு, பாரி மன்னனை மகிழ்ச்சியடைய செய்தால், அவன் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை என்னிடம் கேளுங்கள், அது ஏதுவாக இருந்தாலும் நான் உங்களுக்குத் தருகிறேன். நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுபவன் என்று கபிலர் அந்தப் பாடல் வரிகளில் மூவேந்தர்கள் அறிவுரை கூறுகிறார்.
இதைக் கேட்டவுடன் மூவேந்தர்களுக்கும் மிகப் பெரிய கோபம் வந்துவிட்டது. இருந்தாலும் அந்த முற்றுகை களைத்து விட்டு வேல் பாரியை ஒன்றும் செய்யாமல் அவர்கள் தங்கள் நாட்டிற்கு கிளம்பினார்கள். அதன் பிறகு கபிலர் வேறு நாட்டிற்கு சென்று இருந்தார். மூவேந்தர்களும் நாடு திரும்பியது நாடு திரும்பி அதற்குப் பிறகு பாரி மன்னனை எப்படி வீழ்த்துவது என்று திட்டம் போடுகிறார்கள். ஒரு சிற்றரசனை நம்மால் வீழ்த்த முடியவில்லை என்ற ஒரு ஏக்கம் அவர்கள் மனதில் இருந்தது. அதன் பிறகு மூவேந்தர்களும் கபிலர் சொன்னது போல் பானர்கள் போல் வேடமிட்டு தான் பாரி மன்னனை வீழ்த்த முடியும் என்று முடிவு செய்து, தன்னுடைய நாட்டில் உள்ள மூன்று வீரர்களைத் தேர்வு செய்து பானர்கள் போல் வேடமிட்டு பாரியின் நாட்டிற்கு அனுப்பி வைத்து, அங்கேயே சில காலம் பாரியின் நம்பிக்கை கூறியவர்களாக இருந்து, தக்க சமயத்தில் பாரி மன்னனை வீழ்த்த வேண்டும் என்று அனுப்பி வைக்கிறார்கள். அவர்களும் தகுந்த நேரம் பார்த்து, வேலையைக் கச்சிதமாகச் செய்து முடிக்கிறார்கள்.
அதன்பிறகு பாரி மன்னன் இறந்த செய்தியைக் கேட்டுக் கபிலர் மிகவும் வருத்தப்பட்டார். பாரியின் மகள்களை எங்களைத் தவிர வேறு யாரும் திருமணம் செய்யக் கூடாது என்று மூவேந்தர்களும் அனைத்து மன்னர்களுக்கும் ஒரு ஆணை பிறப்பித்தார்கள். அதன் பிறகு கபிலர் பாரி மன்னனின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க ஒரு சில மன்னர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் மூவேந்தர்கள் ஆணைக்குப் பயந்து யாரும் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. ஒவ்வையார் தான் மலையமான் திருமுடிக்காரி என்ற மன்னனுக்கு வேள் பாரியின் மகள்களைத் திருமணம் செய்து வைத்தார். மூவேந்தர்களும் அந்தத் திருமணத்திற்கு வந்து தலைமை தாங்கி மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள். வேள்பாரி என்ற மன்னனை வீரத்தால் யாரும் வீழ்த்த முடிய வில்லை. துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடிந்தது.
பகத்சிங் பொன்மொழிகள்
0 Comments