சிவகங்கை சீமையில் பிறந்து சுதந்திரப் போரில் ஈடுபட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய இந்தப் பதிவு
ராணி வேலு நாச்சியார் இந்திய சுதந்திரப் போரில் முதல் வித்தானவர் இந்திய வரலாற்றிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக எதிர்த்துப் போராடி அவர்கள்வசம் இருந்த தனது நாட்டைத் தன் வசப்படுத்தியவர் வேலுநாச்சியார் என்ற பெயரைக் கேட்டாலே அவர்களது வீரமும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் செய்தது தான் ஞாபகத்துக்கு வரும் இதனால் தான் வீரமங்கை என்ற பட்டத்தைத் தாங்கி வீரமங்கை வேலுநாச்சியார் என்று நம் அனைவரும் அழைக்கின்றோம்
வேலுநாச்சியார் 1730 ஆம் ஆண்டு சேதுபதி வம்சத்தின் ராமநாதபுரம் மன்னர் முத்து விஜய ரகுமான் என்ற செல்லமுத்து சேதுபதி அவர்களுக்கும் தாய் முத்தாதா நாச்சியார் ஒரே மகளாகப் பிறந்தவர் தான் வேலு நாச்சியார் இவர் ராமநாதபுரத்திற்கு அருகாமையில் இருந்த சக்கந்தி என்னும் கிராமத்தில் பிறந்தார் அரச வம்சத்திற்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால் வேலுநாச்சியாரை அரச வாரிசாக ஆண் மகனின் வீரத்திற்கு சற்றும் சலிக்காத இடத்தில் எல்லா விதமான போர் கலைகளையும் கற்பிக்கப்பட்டது சிலம்பம் குதிரை ஏற்றம் வால் வீச்சு வளரி வீச்சு வில்வித்தை முதலான கலைகளிலும் தேர்ச்சி பெற்று வீரமங்கை ஆகவே வளர்ந்து வந்தார்
வேலுநாச்சியார் பல மொழிகளில் பேசும் திறன் பெற்றவராக ஆங்கிலம் பிரெஞ்சு உருது போன்ற மொழிகளையும் கைதேர்ந்தவர் ஆக விளங்கி வந்தார் 1747 ஆம் ஆண்டு சிவகங்கை மன்னரான முத்து வடுகநாதருக்கும் வேலு நாச்சியார் அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது அதன்பிறகு ராஜாங்கம் இல்லறம் மக்கள் என மன மகிழ்வோடு ஆன்மீகமும் கலந்து வாழ்ந்தார்கள் இவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற பெண் குழந்தையின் பிறந்தது அந்தக் குழந்தை பிறந்ததை சிவகங்கை சீமையை கொண்டாடியது முத்து வடுகநாதர் அந்தப் பகுதியில் வீரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டார் ஏனெனில் இவரை இவரை எதிர்க்கும் திறன் எந்த எதிரிகளுக்கும் இருக்காது அக்காலத்தில் புகழ்பெற்ற வளரி வீச்சுக்கு கைத்தேர்ந்தவராக விளங்கி வந்தார்
இக்காலகட்டத்தில் தான் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் அதிகாரங்களைக் கைப்பற்றி வரி வசூல் செய்து கொண்டிருந்தது பிரிட்டிஷார் முத்து வடுகநாதரை அணுகி வரிகட்ட கட்டளை பிறப்பித்தபோது இவர் வரி கட்டுவதற்கு மறுப்பு தெரிவித்தார் மேலும் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகக் களம் இறங்கினார் இவரிடம் நேரடியாக மோத முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் மறைமுகமான வழிகளை தேடினார்கள் ஏனெனில் வளரி கலையை பற்றி நன்கு அறிந்தவர் அந்த ஜெனரல் முத்து வடுகநாதர் தீவிர சிவ பக்தர் அவர் கோவிலுக்கு செல்லும்போது ஆயுதம் எதுவும் இன்றி செல்வதுதான் வழக்கம் இதை அறிந்து கொண்ட ஜெனரல் ஆங்கிலேயர்களின் மறைமுகமான செயல்களினால் 1772 ஆம் ஆண்டு மன்னர் வழக்கம்போல் காளையார் கோவிலில் உள்ள சிவனை வழிபடுவதற்காக சென்று இருந்தார் இந்த தருணங்களை எதிர்பார்த்து காத்திருந்த ஆங்கிலேயர்கள் மன்னர் பூஜையில் ஈடுபட்டு இருக்கும்போது நவாப் படைகளும் ஆங்கிலப்படைகளும் கோவிலை சுற்றி வளைத்தார்கள் மன்னரை மறைமுகமாக மறைந்திருந்து சுட்டு வீழ்த்தினார்கள் காளையார் கோவிலும் காளையார் கோவிலின் கோட்டையும் நவாப் பாசமாகியது
தனது கணவர் தந்திரமாக கொலை செய்யப்பட்டது அறிந்த வேலுநாச்சியார் தனது கணவரின் உடல் மீது சபதம் செய்தார் வேலுநாச்சியார் தனது கணவனை சுட்டுக்கொன்ற ஆங்கிலேயர்களை இந்த மண்ணில் இருந்து வெளியேற்ற உறுதியற்றார் மருது சகோதரர்களின் அறிவுரையின் படி வேலு நாச்சியார் மறைமுகமாக வாழ்ந்து வந்தார் தேவகோட்டை அருகில் உள்ள சக்கரவதி கோட்டையில் அரண்மனை சிறுவாயில் கோட்டையில் பாண்டியன் கோட்டை அறியா குறிச்சி கோட்டை பல இடங்களில் தனது படை வீரர்களுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் வேலுநாச்சியார் இந்த அனைத்து கோட்டைகளும் பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் ஆயுதக் கிடங்காகவும் பயன்படுத்தி வந்தார்கள் வால் வேல் வளரி என பல ஆயுதங்களை இங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இந்த கோட்டைகளை ராணி தேர்வு செய்யக் காரணமான இந்தக் கோட்டைகள் காடுகளுக்கு நடுவில் அமைந்திருந்ததும் உள்ளே ஊடுறுவாதவாறு முட்புதர்களும் அறனாக அமைந்திருந்ததும் இதன் காரணமாக அந்நியர்கள் ஊடுருவ முடியாதவாறு யோகித்து இந்தக் கோட்டைகளைத் தேர்வு செய்து இருக்கிறார்
ராணி வேலுநாச்சியார் இறுதியாகத் தலை மறைவாகத் திருப்பாச்சி கோட்டையில் தங்கி இருந்ததாகவும் அங்கு அவருக்குக் கோபால நாயக்கர் உதவி புரிந்து வந்ததாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றார்கள் விருப்பாச்சி பாளையத்தை ஆட்சி புரிந்து வந்த கோபால நாயக்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அக்காலத்தில் அடைக்கலம் தந்துள்ளார் அதன்படி இராணி வேலுநாச்சியார் அவர்களுக்கும் அடைக்கலம் அளித்துள்ளார் ஒருநாள் வேலுநாச்சியார் தனது படைத் தளபதிகளான மருது சகோதரர்களுடன் காளையார் கோவிலில் தனது கணவனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும்பொழுது ஆங்கிலேயர்கள் அறிந்து கொள்கின்றனர் வீரர்களுடன் இணைந்து அறியான் குறிச்சி வழியாக ராணி செல்கிறார் அவ்வளியில் கன்னிப்பெண் ஒருத்தி ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருக்கிறாள் அவளது பெயர் உடையாள் அவள் ராணிக்கு இளைப்பு தீரத் தண்ணீர் கொடுத்து உதவுகிறாள் தன்னை ஆங்கில படைகள்பின் தொடர்வதாகவும் அவர்கள் கேட்டால் நான் சென்ற பாதையைக் கூறி விடாதே என்றும் கூறி செல்கிறாள் அவர்கள் சென்ற சில நேரம் கழித்து பாஞ்சோவின் ஆங்கில படைகளும் அவ்விடத்திற்கு வருகிறது அவர்கள் உடையாளிடம் ராணி வேலுநாச்சியார் குறித்து விசாரிக்கின்றனர் அவளும் ராணி சென்ற திசை எனக்குத் தெரியும் ஆனால் நான் சொல்லமாட்டேன் என்று பொய் கூறாமல் உண்மையைச் சொல்கிறாள் நீ சொல்லவில்லை என்றால் உன்னைத் துண்டு துண்டாக வெட்டி விடுவேன் என்று ஆங்கிலேய படைகள் எச்சரித்தும் அவள் கூற மறுத்துவிட்டால் தன் உயிரே போனாலும் தனது ராணியை காட்டிக் கொடுக்கமாட்டேன் என அஞ்சாமல் ஆங்கிலேரியிடம் கூறிவிட்டாள் சிவகங்கை சீமையின் பெண் அல்லவா அவள் அவளது பேச்சில் கோபமுற்று ஆங்கிலேயர்கள் அவளது கைகளைத் துண்டிக்கின்றனர் ஆனாலும் அவள் உண்மையைக் கூற மறுக்கிறாள் பின்னால் கால்களைத் துண்டிக்கின்றனர் அப்பொழுதும் அவள் கூற மறுக்கின்றாள் ஒரு கட்டத்தில் அவரது தலையைத் துண்டித்து அவளைக் கொன்று விடுகின்றனர் துண்டு துண்டாக வெட்டப்பட்டும் தனது தேசத்தின் நமக்காக தன்னை காட்டிக் கொடுக்காத பெண்ணைக் குறித்து ராணி வேலுநாச்சியார் கேள்விப்படுகிறாள் அங்கு விரைந்து வந்து தன் கண்ணீரை அஞ்சலி ஆக்கி அவள் வெட்டப்பட்ட இடத்திலேயே ஒரு கோவிலை எழுப்பி அந்தக் கோவிலுக்கு வெட்டுடையால் காளி என்று பெயரைச் சூட்டி தனது வைர தாலியையும் அவளுக்குச் சமர்ப்பிக்கிறார்
1772 ஆம் ஆண்டு ராணி வேலு நாச்சியார் சோதனைக்குரிய காலம் இருந்தது கொல்லங்குடி பனங்குடி பாகனேரி திருபுவனம் மல்லகோட்டை மேலூர் லிங்குவடி திருமலை திண்டுக்கல் விருப்பாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்தார் வேலுநாச்சியார் விருப்பாச்சி கோட்டையில் இருந்தபோது ஹைதர் அலியின் உதவியை நாடி கடிதம் ஒன்றை எழுதினார் விருப்பாச்சி கோட்டையில் தங்கி இருந்த வேலுநாச்சியார் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் மருது சகோதரர்கள் திண்டுக்கல் கோட்டையில் தங்கி இருந்த ஹைதர் அலியை சந்திக்கின்றனர் வேலு நாச்சியார் ஹைதர் அலியிடம் ஆங்கிலேயர்களின் எதிர்ப்புகுறித்து உருது மொழியிலேயே விளக்கினார் இவரது திறமை கண்டு வியந்த ஹைதர் அலியும் இவருக்கு உதவி புரிவதற்காக உறுதி அளிக்கிறார் அதன் பிறகு ராணி வேண்டிய 12 பீரங்கிகள் 500 துப்பாக்கிகள் சில குதிரை வீரர்கள் அனுப்பி வைத்தார் ஹைதர் அலி இதனைக் கொண்டு மருந்து சகோதரர்களுடன் ஆலய வீரர்கள் போர் பயிற்சி மேற்கொள்கின்றனர் ஏழு ஆண்டுக் காலம் பல கோட்டைகளில் மாறி மாறி வாழ்ந்து வந்தார் வேலுநாச்சியாரம் இதற்கிடையில் ஆங்கிலேயர்களின் உதவியாள் சிவகங்கை பெற்றிருந்த நவாப் 1773 ஆம் ஆண்டு சிவகங்கை உசைன் நகர் என்று பெயர் மாற்றம் செய்கிறார் சிவகங்கை மக்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தனது ராணியின் வருகைக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்
காலமும் கனிய ஆரம்பித்தது போர் புரிவதற்காக ராணி தயாராக இருந்தால் தனது படைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து சிவகங்கை திருப்பத்தூர் காளையார் கோவில் என மூன்று பகுதிகளையும் கைப்பற்ற கொரில்லா போர் முறை கையாளப்பட்டது சிவகங்கை நகரை கைப்பற்ற திட்டமிடப்பட்டது சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி நவராத்திரி விழா எல்லா வருடமும் கொண்டாடப்படுவது வழக்கம் அப்பொழுது கோட்டையில் உள்ளிருக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபட மக்கள் ஒன்று கூடுவார் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு வேலுநாச்சியாரும் அவர்களது பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு மக்கள் கூட்டத்தில் மாறுவேடம் அணிந்து கொண்டு அரண்மனைக்குள்ளே நுழைந்தனர் அரண்மனைக்கு உள்ளே இருந்த ஆங்கிலேயர்களிடம் திடீர் தாக்குதல் நடத்தி அரண்மனையைக் கைப்பற்றினர் இதே சமயத்தில் வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்ற பெண் தனது உடலில் தீ வைத்துக் கொண்டு வெள்ளையனின் ஆயுத கிடங்கை ஆயுதக் கடங்கை அழித்துத் தரைமட்டம் ஆக்கினால்
சிவகங்கை அரண்மனையைக் கைப்பற்றிய பிறகு கோட்டையின் மேல் இருந்த கொடியினை கீழ் இறக்கிவிட்டு சிவகங்கை சீமையின் கொடி மேலேற்றப்பட்டது பின்னர் 1780 ஆம் ஆண்டு ஐப்பசி திங்கள் ஐந்தாம் நாள் ராணி வேலுநாச்சியார் தலைமையில் பெரும்படை புறப்பட்டுக் கடும் போர் புரிந்து காளையார் கோவிலை மீட்டனர் ராணி வேலுநாச்சியார் அவர்கள் தனது ஐம்பதாவது வயதில் தனது கணவனைக் கொன்ற அனைவரையும் கொன்று தனது சபதத்தை நிறைவேற்றிச் சிவகங்கை சீமையின் அரியாசனத்தில் அமர்ந்து அரசி ஆனார் ஆங்கிலப்படைகளையும் நவாப் படைகளையும் வீழ்த்திய வேலு நாச்சியார் சிவகங்கையின் பெருமைகளை மீண்டும் நிலைநாட்டினார் உசேன் நகர் என்று பெயருடன் இருந்த சிவகங்கை மீட்டதொடு மீண்டும் சிவகங்கை என்னும் பெயரைச் சூட்டினார்
1790 ஆம் ஆண்டு தனது மகள் வெள்ளச்சியின் மறைவினால் மனம் உடைந்த வேலு நாச்சியார் இதய நோயாளி ஆனார் 1793 வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணம் மேலும் அவரைத் தாக்கியது திருப்பாச்சி அரண்மனையில் தங்கி இருந்த வேலுநாச்சியார் 1796 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் அன்று இம்மண்ணுலக வாழ்வை நீத்து இறைவனடி சேர்ந்தார் வேலு நாச்சியார் பயன்படுத்திய வால் ஈட்டி முதலான கருவிகள் இன்றும் சிவகங்கை அரண்மனையில் பாதுகாக்கப்படுகிறது இவ்வாறு நினைவே போற்றும் விதம் இந்திய அரசால் 2008 ஆம் ஆண்டு நினைவுத் தபால் தலை வெளியிடப்பட்டது விடுதலைப் போராட்டத்தில் எத்தனையோ அரசர்களும் எத்தனையோ வீரர்களும் உயிர் நீத்தனர் இவர்கள் அனைவருக்கும் மணிமுடியாக இழந்த மண்ணையும் மீட்டு ஆங்கிலேய படைகளுக்கு எதிராக இறுதி மூச்சு வரை போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் வியப்பின் சரித்திர குறியீட்டின் உச்சம் எனலாம்.
தமிழ் மன்னர்களின் வரலாறு
Beatmark Download
Effect Download
0 Comments