தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்து இன்று கோடிக்கணக்கான இந்திய மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் இந்திய விஞ்ஞான ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் இந்திய தேசத்தின் முக்கிய தலைவர்களின் இவரும் ஒருவர் தெரு ஓரத்தில் செய்தித்தாள்களை விற்ற சிறுவன் இந்நாளில் தன் உழைப்பால் இந்தியநாட்டின் முதல் குடிமகனாய் உயர்ந்து தேசமே பெருமை கொள்ளும் அளவிற்கு சாதனைகளைப் படைத்தார் அக்கினி சிறகு இளைஞர்களை எதிர்கால இந்தியாவினை மாற்றங்கள் என்று கூறி அது மட்டுமின்றி நான் என்னால் முடிந்த உயரத்தை பார்த்து விட்டேன் ஆனால் நீங்கள் என்னைவிட உயரத்தை பார்ப்பீர்கள் அதற்காகக் கனவு காணுங்கள் என்று கூறி இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் சாகும் வரை திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டிற்காக உழைத்த இந்திய ஏவுகணை நாயகனின் வாழ்க்கை வரலாற்றை இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
அப்துல் கலாம் அவர்கள் தமிழகத்தின் எல்லையான ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மாக்கும் மகனாகப் பிறந்தார் இவரது தந்தை மீனவத் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர் தனது தந்தையின் பாரத்தினை குறைக்க செய்தித்தாள்கள் போடுவது போன்ற சின்ன சின்ன வேலைகளைச் செய்து தனது குடும்பத்திற்கு அவரது பங்களிப்பினை தந்தார் அப்துல் கலாம் தந்தை சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ராமேஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்தார் அவரது பள்ளி படிப்பு காலத்தில் அவர் ஒரு சராசரி மாணவனாகவே திகழ்ந்தார் ஆனால் இவர்களிடம் ஒரு திறமை இருந்தது அது என்னவென்றால் மதிப்பெண்கள்மீது நம்பிக்கை இல்லாத இவர் நடைமுறையில் தான் கற்றவற்றை சிந்தித்து பயன்படுத்தும் புத்தி வாய்ந்தவர்.
இவரது யோசனைத் திறனை இவரைப் பிற்காலத்தில் இவரை மிகப்பெரிய விஞ்ஞானியாக மாற்றியது தனது பள்ளி படிப்பினை முடித்துக் கல்லூரி படிப்பிற்காகத் திருச்சியில் வந்து இயற்பியல் துறையில் சேர்ந்தார் ஆனால் அவர் அதைப் படிக்கும் போதே நமக்குச் சரி வராது என்று விண்வெளி அறிவியலைப் பற்றியே எந்த நேரமும் நினைத்துக் கொண்டு இருந்த அவர் இயற்பியல் துறையில் அவரது இளங்கலை பட்டத்தை 1954 ஆம் ஆண்டு பெற்றார் அதன்பின் பிடிக்காத துறையில் பணியாற்றுவதை விட நமக்குப் பிடித்த துறையில் மீண்டும் படிக்கலாம் என்று சென்னையில் 1955 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுகுறித்த பொறியியல் படிப்பில் சேர்ந்தார் பிறகு அந்தப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று அதன் பிறகு அவரது விண்வெளி தொடர்பான ஆய்வுப் பணியில் சேர்ந்தார் தனது பொறியியல் படிப்பினை முடித்தார்.
இவர் 1960 ஆம் ஆண்டு புதுடெல்லியினை தலைமை இடமாகக் கொண்டால் டி ஆர் டி ஓ என்ற வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார் இந்த நிலையில் இவர் இந்திய ராணுவத்திற்காக ஒரு சோதனை ஹெலிகாப்டரைத் தயார் செய்து கொடுத்து அது பலரிடமும் அப்துல் கலாம் அவர்களுக்குப் பாராட்டினை வாங்கி கொடுத்தது பிறகு தனது உழைப்பு மற்றும் திறமையின் காரணமாக அவர் 1969 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சேர்ந்தார் இவர் இங்குச் செயற்கைக்கோள்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை வடிவமைக்கும் பிரிவில் பணியாற்றத் துவங்கினார்.
இவர் தனது சிறப்பான பணி ஈடுபாட்டின் காரணமாக இஸ்ரோவின் எஸ் எல் வி3 என்ற செயற்கைக்கோளினை விண்ணில் ஏவும் ஒரு ராக்கெட்டினை வடிவமைக்கும் குழுவிற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்த ராக்கெட்டை வடிவமைக்கும் காலமே கலாமின் வாழ்வில் பிடித்த நாட்கள் என்று அவரைத் தெரிவித்துள்ளார் அந்த அளவிற்கு விண்வெளி குறித்த ஆய்வினை அவர் விரும்பிச் செய்துள்ளார் இந்த ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கு தயாராக இருந்தபோது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வை இவர்மீது திரும்பியது என்று அது மிகையாகாது எஸ்.எல்.வி3 ஏவுகணை ரோகிணி என்ற செயற்கைக்கோளினை தாங்கி விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது அது மேலும் வரையறுக்கப்பட்ட பாதையில் வெற்றிகரமாகச் சென்று இலக்கினை அடைந்தது இந்த வெற்றி இந்தியாவின் மீது பல நாடுகளின் பார்வை படும் அளவிற்கு உயர்த்தியது அந்த அளவிற்கு உலகம் கண்ட முற்போக்கு சாதனையை நிகழ்த்திக் காட்டினார் அப்துல் கலாம் உலகில் சில பணக்கார நாடுகள் மட்டுமே தங்களது நாட்டினை காப்பாற்ற அணு ஆயுதங்களைத் தயார் செய்து கொள்ளும் ஆனால் அதனைத் தகர்த்து இந்தியாவும் அதனைச் செய்யும் என்று நிரூபித்துக் காட்டினார் அப்துல் கலாம்.
அப்துல் கலாம் 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது சர்வதேச நாடுகளின் அச்சுறுத்தலின் மீறி இவர்கள் இணைந்து அணு ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக வீழ்த்தி இந்தியாவின் வலிமையினை உலகுக்கு நிரூபித்தனர் 2002 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு தனது குடியரசு தலைவரின் பதவியினை பெற்றார் அதிலிருந்து 2007 வரை அதிலிருந்து ஐந்து ஆண்டுகள் தனது குடியரசு தலைவரின் பதவிகளைச் சிறப்பாகச் செயலாற்றி நான் ஒரு விஞ்ஞானி மட்டும் இல்லை சிறந்த தலைமைப் பண்புக் கொண்டவர் என்பதையும் அவரது பதவி காலத்தில் நிரூபித்தார் குடியரசு மாளிகைக்கு மாணவர்களை வரவைத்து அவர்களைச் சந்தித்து உரையாடும் பழக்கத்தினை வைத்திருந்த அவர் ஒரு முறை பார்வை இழந்த மாணவரைச் சந்தித்து உரையாடினார் அந்த அளவிற்கு மாணவர்களும் உரையாடும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அப்துல் கலாமின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் 1981 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா 1997 ஆம் ஆண்டும் அவருக்கு வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு இது மட்டுமல்லாமல் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அவருக்குக் கௌரவம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது அப்துல் கலாம் அவர்கள் சுவிட்சர்லாந் நாட்டிற்கு சென்ற தினமான மே 26 ஆம் தேதியை அறிவியல் தினமாக அறிவித்துப் பெருமைப்படுத்தியது ஸ்விட்சர்லாந்து அரசு அப்துல் கலாமை சுயசரிதை நூலான அக்னி சிறகுகள் இந்திய அளவில் அதிக அளவில் விற்பனையான நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடத்தக்கது இந்தியா 2020 எழுச்சி தீபங்கள் போன்றவை.
அப்துல் கலாம் எழுதிய நூல்களாகும் பொதுவாக நம்முடைய இறப்பு வரும்போது நம் நமக்குப் பிடித்த விஷயத்தினை செய்து கொண்டு இருக்கும்போது இறக்கலாம் என்று நாம் நினைப்பதுண்டு அது போன்று கலாமும் அவருக்குப் பிடித்த விஷயங்களைச் செய்து கொண்டிருக்கும் போதே அவர் இறந்தார் ஜூலை 27 2015 ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தின் சிலாங் நகரில் உள்ள ஒரு கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்ற கலாம் அந்தக் கல்லூரியின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார் இந்திய தேசமே கண்ணீரில் மூழ்கியது இந்திய தூண் சரிந்து விட்டது என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதினர் அதோடு அவர் மறைந்த அன்று இந்திய முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது நாடு முழுவதும் படித்தவர் படிக்காதவர் கிராமம் நகரம் வேறுபாடின்றி தேசமே திரண்டு அஞ்சலி செலுத்தியது ராமேஸ்வரத்தில் நடந்த இறுதி சடங்கு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பேர் நேரில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர் தேசத்திற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு உன்னத தலைவனுக்குத் தேசமே திரண்டு அஞ்சலி செலுத்தியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை மாறாக இந்திய மக்கள் நன்றி உணர்வை வெளிப்பட்டது.
எகிப்து பிரமிடு ரகசியங்கள்
Full Project Download
0 Comments