ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் சாதித்து காட்ட முடியும் எனச் சாதித்து காட்டியவர்கள் ஏராளம் அவர்களுள் உலகமே வியந்து போற்றிடும் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவாள் விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவள் அமெரிக்காவில் காலடி எடுத்து வைப்பதே கனவாக இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு சென்று விண்வெளியில் காலடி வைத்தவள் என்றும் பல பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்றவள் ஒரு சாதாரண பள்ளியில் படித்துப் பலர் வியக்கும் படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்து காட்டியவள் இந்தியாவில் விண்வெளி மங்கை என்றும் விண்வெளி தேவதை என்றும் அழைக்கப்பட்டவள் அவள் தான் விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமை கூறிய கல்பனா சாவ்லா.
கல்பனா சாவ்லாவுக்கு சிறிய வயது முதல் விண்வெளி என்றால் ஆசை பொம்மைகளை வைத்து விளையாடும் வயதில் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது நட்சத்திரங்களை எண்ணுவது விமான ஓவியங்களைத் தீட்டி அழகு பார்ப்பது இதுவே கல்பனாவிற்கு பிடித்தபொழுது போக்காக இருந்தது விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே வீட்டிலிருந்து ஓடி வந்து விமானம் மறையும் வரை கண்களைச் சுருக்கி பார்த்துக் கொண்டே நிற்கும் குழந்தைகளில் ஒருவர்தான் கல்பனா சாவ்லாவும்.
கல்பனா சாவ்லாவிற்கு சிறு வயதிலேயே பைலட்டாக ஆசை ஆனால் அதை வீட்டில் சொன்னபோது அவர்களின் பெற்றோர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்கள் டாக்டர் இன்ஜினியர் அல்லது ஐஏஎஸ் இந்த மூன்றும் தான் கல்பனா சாவ்லாவிற்கு பெற்றோர்கள் கொடுத்த வாய்ப்பு அதில் ஒன்றை தேர்வு செய்து இருந்தால் இன்று நம் அனைவருக்கும் கல்பனா சாவ்லாவை தெரியாமலே பெயர்களாம் ஆனால் விடாமல் தன் கனவுகளைத் துரத்தினார் ஒருநாள் அவற்றைச் சாத்தியமாக்கினார் விண்வெளி கனவை என்னால் மெய்யாக்கி காட்ட முடியும் என்று உறுதியுடனும் லட்சித்துருனும் சாதித்து காட்டியவள்.
இவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கல்பனா சாவ்லாவின் சாதனைகள் இன்று அளவிலும் அனைவராலும் போற்றப்படுகிறது இந்திய அரசு கல்பனா சாவ்லாவின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் வீர தீரச் சாதனைகள் புரிந்த பெண்களுக்குக் கல்பனா சாவ்லா விருது வழங்கிய பெருமைப்படுத்துகிறது.
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற நகரில் பிறந்தார் இவர் பெற்றோர் பனாரஸ் லால் சாவுளாக்கும் சன்யோகிதா தேவிக்கு பஞ்சாப் குடும்பத்தில் பிறந்தவள் இவளுக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும் சஞ்சய் என்ற சகோதரரும் இருந்தனர் கல்பனாவை இந்த குடும்பத்தின் கடைக்குட்டி ஆவால் சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.
ஒருமுறை கல்பனா சாவ்லா தனது தந்தையிடம் ஒருமுறை பிளையிங் கிளப்பிற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டார் பிளையிங் கிளப்பில் கல்பனா சாவ்லா விமானத்தை வியந்து பார்த்ததோடு அதில் பயணம் செய்த பின்பு விமானம் மீதான காதல் கல்பனா சாவ்லா விடம் மேலும் அதிகரித்தது இவ்வாறு தனது தொடக்க கல்வியை கர்ணலில் உள்ள தாகூர் பள்ளியில் தொடர இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜெய் ஆர் பி டாட்டாவை பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் போட்டும் ஆர்வம் மேலும் அதிகரித்தது.
பள்ளி பருவத்திலேயே தான் ஒரு விமானியாக வேண்டும் என்று லட்சியத்தை வளர்த்துக் கொண்டாள் பள்ளியில் முதல் நிலை மாணவியாக திகழ்ந்த கல்பனா சாவ்லா எதிர்காலத்தில் விண்வெளியின் பொறியாளராக வேண்டும் என்று விரும்பினார் அதற்காக ஆராய்ச்சியாளர்கள் சாதனையாளர்கள் வாழ்க்கையின் வரலாற்றை விரும்பி படித்து கற்றுக் கொண்டாள் கல்பனாவின் விருப்பத்திற்கு அவர்களது பெற்றோர்கள் தடை விதிக்க காரணம் அக்காலகட்டத்தில் விமான பொறியியல் என்பது ஆண்கள் மட்டுமே கற்கும் ஒரு பிரிவாக இருந்தது துணிந்து அந்த பிரிவை தேர்ந்தெடுத்த கல்பனாவின் பிரிவாதம் பெற்றோர்களை சம்மதிக்க வைத்தது.
1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாபில் உள்ள பொறியியல் கல்லூரியில் விமான பொறியியல் துறையில் கல்வி பயின்று இளங்கலை பட்டமும் அதன் பின் பல்வேறு தடைகளை தாண்டி மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்றார் ஆகாயத்தைப் பற்றிய கனவு கண்டு கொண்டு இருந்த கல்பனா சாவ்லாவிற்கு விரும்பி அழைத்தது பின்னர் 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெஸ்ட்டாக் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார் பின்னர் 1986 இல் கொலரிடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலை பட்டமும் அங்கேயே தொடர்ந்து பணியாற்றி 1988 ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
தனது கனவை நினைவாக்கிக் கொள்ள கல்வித்துறையில் தொடர்ச்சியாக முன்னாடி கொண்டிருந்த கல்பனா சாவ்லாவிற்கு 1988 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவில் ஆய்வு விஞ்ஞானியாக வாய்ப்புகள் கிடைத்தது இலக்குகளை அடைவதற்காக தான் செல்லும் பாதை சரிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட கல்பனா சாவ்லா அங்கு எளிய மொழியில் விளக்குவதற்கு கடினமான கம்ப்யூடேஸ்னால் ப்ளூயட் டைனமிக்ஸ் இன்னும் படிமுறை தீர்வு மற்றும் என் சார்பகுதிகளில் வழிமுறைகள் மூலம் பாய்ம ஓட்டங்களை ஆராயும் பாய்ம இயக்கவியல் தொடர்பாகவும் செங்குத்தாக குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தர இறங்குதல் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் விமானம் மற்றும் கிரேடர்களை ஓட்ட கற்றுக் கொடுக்க கல்பனா சாவ்லா தகுதி சான்றிதழ் பெற்றார் 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவின் குடியுரிமை கிடைத்ததும் நாசாவின் விண்வெளி வீராங்கனையாக பயிற்சி விண்ணப்ப படிவத்தை அனுப்பி தனது விண்ணப்பத்திற்கு பதில் கிடைப்பதற்கு தாமதமானதால் 1993 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார் அதற்கு அடுத்த ஆண்டு கல்பனா சாவ்லாவின் விண்ணப்பத்திற்கு பதில் கிடைத்தது.
நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பத்தி இருந்த சுமார் மூன்றாயிரம் பேரில் ஆறு பேர் மட்டுமே தேர்வார்கள் அவர்களில் கல்பனா சாவ்லாவும் ஒருவர் அன்று முதல் கல்பனா சாவ்லாவின் விண்வெளி கனவுகள் நினைவாக தொடங்கியது 1995 ஆம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனை ஆக தகுதி பெற்ற கல்பனா சாவ்லா தனது முதல் விண்வெளி பயணத்தை 1997 ஆம் ஆண்டு மேற்கொண்டார் ஆறு வீரர்களுடன் கொலம்பியா விண்வெளி உறுதியான எஸ்டிஎஸ் 87ல் பயணம் செய்வதற்கு தேர்வு செய்யப்பட்ட கல்பனா சாவ்லாவிற்கு அதன் ஆராய்ச்சி குறித்த முக்கிய பொறுப்புகள் தரப்பட்டனர் திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 1997 இல் கல்பனா சாவ்லா உடன் சேர்ந்து ஆறு வீரர்கள் கொண்ட குழு கொலராடாவின் கேப் கிணறல் முனையில் இருந்து நெருப்பை உமிழ்ந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது எஸ் டி எஸ் 87 என்ற விண்கலம் கல்பனா சாவ்லா தனது முதல் பயணத்திலேயே 15 நாட்கள் 12 மணி நேரங்கள் விண்ணில் சுற்றினார் கிட்டத்தட்ட 372 மணி நேரங்கள் அதிகமாக 252 முறைகள் பூமியை சுற்றி கொண்டு இருந்தார் 10 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் பயணத்தில் தரையில் இருந்து கண் சிமிட்டாமல் பார்த்து ரசித்த நட்சத்திரக் கூட்டங்களையும் வானத்தையும் ஒருமித பெருமிதத்தோடு மிக அருகாமையில் சென்று பார்த்தவர் கல்பனா சாவ்ல கிட்டத்தட்ட பதினாறு நாட்கள் பயணத்தின் இறுதியில் டிசம்பர் 5ஆம் தேதி வெற்றியுடனும் பாதுகாப்புடனும் பூமிக்கு திரும்பினர் அந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் இதன் மூலம் விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றால் கல்பனா சாவ்லா.
முதல் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்கு தயாரானார் 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளக்கூடிய இந்த பயணம் பல நுட்ப தொழில்நுட்ப கோளாறுகளினால் காலம் கடத்தப்பட்டது பின்னர் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ் டி எஸ் 107 விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த விண்கலத்தில் இந்தியாவின் வம்சாவளி பெண்ணான கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் பயணித்தனர் விண்ணை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதி உடைந்து விண்கலத்தின் மீது வேகமாக மோதியது இதனால் இறக்கையில் ஏற்பட்ட பெரிய துளை சரி செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டனர் ஆனாலும் அதை சரி செய்ய முடியவில்லை இந்த தகவலை நாசாவிற்கு தெரிவித்தனர் ஆனால் மிகக் குறைந்த நேரத்தில் வேறொரு விண்கலத்தை அனுப்புவது என்பது சாத்தியமற்ற ஒன்றாக நாசாவிற்கு இருந்தது விண்கலத்திற்கு பாதிப்பு பெருசாக இருந்தாலும் கூட விண்கலம் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்தது புவியையும் விண்வெளியையும் கண்காணித்து எண்பது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டனர் மற்றும் விண்வெளி வீரர்கள் உடைய ஆரோக்கியம் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்ல உட்பட ஏழு பேர் பயணித்த கொலம்பியா விண்கலம் எஸ் டி எஸ் 107 திட்டமிட்டபடி பதினாறு நாட்கள் விண்வெளியில் பயணம் செய்த பிறகு பூமிக்கு திரும்பினால் வந்தது பிப்ரவரி 1ஆம் தேதி கொலம்பியா வின்கலம் தரை இறங்குவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது நாசா கென்னடி விண்வெளி மையத்தின் விண்கலம் வழக்கமாக தரையிறங்கும் முறைகள் பின்பற்றப்பட்டன அன்று காலை 9 மணிக்கு சற்று முன்னதாக கட்டுப்பாட்டில் அசாதாரண சூழ்நிலைகள் தென்பட்டன முதலில் விண்கலத்தில் இடது புறம் இறக்கையில் உணர்கருவிகள் செயல் இழந்தனர் பின்னர் இடது புறம் சக்கரத்தில் காற்றழுத்தம் குறைந்து காணப்பட்டது அந்த நேரத்தில் கொலம்பியா விண்கலம் வளிமண்டலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ஒளியின் வேகத்தில் 18 மடங்கு அதிக வேகத்தில் தரையில் இருந்து 61 கிலோமீட்டர் வேகத்தில் தரையை நோக்கி வந்து கொண்டிருந்தது கொலம்பியாவின் களம் சமயத்தில் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திலேயே இருந்து விண்கலத்தில் உள்ளவர்களுக்கு தொடர்பு கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனர் ஆனால் பயன் ஏதும் இல்லை அதே சமயம் விண்கலம் வழி மண்டலத்திற்குள் நுழைந்தது வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காற்றுகள் விண்கலத்தின் இடது புறம் இறக்கைகள் தொலை வழியாக நுழைய இறுதியில் 1500 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகமான வெப்ப காற்று துளையின் வழியாக சென்றதால் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தது பூமியில் தரை இறங்குவதற்கு சரியாக 14 நிமிடங்களை இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் கொலம்பியா விண்கலம் அமெரிக்காவின் டெஸ்ட் டாக்ஸ் மான் பகுதியில் வெடித்து சிதறியது விண்கலத்தோடு அந்த விலைமதிப்பற்ற ஏழு வீரர்களும் வெடித்து சிதறினர் அவர்களது உடல்களை எங்கெங்கோ தேடி இறுதியில் விண்கலத்தின் உடைந்த பாகங்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்டனர் இது உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது உலகமே வியக்கும் அளவில் விண்வெளி துறையில் சாதனை படைத்த கல்பனா சாவ்லா இறப்பு இந்தியாவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது இந்தியாவின் புகழை உலக முழுவதும் கொண்டு சென்றவர்களின் கல்பனா சாவ்லாவும் ஒருவர் இவர் இரண்டு விண்வெளி பயணங்களில் போதும் முப்பது நாட்கள் 16 மணி நேரம் விண்வெளியில் செலவிட்டுள்ளார் முதல் விண்கலத்தின் நிறைவில் நட்சத்திரங்களையும் விண்மீன்களையும் பார்க்கும் போது குறிப்பிட்ட நிலப்பகுதியில் இருந்து பார்ப்பது போல் இருக்காது சூரிய மண்டலத்தில் இருந்து பார்ப்பது போல் இருக்கும் என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் கல்பனா சாவ்லா அன்றைய இந்திய பிரதமர் கொலம்பியா விண்கலத்தில் பயணித்துக் கொண்டிருந்த இந்திய விண்வெளி மங்கை கல்பனா சாவ்லா உட்பட தொடர்பினை ஏற்படுத்தி உங்களால் முழு இந்தியாவும் பெருமை அடைகிறது அது மட்டும் இல்லாமல் தானும் பெருமை கொண்டுள்ளதாக கூறினார் மேலும் உங்களின் மூலம் இந்திய விண்வெளியில் பயணித்திருக்கிறது என்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார் எங்கள் நோக்கம் வெற்றிகரமானது நாங்கள் அனைவரும் நன்றாகவே இருக்கின்றோம் என்பதை கல்பனா சாவ்லாவின் கடைசி வார்த்தைகள் மரணத்தின் வாசலை நெருங்கிக் கொண்டிருப்பது அறியாது தனக்கே உண்டான சிரிப்போடு அன்றைய இந்திய பிரதமரோடு கல்பனா சாவ்லா கடைசியாக பேசிய காணொளி அவருடைய மரணத்திற்குப் பிறகு ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிகம் கண்கலங்க வைத்தது ஒரு சாதாரண பள்ளியில் படித்து பலரும் ஏற்கும் படி தனது கனவுகளை வாக்கி கட்டியவர் கல்பனா சாவ்லா பெண் இனத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தார் என்றால் மிகை ஆகாது கனவுகளை கண்டு அந்த கனவுகளை நினைவாக்குவதற்கு விடா முயற்சியோடும் முழு மனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திச் சென்ற வீர பெண்ணை நாமும் போற்றுவோம் வணக்கம்
Apj Abdul Kalam History
Effect Download
0 Comments