தமிழகத்தையும், தக்காணத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற மௌரியர்களின் படையெடுப்பு, கிமு 293 முதல் 280 வரையிலான காலங்களில் மிகத் தீவிரத்தோடும், மௌரிய பேரரசின் முழு ஆற்றலோடு நடைபெற்றது. தக்காணத்தின் பல பகுதிகள் பிடிக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அப்படடையெடுப்பு என்பது அவர்களுக்குத் தோல்வியில் முடிந்தது என்பது தான் வரலாறு. சங்க இலக்கியங்கள் தரும் செய்தியும் அதுவே. இந்தக் காலகட்டத்தில் சேர, சோழ மன்னர்களை விடவும் பாண்டிய மன்னர்கள் மிகவும் புகழ்பெற்றும் வலிமையுடனும் விளங்கினர்.
பாண்டியர்களின் எல்லைப் பகுதி கொங்கு நாட்டின் எல்லைவரை பரவி இருந்தது. பாண்டிய நாட்டின் எல்லையைப் பகுதியை மோகூர் நாட்டின் பழையன் மாறன் என்பவன் காவல் காத்தும், பாண்டிய மன்னனுக்கு படைத்தலைவனாகவும் செயல்பட்டான். மௌரியர்கள் கலிங்கத்தை வென்ற பின் அவர்களின் பார்வை தென்னாட்டின் மீது இருந்தது. அதனால் தமிழகத்தின் மீது படை எடுக்க முடிவு செய்தனர். மௌரியர்கள் முதலில் வடுகர்கள் துணை கொண்டு துளுவ நாட்டைத் தாக்கி, அந்த நாட்டை ஆண்ட நன்னன் மரபினனை முறியடித்து, அவனது தலைநகர் பாலியைக் கைப்பற்றிக் கொண்டனர். பின்ன அதனை ஒரு வலிமையாக அரணாக மாற்றி அமைத்து அங்கிருந்து, அவர்கள் அதியமான் மரபினர் எளினியையும், சோழ நாட்டின் எல்லையில் உள்ள அமந்தூர் திதியனையும், பாண்டிய நாட்டின் எல்லையில் உள்ள மோகூர் தலைவனையும், படிப்படியாகத் தாக்கத் தொடங்கினர்.
சேர நாட்டின் எல்லையில் இருந்த நன்னனை வீழ்த்தியப் பிறகு, சேர நாட்டைக் குறி வைத்துத் தாக்கத் தொடங்கினர். சேரப் படைத்தலைவன் பிட்டங்க் கொண்ட்றன் மௌரியர்களுடன் பலமுறை போர் புரிகின்றான். போர் வெற்றி, தோல்வி இல்லாமல் தொடர்கிறது. பின்பு அதியமான் மரபினன் எளனி என்பவன் மௌரியர்களை முதலில் வட்டாரி என்ற இடத்திலும், அதன்பின் செல்லூர் என்ற இடத்திலும் எதிர் தாக்குதல் நடத்துகின்றான். இறுதியில் செல்லூர் போரில் எழினி வீர மரணம் அடைந்து பெரும் புகழ் அடைகிறான். அதன் பின்னரும் அதியமான் மரபினர் மௌரியர்களை எதிர்த்து இறுதி வரை தாக்குதல் நடத்தினார்கள். இந்நிலையில் சோழ நாட்டின் எல்லையில் உள்ள அமர்ந்தூர் திதியனும், பாண்டிய நாட்டின் எல்லையில் உள்ள மோகூர் தலைவனும், இருவரும் சேர்ந்து மௌரியர்களை எதிர்த்து எதிர்த்தாக்குதல் நடத்துகிறார்கள்.
ஆனால் கோசலர்களின் உதவவியால் மௌரியர்கள் பெரும்பலத்துடன் தாக்கத் தொடங்கினார்கள். இறுதியில் திதியனும், மோகூர் தலைவனும் போரில் மௌரியர்களை தோற்கடித்து விரட்டி அடிக்கின்றனர். அதன் பின்பு மௌரிய படை பின்வாங்கித் துளுவ நாட்டை அடைந்து, பாலி நகரில் நிலை கொள்கிறது. இந்தப் போரைப் பொறுத்தவரை, மௌரியப் பேரரசின் படை முழுமையாக இந்தப் போரில் ஈடுபடவில்லை. அதன் தென்பகுதி தலைவர்களான வடுகர்கள் துணை கொண்டு மௌரியர்கள் போரை நடத்தி வந்தார்கள். தமிழக எல்லையில் ஏற்பட்ட பெருந் தோல்வி மௌரியப் பேரரசைக் கொந்தளிக்க செய்தது. உடனடியாகப் பெரும் படை திரட்டப்பட்டது. முதலில் துளுவ நாட்டையும், எருமை நாட்டு கடந்து வரும் வழியில் உள்ள பாறைகள் அனைத்தையும் வெட்டி, மௌரிய படைகள் வருவதற்கான செப்பணிகள் அமைத்து மௌரியப் படைகள் வருவதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றது. இந்தப் பெரும் போருக்கான ஆயத்தப் பணிகள் சில ஆண்டுகள் நடைபெற்றதாகத் தெரிகிறது. இப்பறைகளை வெட்டிப் பாதை அமைப்பதற்கான பணி குறித்தும் மோகூர் தலைவன் பணியாதது குறித்தும், வடுகர்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாக இருந்து மௌரியர்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள் என்று சங்க காலப் புலவர்கள் அனைவரும் தங்கள் பாடல்களில் பாடி இருக்கிறார்கள். இந்தப் பெரும் போருக்கான ஆயத்தப் பணிகள், முடிந்த பிறகு மௌரியப் பேரரசின் பெரும்படை, துளுவ நாட்டில் தங்கி தமிழகத்தின் மீது படையெடுக்கத் தயாராக இருந்தது.
தமிழகத்துக்கு வந்த ஆபத்தைச் சோழஅரசன் இளைஞட் சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான். எல்லையில் உள்ள படைத்தலைவர்களான வேளீர்கள் மற்றும் சிற்றர்களின் மட்டும் நம்பி, இப்பெரும் போருக்குப் பொறுப்பாக்குவது ஆபத்து என்று எண்ணி, தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் படையை ஒன்று திரட்டி, தனது தலைமையின் கீழ் பெரும்படையை திரட்டுகிறான். தமிழக ஒன்றிய அரசின் சார்பாகப் பாண்டியப் படைகளும், சேரப் படைகளும், சோழ மன்னன் இளைஞட் சென்னியின் கீழ் அணிவகுத்து நிற்கின்றனர். இப்போர் தமிழக அரசின் கூட்டணி போராக நடைபெற்ற போதிலும், இப்போரின் வெற்றி சோழர்களின் வெற்றியாகவே, வடவர் இடத்திலும், நமது இலக்கியங்களிலும், புராணங்களிலும் பதிவாகி சேர, பாண்டியர்களைவிட சோழர்கள் பெரும் புகழ் அடைகின்றனர். தமிழக கூட்டணி அரசுக்கும், மௌரியப் பேரரசுக்கும் இடையே ஒரு பெரும் தொடங்குகிறது. மௌரியப் பேரரசு சோழ நாட்டில் பல முறை தோல்வி அடைகிறது. எனினும் தொடர்ந்து புதுப்புது படைகளைப் போருக்கு அனுப்பினார்கள். தமிழகத்தின் வட பகுதி முழுவதும் மௌரிய படைகளால் தாக்கப்பட்டது. படம் ஆற்காட்டில் வல்லம் என்ற இடத்தில் நடைபெற்ற பெரும் போரில் சோழ மன்னன் இளைஞட் சென்னி மௌரியர்களை பெரும் தோல்வியடைச் செய்து துரத்தி அடித்தான். அதன் பின்னரும் மௌரியர்கள் சளைக்காமல் தொடர்ந்து பல படைகளை அனுப்பி கொண்டே இருந்தார்கள். ஆனால் போரில் பெரும் இழப்புகள் ஏற்பட்டதே தவிர, அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத் தெரியவில்லை.
இறுதியில் தொடர்ந்து அடைந்து வந்த தோல்விகளால் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர்கள், பெரும் இழப்போடு பாலி நகருக்கு பின் வாங்கினர். இளைஞர் சென்னை தொடர்ந்து போரை நடத்தி பாலி நகருக்குச் சென்று, அங்கேயும் போரிட்டும் அவர்களை விரட்டியடித்தான். இதன் காரணமாகவே செரும் பாலியறிந்த இளைஞட் சென்னி என்று புகழப்பட்டான். அதோடு மட்டுமல்லாமல் மௌரியர்களை கலிங்கம் வரை விரட்டிச் சென்று, அவர்களோடு போரிட்டு அவர்கள் எல்லைக்குள்ளே விரட்டி அடித்தான் சோழ மன்னன். கலிங்க நாட்டைக் கலிங்க மன்னனிடம் ஒப்படைத்துவிட்டு, இறுதியில் பெரும் வெற்றியை மட்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்தான். இந்த இறுதிப் போருக்குப் பின்பு, மௌரிய பேரரசு தமிழக அரசைப் போர் கண்டு வெற்றி கொள்ள இயலாது என்று தெரிந்து கொண்டு, மொத்தமாகப் பின் வாங்கினர். தமிழக அரசோடு நட்புறவு கொண்டு நல்ல முறையில் பழகினர். இதன் காரணமாகவே பிந்துசாரன், தனது கல்வெட்டில் ஒட்டுமொத்த இந்தியாவையும் கைப்பற்றிய எங்களால், தமிழகத்திற்குள் மட்டும் நுழைய முடியவில்லை. அதற்குக் காரணம் சேர, சோழ, பாண்டியர்கள் என்று குறிப்பிட்டார். அதிலும் முக்கிய காரணம் சோழர்கள் என்று சோழர்களை மிகைப்படுத்தி காட்டினார். 6 வகுப்பு முதல் 12 வகுப்புவரை வரலாற்றில் எந்த வகுப்பிலும், எந்தப் பாடத்திலும், இந்தப் போர்பற்றிய விவரங்கள் இருக்காது. இந்தப் போர் நம் தமிழர்களின் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டு இருக்கிறது.
ராஜாராம் மோகன்ராய் சமூக சீர்திருத்தங்கள்
Beatmark Download
Effect Download
0 Comments