கரிகால சோழன். ஒரு அரசனைப் பற்றி, அவனது வீரத்தைப் பற்றி, அவனது ஆட்சியைப் பற்றி, அவனது அதிகாரத்தைப் பற்றி, யாராவது ஒன்று, இரண்டு புலவர்கள் கூறினால் பரவாயில்லை. சிலப்பதிகாரம், பெருநராற்றுப்படை, பட்டினப்பாலை, எட்டுத்தொகை நூல்களில் சில நூல்கள், கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம் ஆகிய பல நூல்களில் ஒரு அரசனைப் பற்றிப் புகழ்ந்து, புகழ்ந்து பாடினார்கள் என்றால் அவனது வீரத்தை, இந்த உலகத்திற்கு தெரியப்படுத்தியே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன், பல பாடல்களை அவர்கள் அமைத்தார்கள் என்றால், அதன் அத்தனை பெருமையும் இவர் ஒருவரையே சாரும்.
இவருடைய புகழ் அந்தக் காலத்தில் எந்த அளவிற்கு பெரியது என்றால், கிபி 14ஆம் நூற்றாண்டுவரை பொத்தப்பி, சித்தூர், நெல்லூர் ஆகிய பகுதிகளை ஆண்ட தெலுங்கு வம்சத்தை சேர்ந்த சோழர்கள், நாங்கள் இந்த அரசரின் மரபு என்று தங்களின் கல்வெட்டுகளில் மகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்ல, கன்னட நாட்டிலும் சிற்றரசர்கள் பலர், என்னுடைய முன்னோர்களின் மரபும் இந்தப் பேரரசரின் மரபு வழி என்று மிகவும் மகிழ்ச்சியாகத் தங்களுடைய கல்வெட்டுகளில் மகிழ்ச்சியாகக் குறித்து வைத்திருக்கிறார்கள். பிற்காலச் சோழர்களாகிய விஜயாலய சோழனும், தன்னுடைய செப்பு பட்டயங்களிலும், கல்வெட்டுகளிலும் இந்தப் பேரரசனைப் பற்றிப் புகழ்ந்து, புகழ்ந்து, மகிழ்ந்து, மகிழ்ந்து பெருமையாகக் குறிப்பிட்டு வைத்திருக்கிறார். இவ்வாறு பல புலவர்கள் தங்கள் பாடல்கள் வழியாகவும் பல நாட்டு அரசர்கள் தாங்கள் இவர்கள் மரபு தான் என்று மிகவும் மகிழ்ச்சியாகப் பெருமையாக இந்தப் பேரரசரை பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தன்னுடைய வீர செயல்களால், தன்னுடைய பெரும் திறமையால், தன்னுடைய மதிநுட்பத்தால் ஒரு சிறிய அரசாக இருந்த சோழப்பேரரசை, மிகப்பெரிய ஒரு பேரரசாக மாற்றிய ஒரு அரசன். இன்று வரலாற்றில் நாம் மிகவும் புகழ்ந்து, புகழ்ந்து பேசும் சோழ மன்னர்கள் அனைவரும் இவரின் வீரத்திற்கு முன்பு, சிறு பிள்ளைகளாகத் தெரிவார்கள். இத்தனை புகழுக்கும், அந்த ஆளுமைக்கும் சொந்தக்காரன் யார், அந்த அரசன் யார், ஆம் இவர் தான் திருமாவளவன், பெருவளத்தான் என்று அழைக்கப்பட்ட கரிகால சோழன். முதலாம் கரிகாலருக்குப் பிறகு, இரண்டு, மூன்று தலைமுறைகள் கழித்து பிறந்தவர்தான் இரண்டாம் கரிகாலச் சோழன் என்று அழைக்கப்பட்ட திருமாவளவன். இவர் இளைஞட் சென்னி என்னும் மன்னனின் மகன் ஆவார். இவர் பல அழகிய தேர்களை உடைய மன்னர். இவர் அந்த அழகிய தேர்களை வைத்துப் பல அரசர்களை, பல போர்களில் வென்றுள்ளார். அந்த மாவீரரின் மகன் தான் இந்தக் கரிகாலன்.
இவருடைய தந்தை ஒரு அரசன் அல்ல, அரசனுக்கு இளையவர், அரசர் ஆகாமலே காலம் கழித்தவர் இருந்தாலும், அவர் ஒரு மாவீரன். அவர் ஒரு சமயத்தில் நோய்வாய்பட்டுப் படுக்கையில் படுத்து இருக்கும்பொழுது, அவரது மனதில் ஒரே ஒரு கவலை மட்டும் தான் குடி கொண்டிருந்தது. அவராலும் அரசராக முடியவில்லை. அவருடைய அண்ணனும் அரசராக இருந்து இறந்து விட்டார். இப்பொழுது, அந்த நாட்டிற்கு அரசன் இல்லை. தான் இறந்த பிறகு, இந்த நாட்டைக் காப்பாற்ற போவது யார், சோழ நாட்டு காப்பாற்றப் போவது யார் என்ற கவலை மட்டுமே அவருடைய மனதில் குடி கொண்டு இருந்தது. அந்தச் சமயத்தில் அவருடைய மனைவியும் கருவுற்றிருந்தால். பிறக்கப் போவது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று தெரியாது. அந்தக் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் தான் இந்த நாட்டை ஆள முடியும். அதுவும் சாதாரண காரியமில்லை. எந்த ஒரு அரசனும் இல்லாமல், ஒரு குழந்தை பிறந்து அவனை எதிரி நாட்டு மக்களிடமிருந்து பாதுகாத்து, நல்லபடியாக வளர்த்தபிறகு அவனை அரசனாக முடியும். இப்படியொரு சூழ்நிலையில் தான் வரலாற்றில் பேரும், புகழும் வாய்ந்த அந்தக் கரிகால வலவன் பிறக்க வேண்டி இருந்தது.
இந்த இளைஞட் சென்னி மன்னனின் மனைவி கருவுற்றிருந்த செய்தி அந்த நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்த அரசன் இந்தக் குழந்தையைத் தான் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அந்தக் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்றும், சோழ நாட்டு மக்கள் அனைவரும் வேண்டிக் கொண்டார்கள். அதேசமயம் அந்தப் பெண்ணிற்கு எதிரிகளின் வழியாகப் பல தீங்குகள் ஏற்படலாம் என்று எண்ணி, இளைஞட் சென்னி மனைவியின் அண்ணன் இடும்பிடார் தலையார் அவர்கள் ஒரு பெரும் புலவர். மதுரை சங்கத்து புலவர்களில் அவரும் ஒருவர். அது மட்டுமில்லாமல் அவர் தான் அந்த அரசியின் சகோதரர். அவருடைய பாதுகாப்பில் அரசியார் வேறொரு ஊருக்குச் சென்றார். அதே சமயத்தில் இளைஞட் சென்னியும் இறந்தார். இந்தக் காலகட்டத்தில் அரசியாரைப் பத்திரமாகப் பாதுகாத்து, கரிகால சோழன் பிறக்கும் வரை அவர்களை நல்ல முறையில் பார்த்துக் கொண்டது அரசியாரின் அண்ணன் இடும்பிரார் தலையார்.
கரிகாலச்சோழன் பிறக்கும் காலமும் வந்தது. இந்த இடும்பிரர் தலையார் ஒரு சிறந்த ஜோதிடர். ஆகக் கரிகால சோழன் பிறக்கும் அந்தக் காலம், நேரம் மிகவும் நல்ல நாளாக, நல்ல நேரமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். அரசிக்குப் பிரசவ காலம் நெருங்கியது. இடும்படார் தலையார் ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கத்தை பார்த்துக் கொண்டே வந்தார். கெட்ட நேரத்தில் இந்தக் குழந்தை பிறந்து விடக் கூடாது என்ற பயம் அவருக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. அதே நேரத்தில் இந்தக் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்றும் எண்ணிக்கொண்டே இருந்தார். அந்த அந்த நேரத்தில் அரசிக்குப் பிரசவ வேதனை வந்து விட்டது. அரசிக்குப் பிரசவம் பார்க்கும் மருத்துவர்களைப் பார்த்து, இன்னும் மூன்று நாழிகைகள் கழித்து இந்தக் குழந்தை பிறந்தால், ராஜ யோகத்தோடு வாழ்வான். பெரும் புகழோடு இருப்பான். இளமையில் பல இன்னல்கள், சோதனைகள் வந்தாலும், அதன் பிறகு யாராலும் வெல்ல முடியாத ஒரு மாவீரனாக மாறுவான். பல நாடுகள் அவனுக்கு உரிமையாகும். நல்ல பலன்களும் அவனுக்குக் கிடைக்கும். அவனால் இந்த நாட்டு மக்களுக்கும் கிடைக்கும். ஆகவே, மூன்று நாளிகைக்குப் பின் பிறக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் சொல்லி அனுப்பினார். அந்த அரசி 3 நாழிகைகள் அந்தப் பிரசவ வேதனையை அனுபவித்து இரண்டு கால்களையும் மேலே தூக்கி, வலியைப் பொருத்திருந்து, அந்தப் பிரசவத்தைத் தாமதித்தார்.
இரும்பிடார் தலையார் எண்ணியது போல ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆம், அவர்தான் திருமாவளவன், பெருவளத்தான், கரிகால சோழன் என்று அழைக்கப்பட்ட அந்தப் பேரரசன். குழந்தை நல்லபடியாகப் பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தையும் அந்த அரசியும் அந்த நாட்டில் இருக்கவில்லை. எதிரிகளுக்குப் பயந்து அவர்கள் வேறொரு நாட்டில் தஞ்சம் அடைந்து இருந்தார்கள். அந்த நாட்டிலிருந்து அந்தக் குழந்தையை வளர்த்தார்கள். சோழ நாட்டின் சக்கரவர்த்தியாக இருக்க வேண்டிய அந்தக் குழந்தை இப்பொழுது ஊர் தெரியாமல், நாடு தெரியாமல் அந்த நாட்டில் வளர்ந்து வந்தது. அரசிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி காவிரிப் பூம்பட்டினத்தில் உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அப்போது அங்கே ஆட்சியை நடத்தி வந்த அமைச்சர்களும், ஒரு சில சான்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அவர்கள் அனைவரும் இந்தப் புலவரிடம் இந்தக் குழந்தையை எப்படியாவது எதிரிகளிடமிருந்து பாதுகாத்து, நல்ல முறையில் பராமரித்து, வளர்த்து வாருங்கள்.
ஒரு குறிப்பிட்ட காலம் வரும்பொழுது தக்க சமயத்தில் இந்தக் குழந்தையை மக்களுக்கு அறிமுகப்படுத்தி மன்னனாக முடி சூட்டி வைப்போம். அதுவரை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை தான் என்று புலவரிடம் அந்த அமைச்சர்களும், சான்றோர்களும் கூறினார்கள். இரும்பிடார் தலையாரும் அந்தக் குழந்தையை நன்றாக வளர்த்து வந்தார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அந்தப் புலவர் தன்னுடைய அந்தக் குழந்தை வைத்துக் கொண்டார். அதன் பிறகு தான் ஐந்து வயதில் அந்தக் குழந்தையை மன்னனாக முடி சூட்டினார். கரிகால சோழன் தன் வாழ்நாளில் ஒரு போரில் கூடத் தோல்வியைச் சந்திக்கவில்லை. இவர் இமயமலை வரை படையெடுத்துச் சென்று புலிக்கொடியை நட்டினார்.
கரிகாலச்சோழன் தன் நாட்டின் மீது படையெடுத்து வருகிறார்கள் என்றால், இவரைப் பற்றித் தெரிந்த அனைத்து மன்னர்களும் தன் நாட்டை விட்டே பயந்து ஓடி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படைபலமும், வீரமும் இருந்தது. சில மன்னர்கள் சமாதானமாகத் தங்கள் நாட்டை அவர்கள் அவரிடம் ஒப்படைத்து விட்டு அவர் பேச்சைக் கேட்கும் விசுவசிகளாக இருப்பார்கள். கல்லணையைக் கட்டியதும் இந்தக் கரிகாலச் சோழன் தான். எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத, அந்தக் காலகட்டத்தில் மிகவும் நேர்த்தியாக, மிகவும் தொழில்நுட்பத்துடன், நுண் அறிவுடன் செயல்பட்டு அந்தக் காலகட்டத்திலேயே இந்தக் கல்லினை கட்டி இருக்கிறார். இன்றளவும் கூடப் பல உள்நாட்டு, வெளிநாட்டு விஞ்ஞானிகள் இந்தக் கல்லணை எப்படி கட்டியிருப்பார்கள் என்று மிகுந்த வியப்பில் தான் இருக்கிறார்கள். இவர் 83 வயது வரை வாழ்ந்தார். சோழ மன்னர்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த, புகழ் வாய்ந்த ஒரு மன்னர் என்றால், நம் நினைவுக்கு முதலில் வரும் பெயர் இவர் பெயர் தான். நாம் அனைவரும் சோழ அரசர்கள் என்றால், மற்ற மன்னர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவோம். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு குரு இடத்தில் உள்ள மன்னர் என்றால் அது இவர் தான். அவர்களெல்லாம் இவரின் முன்னால் வீரத்திற்கும், விவேகத்திற்கும், ஆட்சி திறமைக்கும், அறிவுத் திறனுக்கும், நுண்ணறிவுக்கும், ஆளுமைக்கும், அதிகாரத்திற்கும், படை பலத்திற்கும் முன்னால் சிறு பிள்ளைகளாகத் தான் தெரிவார்கள். இந்த வையகம் இருக்கும் வரை கரிகாலச் சோழனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். என்றும் கரிகால சோழனின் புகழ் ஓங்குக. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.
மூவேந்தர் வரலாறு
Effect Download
0 Comments