அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு கட்டுரை | அம்பேத்கர் சாதனைகள்

 எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கின்றானோ யார் ஒருவன் பொது விமர்சனத்திற்கு அச்சப்படாமல் இருக்கிறானோ அடுத்தவன் கை பாகையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்றிருக்கிறானோ அவனை சுதந்திரமான மனிதன் என்பேன் இது டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உதித்த பொன்மொழிகள் இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மக்களாட்சியினை கொண்டு வர பல தலைவர்கள் விரும்பினர் ஆனால் மக்களாட்சிக்கு மாறும்போது மன்னர் ஆட்சியில் இருந்த சட்டங்கள் செயல்படுத்த முடியாது அதற்கு முறையாக அரசியல் சாசனம் வேண்டும் இந்திய மண்ணில் அரசியல் சாசனத்தினை எழுத நினைத்த அவர்களுக்கு முதலில் தோன்றிய பெயர் அம்பேத்கர்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று உயர் கல்வியினை பயின்ற முதல் இந்தியர் டாக்டர் அம்பேத்கர் தான் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இவர் ஒரு சமூக சீர்திருத்த வாதியாக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும் அரசியல் தத்துவ மேதையாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் பகுத்தறிவு மற்றும் சிந்தனையாளராகவும் சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும் வரலாற்றின் ஆசனாகவும் விளங்கியவர் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து தன்னுடைய வாழ்வில் சந்தித்த கசப்பான அனுபவத்தால் கடும் போராட்டத்திற்கு மத்தியில் முன்னேறி உயர் நிலையை அடைந்தவர் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் வாருங்கள் அந்த மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் பிறப்பு மற்றும் பெற்றோர் பெயர்;


டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மத்திய பிரதேசத்தில் உள்ள மாவ் என்னும் இடத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் பீமாபாய் இவர்களுக்கு 16வது குழந்தையாக 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் பிறந்தார் அம்பேத்கர் இருக்கு அவர் பெற்றோர் வைத்த பெயர் பீமாராவ் ராம்ஜி இவர்கள் மகர என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களாக இருந்தனர் அம்பேத்கரின் தந்தை ஆங்கிலேயரின் ராணுவத்தின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் அவர் வசித்த மாவ் பகுதி ராணுவ தலைமை இடமாக செயல்பட்டு வந்தது எனவே அம்பேத்கருக்கு ராணுவத்துடன் ஆரம்ப காலத்தில் நல்ல தொடர்பு இருந்து வந்துள்ளது.


டாக்டர் பி ஆர் அம்பேத்கார் அவர்களின் பள்ளிப்பருவத்தில் அவருக்கு ஏற்பட்ட இன்னல்கள்;


அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்தவர் என்பதால் சிறுவயதில் முதலில் பள்ளிகளில் சந்தித்த சில இன்னல்கள் அதிகம் என்றே கூற வேண்டும் இவர் பள்ளிகளில் மற்ற மாணவர்கள் கூட அமரக்கூடாது அவர்களுடன் பேசுவோம் விளையாடவோ கூடாது அது மட்டும் இல்லாமல் நீர் அருந்தினர் கூட அவர்களுக்கு என்று தனியாக வைக்கப்பட்டுள்ள பானையில் இருந்து தான் நீரினை அருந்த வேண்டும் இவ்வளவு இன்னல்களையும் கடந்து தனது கல்விக்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு தனது ஆரம்பக் கல்வியினை முடித்தார் இவரது தந்தையின் பணியிடம் மாற்றம் காரணமாக இவர்களது குடும்பம் மும்பை நகரத்திற்கு குடி பெயர்ந்தது மும்பையில் இவர் தனது உயர் கல்வியினை தொடர்ந்தார்.


அம்பேத்கர் பெயர் காரணம்;


இவர் பள்ளிகளில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும்போது மகாதேவ் அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர் அவர் மீது மிகுந்த அன்பினை காட்டினார் அந்த அன்பின் அடையாளமாக தனது பீமாராவ் ராம்ஜி என்ற தனது பேருக்கு பின்னர் தனது குருவின் ஞாபகமாக அவருக்கு அளிக்கும் மரியாதையாக தனது பெயருக்கு பின் அம்பேத்கர் என்று சேர்த்துக் கொண்டார் அதன் முதல் இவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆனார் பின்னார் அவரது பெயரினை கூறாமல் அவரை அனைவரும் அம்பேத்கர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.


அம்பேத்கரின் உயர்நிலைப் பள்ளி படிப்பு முடித்தது;


1904 ஆம் ஆண்டு எல் பி இன்ஸ்டன்ட் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியினை தொடர்ந்தார் குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியினை விடாமல் தொடர்ந்து அவர் 1907ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார் அப்போது தீண்ட தகாத மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது அதற்காக அம்பேத்கருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது பிறகு பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை தொடர்ந்தார் அம்பேத்கர் அவர் 1912இல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.


அம்பேத்கர் படிப்பு மற்றும் பணியாற்றியது;


சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படையின் தலைவராகவும் பணியாற்றினார் கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர் பரோடா மன்னரின் கல்வியின் உதவியின் மூலம் அரசியல் மற்றும் பொருளாதாரம் பிரிவில் இளங்கலை படிப்பு படித்தார் அங்கும் அவரை அவரது சாதிப் பிரச்சனை தொடர்ந்து ஆனால் அதையெல்லாம் பொருள்படுத்தாமல் அங்கும் ஒரு நல்ல ஆசிரியரின் உதவியுடன் தனது இளங்கலை பட்டத்தினை பெற்றார் இளங்கலை படிப்பை முடித்த அம்பேத்கர் பரோடா மன்னரின் அழைப்புக்கு இணங்கி அவரது அரண்மனையில் படைத்தலைவராக பணியாற்றினார் அங்கும் ஜாதி கொடுமையினை அனுபவித்தார் மற்ற படை தலைவர்கள் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர் என்று குத்தி காட்ட தனது வேலையினை கைவிட்டு மீண்டும் மும்பைக்கு சென்றார்.


மும்பை திரும்பிய அவரை அவரது வீட்டில் சந்தித்த பரோடா மன்னர் அவருக்கு ஏற்பட்ட இன்னல்களை அறிந்தார் அதன் பின்பு அம்பேத்கரின் கல்வி அறிவினை நன்கு அறிந்த மன்னர் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பது என்று முடிவெடுத்தார் பரோடா மன்னரின் உதவியுடன் முதுகலை படிப்பிற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சென்று படிக்க அமெரிக்க விற்கு சென்றார் உயர் கல்வி படிப்பிற்காக ஒரு இந்தியர் அமெரிக்காவிற்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும் அங்கும் தனது சிறப்பான படிப்பை தொடர்ந்த அவர் அரசியல் பொருளாதாரம் தத்துவம் மற்றும் சட்டம் போன்றவற்றை முதுகலை பட்டங்களை பெற்றார் அதன் பிறகு பரோடா மன்னரின் படைத்துறை தலைவராக துணையாற்றினார் அங்கிருந்து மும்பைக்கு இந்திய அம்பேத்கர் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கத் தொடங்கியதுடன் பத்திரங்களில் அறிவுரை வழங்க ஒரு நிறுவனத்தையும் தொடங்கினார் இதில் பல வாடிக்கையாளர்கள் ஒரு தீதகாதவனின் அறிவுரையினை ஏற்க முடியாது என்று அவரிடம் வர மறுத்துவிட்டனர் ஆசிரியர் பணியத் துறந்த அவரின் உரையைக் கேட்க பல மாணவர்கள் வந்தனர்.


அம்பேத்கர் சாதனைகள்;


1921 ஆம் ஆண்டு தொழில் முறை பொருளாதார அறிஞராக பணியாற்றி மூன்று புத்தகங்களை வெளியிட்டார் 1923 ஆம் ஆண்டு வழக்கறிஞரின் சங்கத்தில் சேர்க்கப்பட்டாலும் வாதிடும் தொழிலுக்கு தீண்டாமை தண்டையாக இருந்தது 1927 ஆம் ஆண்டு பகிஸ்கரிக் பாரத் என்ற இதழை தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக எழுதி வந்தார் அம்பேத்கர் அதே ஆண்டு தீண்டாமைக்கு எதிராக போராடத் துவங்கினார் பொது கிணற்று நீர் எடுப்பது கோவில்களில் அனுமதியை மறுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்.


டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மற்றும் முதலாவது வட்டமேசை மாநாடு;


1930 இல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்படுகையில் மக்களுக்கு என்ன நியாயமாக கிடைக்க வேண்டுமோ அதற்காக போராடுவேன் அதே சமயத்தில் சுயராஜ் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்று கூறிச் சென்றார் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது அந்நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையையும் விகிதச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் கடுமையாக வலியுறுத்தியின்றார்.


இரண்டாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற இடம்;


1932 ஆம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாடு லண்டனில் நடத்தப்பட்டது அதற்கு அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது அதில் தாழ்த்தப்பட்டோருக்கு தனி உரிமை வேண்டும் என கூறினார் அதனை காந்தி எதிர்த்தார் இதன் விளைவாக செப்டம்பர் 24 1932இல் காந்திஜிக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டனர்.


அம்பேத்கர் சிறப்பு பெயர்கள்;


1935 ஆம் ஆண்டு அரசு சட்ட கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார் இந்த பதவியில் இரண்டு ஆண்டு காலம் இருந்தார் பின்பு சுதந்திர தொழிலாளர் கட்சியினை நிறுவினார் இந்த கட்சியை 1937 ஆம் ஆண்டு மும்பை தேர்தலில் 14 இடங்களை வென்றது யார் இந்த தூத்திரர்கள் என்ற புத்தகம் ஒன்றை எழுதினார் அதை சாதிய ஒடுக்குமுறை தீண்டாமை குறித்து கடுமையாக எழுதினார் ஆகஸ்ட் 15 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலை பெற்ற பிறகு காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவி ஏற்றும் கொள்ளும்படி அழைத்தது அதன் பெயரில் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார் நவம்பர் 26 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறு குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரவை ஒப்படைத்தது அரசியல் அமைப்பு வரைவுக்கு ஒப்புதல் அறிவிக்கப்பட்டது 1950 ஜனவரி 26 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது அம்பேத்கர் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பல வகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் இது சிறந்த சமூக ஆவணம் என்ற ஆசிரியர்களால் தோற்றப்பட்டது 1951 ஆம் ஆண்டு நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகினார் பின்பு அடுத்த தேர்தலில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் அதில் தோற்றத்தை அடுத்து மாநிலங்கள் அவையில் நியமிக்கப்பட்டார் அவர் இறக்கும் வரை அந்த பொறுப்பில் பொறுப்பை மற்றும் வகித்து வந்தார்.


1906 ஆம் ஆண்டு அம்பேத்கருக்கு 15 வயது இருக்கும் போது அம்பது வயது ராமபாய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது ராமாபாய் 1935 ஆம் ஆண்டு இறந்தார் பின்னர் 1948 ஆம் ஆண்டு சாரதா கவிதா என்னும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்தின்போது அம்பேத்கருக்கு வயது 57 சாரதாவிற்கு வயது 31 தனது சமூகப் போராட்டத்திற்கு இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதியா அவர் பௌத்த சமயக் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு பௌத்த சமயத்தின் மீது தனது கவனத்தை செலுத்தினார் இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர் உலக பௌத்த சமயம் மாநாடுகளிலும் கலந்து கொண்டார் 1955 ஆம் ஆண்டு பாரதிய பௌத்த மகா சபையை தோற்றுவித்தார் 1956 இல் புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதினார் பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக் கொண்டார் தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கு அம்பேத்கர் நம்பிய சில வழிகள் கல்வி அரசியல் அதிகாரம் கைப்பற்றுதல் சம வாய்ப்புகளை உருவாக்குதல் மதமாற்றம் ஆகியவை அவர் கற்பி ஒன்றுசேர் போராடு என்று சொன்னதில் உள்ள கல்வி என்பது வெறுமனே பொருளாதார ரீதியாக சேர்வதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் கல்வி மற்றும் அரசியல் கல்விகளை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் ஒரு அடிமைக்கு அவனின் அடிமை என்கின்ற கிளர்ந்து எழுந்து போராடுவான் என்றார் பெண்களும் இப்படித்தான் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்பதை பெரும்பாலான பெண்கள் ஒப்புக் கொள்வதில்லை இந்த வகையில் தாழ்த்தப்பட்ட நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றுதான் இதை உணர்ந்து கொண்ட அம்பேத்கர் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் விதவை திருமணம் மறுப்பு குழந்தை திருமணம் ஆகிய பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு சாதி தீண்டாமை ஆகிவிட்டிருக்கும் உள்ள உறவு குறித்தும் விரிவாக ஆராய்ந்து எழுதினார் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது அம்பேத்கர் கொண்டு வந்த இந்த சட்ட மசோதாவில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருந்தனர்.


அம்பேத்கர் புரட்சி வரிகள்;


காங்கிரஸில் இருந்தவர்களின் எதிர்ப்பால் அந்த மசோதா கை வராமல் போனது அம்பேத்கரும் பதவி விலகினார் பதவி விலகிய பொழுது அம்பேத்கரின் ஆட்சியின் உரை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய ஒன்று அம்பேத்கர் ஜனநாயகம் என்று அம்சத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் அரசியலில் மட்டும் ஜனநாயகம் இருந்தால் போதாது சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் சுருக்கமாக சொல்லப்போனால் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான் எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள் எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள் எனக்கு மேலே ஒருவரும் இல்லை எனக்கு கீழேயும் ஒருவரும் இல்லை என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள் என்பதுதான் அது.


அம்பேத்கர் இறப்பு;


நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு 1955இல் உடல் நலம் மோசம் அடைய தொடங்கியது தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது உயிர் நீத்த பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால் பௌத்த சமயம் முறைப்படி இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது இவரது மரணத்திற்கு பின் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.


அம்பேத்கரின் சில பொன்மொழிகளை பார்க்கலாம்;


ஒரு லட்சியத்தினை மேற்கொள்ளுங்கள் அதனை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள் ஆடுகளைத் தான் கோவில் முன்னால் வெட்டுகின்றார்களோ உடைய சிங்கங்களை அல்ல ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களைப் போன்று சீர் கொண்டு இருங்கள் நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று முதல் தெய்வம் அறிவு இரண்டாம் தெய்வம் சுயமரியாதை மூன்றாவது தெய்வம் நன்னடத்தை சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவரை உயர்ந்த மனிதர் வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையை செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்ட விட்டாலும் கவலை வேண்டாம் நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் பொழுது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்.


ரவீந்திரநாத் தாகூர் கல்வி சிந்தனைகள்


Beatmark Download


Beatmark 2 Download



Post a Comment

0 Comments