முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன் வாழ்க்கை வரலாறு

இன்று நாம், இந்தப் பதிவில் முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்தியாவில் வேறு எந்த ஒரு மன்னர் குலத்திற்கும் இல்லாத, ஒரு நீண்ட, நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. பாண்டிய வம்சத்தின்  வளர்ச்சியும், வீழ்ச்சியும் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமான சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு மாறி மாறி இருந்து வந்துள்ளது.

சுமார் 300 ஆண்டுகள் களப்பிரள்களாலும், 300 ஆண்டுகள் சோழர்களாலும் அடிமைப் படுத்தப்பட்டு அடக்கி வைக்கப் பட்ட பாண்டிய அரசை, கி.பி. 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 1200 ஆம் ஆண்டுகளில் முதலாம் சடைய வர்மன் குல சேகர பாண்டியன், விடு விக்க ஆசை கொண்டான் என்றாலும், அவனது ஆசை நிறைவேறாமல் போனது. மூன்றாம் குலோத்துங்க சோழன் அவனது ஆசையை நசுக்கி, மதுரை மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு போகச் செய்தான். மூன்றாம் குலோத்துங்கனின் இந்தச் செயலால் பாண்டிய நாட்டுக்கும், அதன் பெருமைக்கும் ஏற்பட்ட இந்தத் தலைகுனிவை போக்க, முதலாம் மாற வர்மன் சுந்தர பாண்டியன் உறுதி ஏற்றான். அதை நிகழ்த்தியும் காட்டினான். அதுவரை சோழர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த பாண்டிய நாட்டை மீட்டதொடு, தன்மானத்தோடு தன் நிகரில்லா தனியாக ஆட்சி செய்யும், நிலையையும் உருவாக்கியவன் முதலாம் மாற வர்மன் சுந்தர பாண்டியனே.


ஒரு முறை அல்ல இரண்டு முறை, சோழர்களை அடக்கி,  அவர்களே திரை (வரி) செலுத்தும் சிற்றரசாக மாற்றியவன் இந்தப் பாண்டிய மன்னனே. பெரும் சாம்ராஜ்யத்தை அமைத்து அரியணையில் அமர்ந்திருக்க வேண்டிய இந்தப் பாண்டிய மன்னன், பல்வேறு அரசியல் காரணங்களாலும், போசளர்களின் திருமண உறவாலும், முடங்கித் தன் எஞ்சிய நாட்கள் அனைத்தையும், போசளர்கள் சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைபோலக் கழித்தான் என்பது சங்கடமான உண்மை. இவனுக்குப் பின் அரியணை ஏறிய இரண்டாம் சடைய வர்மன் குல சேகர பாண்டியன் வெகுவிரைவிலேயே  இறந்து விட,  மாற வர்மன் போசள இளவரசி பம்மிய கண்ணுக்கு மகனாகப் பிறந்த, இரண்டாம் மாற வர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.


இதற்குப் பிறகு என்ன நடந்தது? இரண்டாம் பாண்டிய பேரரசை உருவாக்கியது யார்? சோழர்கள் என்ன ஆனார்கள்?  போசளர்களுக்கு என்ன நடந்தது? இந்த எல்லாவற்றிக்கும் விடையாக அமைவது ஒரே ஒரு பெயர் தான். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். யார் இவன்? எப்படி இரண்டாம் பாண்டியப் பேரரசை நிறுவினான்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடையாகத் தான் இந்தப் பதிவு இருக்கப் போகிறது. இரண்டாம் மாற வர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சிக் காலம் முழுவதும் பாண்டிய நாடு, போசள நாட்டின் அரசியல் நகர்வுகளுக்கு ஏற்பவே செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. இவனுடைய தாய் மாமனாக இருந்த போசள நாட்டின் அரசன், வீர சோமேசுவரன் தனக்கு ஏற்றக் கைப் பவையாகவே இரண்டாம் மாறவர்மனை ஆட்டி வைத்தான். இவனுடைய மைத்துனனாக இருந்த கொங்கு நாட்டின் வீரசோழன் பாண்டிய நாட்டுக்கு எல்லா விதத்திலும் உறு துணையாக இருந்தான் என்று சதாசிவ பண்டாரத்தார் தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளதை வைத்து, இந்த மன்னன் தனது ஆட்சி காலத்தில் பெரிய அளவில் எந்தப் போர்களிலும் ஈடுபட வில்லை என்பதை உணர முடியும்.


மூன்றாம் ராஜேந்திரன் ஆட்சி காலத்தில் திடீரென்று பாண்டி நாட்டின் மீது படை எடுத்து வந்தான். பல்வேறு இடங்களை அவன் கைப்பற்றிக் கொண்ட நேரத்தில், போசள அரசன் வீர சோமேஸ்வரன் தான் இரண்டாம் மாறவர்மன் சார்பாக மூன்றாம் ராஜேந்திரன் உடன் போரிட்டு வெற்றி பெற்றதொடு, அவனை மீண்டும் சிற்றரசனாக மாற்றி, முடி கொண்ட சோழபுரத்திற்கு அப்பால் விரட்டி விட்டான். வெறும் 12 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் திடீரென்று மரணம் அடையவே அவரது மகன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கு வந்தான். மிகவும் இளையவனாக அதாவது, பதின் பருவத்து சிறுவனாக இருந்தாலும், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற சொல்லுக்கு முழுமையாகப் பொருந்தக்கூடிய, பின் வரலாற்றில்  எம்மண்டலமும் கொண்டவர்கள் ஸ்ரீ சுந்தர சுந்தரபாண்டிய தேவர் என்று அழைக்கப்பட்டார்.


வடக்கே நெல்லூரில் இருக்கும் கடப்பா முதல் தெற்கே குமரிமுனை வரை இவனது அரசு பரந்து விரிந்து ஒரு பெரும் சாம்ராஜ்ஜியமாக மாறியது. பூமலர் வளர் திகழ் திரு மகள் புகலாம் புணர்ந்திருப்ப, என்று தொடங்கும் இவன் மெய்க்கீர்த்திப் பாடல், இவனது அறத்தையும், வீரச்  செயல்களையும் விரிவாகச் சொல்கிறது. பாண்டிய பேரரசின் வரலாற்றில்,  போசளர்களின் ஆதிக்கத்தை  சொல்லாமல் கடந்து போக முடியாது. போசளப் படையினர், அடிக்கடி பாண்டிய நாட்டுக்குள் ஊடுருவிப் பல சேதத்தையும், அச்சத்தையும் விளைவித்தார்கள் என்று பல கல்வெட்டுகள்  குறிப்பிடுகிறது.


தமிழக அரசியலில் இவர்கள் தலையீட்டால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதையும், அந்தத் தலையிட்டால், சோழ, பாண்டியர்கள் வரலாறு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தனது மூன்றாம் ஆண்டு ஆட்சி காலத்தில், சோழ நாட்டின் பகுதிகளைக் கைப்பற்றி, பின் அந்த நாட்டு மன்னனிடம் திருப்பித் தந்து இருப்பான் என்று சில பதிவுகளுக்கு முன் சொல்லி இருக்கிறேன். அதற்குக் காரணமே போசள அரசன் இரண்டாம் வீரசிம்மனின் தலையீடு தான். அது ஒரு மிகப்பெரிய அரசியல்.


சோழ  சாம்ராஜ்யத்தை அந்தக் காலகட்டத்தில்,  பேரழிவிலிருந்தும்,  அடிமைத் தனத்திலிருந்தும் அவ்வப்போது காப்பாற்றியதே போசளர்கள் தான். பாண்டியர்களுக்குக் கடும் அறிவுரை கூறியதாகவும், போசள அரசன் இரண்டாம் வீரசிம்மனின், கி.பி. 1227 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. இந்தச் சம்பவங்களுக்குப் பின்னரே, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இரண்டாவது முறையாகச் சோழ நாட்டின் மீது கிபி 1231 ஆம் ஆண்டுப் போர் நடத்தியிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் போருக்குப் பின்னரே பாண்டியர்களோடு பகை வளர்ப்பதை விட,  உறவே வளர்ப்பது உத்தமம் என்ற  முடிவுக்கு வந்த இரண்டாம் வீரசிம்மன், போசள இளவரசியயை, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அவர்கள் மனம் முடித்துக் கொடுக்கிறார்கள். இவ்வாறு சோழர்களில் உறவிலிருந்து விலகி, பாண்டியர்களோடு நெருக்கம் கொண்டு, உறவை வளர்த்ததன் விளைவாகப் போசள மன்னர்களான வீரசிம்மனும் அவனது மகன் வீர சோமேஸ்வரனும் ஆகிய இருவரும் அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பாண்டிய அரசை வடக்கே வளர விடாமல் தடுத்து நிறுத்திப் பெரும் அரசியல் செய்தார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.


ஆனால் இரண்டாம் சடைய வர்மன் சுந்தரபாண்டியனுக்கு பின், ஆட்சிக்கு வந்த இளங்காலையான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனிடம் போசளர்களின் ராஜதந்திர வேலைகள் பலிக்கவில்லை. தன் பாட்டனின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அவன்  பாட்டியான பம்மியக் கண் கொடுத்த அறிவுரைகள் எல்லாம் புறம் தள்ளினான். சடையவர்மன் தான் பதவியேற்ற சில ஆண்டுகளிலேயே தன் படை வலிமையைப் பெருக்கி,  பாண்டியப் பேரரசின் பரப்பினை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட ஆரம்பித்தான். நிலத்திலும், நீரிலும் சென்று போரிடும் அளவிற்கு மிகவும் வலிமையான படையை வைத்திருந்தான். முதலில் சேர நாட்டின் மீது படை எடுத்துச் சென்று அந்த நாட்டை ஆண்டு வந்த, வீரரவி உதய மார்த்தாண்டன் என்பவனை வெற்றி கொண்டான். இவ்வெற்றியின் காரணமாக இவனுக்குச் சேரனை வென்றான் என்ற சிறப்பு பெயரும் வந்தது.


மலைநாட்டிலிருந்து அப்படியே வடக்கு நோக்கிச் சென்று அங்கிருந்த  சிற்றரசர்களையும், என்ற சடையவர்மன் அந்தப் பகுதிகளையும் தனது அரசோடு சேர்த்துக் கொண்டான். இவனது வீர, தீரச் செயல்களால் சேர நாடு 14ஆம் நூற்றாண்டுவரை பாண்டிய நாட்டுக்கு உட்பட்டே இருந்தது. கி.பி. 1255 ஆம் ஆண்டு இலங்கை மீது போர் தொடுத்தான். அந்தக் காலகட்டத்தில் இலங்கையை இரண்டு அரசர்கள் ஆட்சி செய்தார்கள். போரின் முடிவில் ஒரு அரசன் இறந்து போனான். மற்றொரு அரசன் சடையவர்மனுக்கு பணிந்து, பெருந்திரளான யானைகளையும், தந்தங்களையும், முத்துக் குவியக்களையும் வரியகச் செலுத்தினான். திரிகோணமலையிலும், திரிகூட மலையிலும் பாண்டியர்களின் கயற்கொடி பொறிக்கப்பட்டது என்று திரு.  அப்பாத்துறையார் இலங்கைப் போரைப் பற்றிக் கூறுகிறார். பின் 1257 ஆம் ஆண்டு சோழ நாட்டிலிருந்து கொண்டு, பெரும் தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருந்த, மூன்றாம் ராஜேந்திரனையும் போரில் வென்று, அவனது நாட்டையும் பாண்டிய நாட்டோடு சேர்த்தான்.


இந்தப் படையெடுப்பால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் சேதத்தால் மூன்றாம் ராஜேந்திரன் விரைவாகவே இறந்தான். இவனது இறப்போடு மிகவும் பெரும் புகழும் பெற்று விளங்கிய சோழ சகாப்தமும் முடிவுக்கு வந்தது. இதன் பிறகு சோழர்கள் ஆங்காங்கே சிறு பகுதிகளை ஆளும் குறு நில மன்னர்களாக இருந்தாலும், பின் நாளில் அதுவும் இல்லாமல் போனது. தனது பாட்டன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தொடங்கி வைத்த சோழர்களின் அழிவை, முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வெற்றிகரமாக முடித்து வைத்து, பாண்டிய சாம்ராஜ்யம் உருவாவதற்கான வழியைப் பிரகாசமாக்கினான். இப்போரில் போசளர்களும் சோழர்களுக்கு ஆதரவாக, இருந்து போர் புரிந்தார்கள். ஆனால் சோழர்களைப் போலவே, அவர்களும் போரில் தோற்று ஓடினார்கள்.


போசளர்களை ஹொய்சாளர்கள் என்று வரலாற்றில் சொல்வார்கள். நான் முன்பே சொன்னது போல, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் திருமணத்திற்கு முன்பு முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் இளமைப் பருவத்திற்கு வரை இந்தப் போசளர்களின் அரசியலே தமிழ்நாட்டில் மிகவும் ஆழமாக இருந்தது. விவரம் தெரிந்த பிறகு, சடை வர்மன் சுந்தரபாண்டியன் அடுக்கடுக்கான போரைத் தொடுக்கும்போது, நிலைமையே மாறியது. எங்கிருந்து இந்தப் போசளர்கள் வந்தார்களோ, அதையும் தாண்டித் துரத்தி அடிக்கப்பட்டர்கள். கி.பி. 1264 ஆம் ஆண்டு நடந்த கண்ணனூர் போர் மிகவும் முக்கியமான ஒரு போர்.


இந்தக் கண்ணனூர் என்பது இப்பொழுது இருக்கும் திருச்சியில் சமயபுரம் ஆகும். இந்த இடத்தில் போசள அரசன் வீர சோமேஸ்வரன் தன் முழு வலிமையும் திரட்டிக்கொண்டு,  சடையவர்மன் மீது படை எடுத்து வந்தான். அதை வீரத்துடன் எதிர்கொண்டான் சடைய வர்மன் சுந்தரபாண்டியன். கடும் போர் நிகழ்ந்தது. ஏறத்தாழ 30 ஆண்டுகளாக ஒரு பேரரசாக இருந்து வந்த போசளர்களுக்கு இந்தப் போர் ஒரு பெரும் இடியாக அமைந்தது. படைகள் சிதறி ஓட, பல போசள படைத்தலைவர்கள் இறந்து போக, பல போர்க்களங்களில் போசளர்கள் வெற்றி பெறக் காரணமாக இருந்த ஒரு சிறந்த படைத்தலைவன், சிங்கள வீரன் இந்தப் போரில் இறந்தான் என்று பல கல்வெட்டுகள் கூறுகிறது. தன் தளபதியின் மரணத்திற்குப் பிறகு, படையின் தலைமை ஏற்றப் போசள மன்னன் வீர சோமேஸ்வரன் மற்றொரு போரை மீண்டும் பாண்டியருடன் உடனே நடத்தினான். அந்தப் போரில் போசள மன்னன் வீர சோமேஸ்வரன் உயிர் நீத்தான். இந்தச் செய்தியை முதலாம் சடைய வர்மன் சுந்தரபாண்டியனின் கீர்த்தி சொல்கிறது. இவர் தன் வாழ்நாளில் ஒரு முறை கூடப் போரில் தோற்றதே இல்லை. தன் பாட்டன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆசையான, சோழர்களை அழித்து நிலையான பாண்டியப் பேரரசை உருவாக்க வேண்டும் என்ற அவரின் ஆசையை, அவரது கொள்ளுப் பேரன் முதலாம் சடையவர்மன்  சுந்தரபாண்டியன் நிறைவேற்றினார். பாண்டிய வரலாற்றில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் பெயர் என்றும் நிலைத்திருக்கம்.


ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்


Beatmark Download


Effect Download


Post a Comment

0 Comments