அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் இராஜாதித்த சோழன் என்னும் சோழ மன்னனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். மத்திய காலக் கட்டத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தை மிகச் சிறப்பாக ஆட்சி செய்த சில மன்னர்களின் வாழ்க்கை வரலாறுபற்றி இதற்கு முந்தைய பதிவுகளில் மிகத் தெளிவாகப் பார்த்தோம். அவற்றுள், விஜயாலய சோழன், அவரது மகன் முதலாம் ஆதித்த சோழன், அவரது மகன் முதலாம் பராந்தகச் சோழன், இவர்களின் வாழ்க்கை வரலாறுபற்றிய பதிவுகளைக் கண்டு வந்துள்ளோம். இதுவரை சோழ சாம்ராஜ்யத்தில் மத்திய காலக் கட்டத்தில் வாழ்ந்த அரசர்களின் வாழ்க்கை வரலாற்றை இதற்கு முந்தைய பதிவுகளில் பார்த்துள்ளோம். ஆனால் முதல் முறையாக ஒரு இளவரசரைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
இராஜாதித்த சோழன், சோழர்கள் பெரும்பாலான தமிழக பகுதிகளை இவர் இளவரசராக இருக்கும் பொழுதும், இவரது தந்தை முதலாம் பராந்தகச் சோழன் அரசராக இருக்கும் பொழுதும் ஆட்சி செய்து வந்தனர். இந்த நிலையில் தான் சோழர்களுக்கு இணையாக எந்த ஒரு பேரரசும், இராஜ்ஜியமும், இல்லாத ஒரு சூழல் நிலவியது. சோழ தேசத்தை மன்னராக முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சி செய்து வந்தார். இளவரசராக இராஜாதித்த சோழன் இருந்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில் தான் தமிழகத்திற்கு வடக்கே ஆந்திரா, ஒரிசா வரை எல்லைகளை வைத்து ஒரு சாம்ராஜ்ஜியம் சோழர்களைப் போன்றே பெரும் நிலப்பரப்பையும், பெரும்படையும் அமைத்துத் தன்னுடைய எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே வந்தது. அந்தத் தேசத்தை இராஷ்டிர கூடம் என்று அழைப்பார்கள். இத்தகைய சூழலில் இராஷ்டிர கூடர்கள் சோழர்களின் மீது படையெடுக்க ஆரம்பித்தனர். இந்தக் காலக் கட்டத்தில் தான் முதலாம் பராந்தகச் சோழர் தொடர்ச்சியாக நான்கு இராஷ்டிரகூட மன்னர்களை வீழ்த்தி, வடக்கே புலிக் கொடி பறக்கவும் காரணமாக இருந்தார். இதனால் சோழர்களுக்கும், இராஷ்டிரகூடர்களுக்கும் அடிக்கடி பகைமை ஏற்பட்டது.
கி.பி. 940 இல் முதலாம் பராந்தகச் சோழன் தான் ஏற்கனவே வென்றிருந்த பாண்டிய மன்னரின் செங்கோலையும், மகுடத்தையும் தேடிச் சென்றார். அந்தக் கிரீடமும், செங்கோலும் இலங்கை மன்னர் ஐந்தாம் காசியப்பனால் கைப்பற்றப்பட்டதால், அதனைத் தேடி இலங்கை நோக்கிச் செல்கிறார் முதலாம் பராந்தகச் சோழன். இலங்கைக்குச் செல்லும் முன்பு, தன் மகனையே சோழ தேசத்தை நிர்வகிக்கும் படி கூறி விட்டுச் செல்கிறார். தொடர்ந்து இராஷ்டிரகூடர்களை எதிர்த்து, சோழர்கள் வெற்றி பெற்று வந்த நிலையில், முதலாம் பராந்தகச் சோழன் இல்லாத சூழ்நிலையில், சோழ தேசத்தின் மீது படை எடுக்க எண்ணினான், இராஷ்டிரகூட மன்னன். அன்றைய காலக் கட்டத்தில் சோழர்களின் இராஜ்ஜியம் தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே ஆந்திரா வரை புலிக்கொடியின் மாந்தர்களின் இராஜ்ஜியமே பரவி இருந்தது. இத்தகைய சூழலில் தான் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனா சோழர்கள்மீது படையெடுக்க ஆயத்தமானன்.
தமிழகத்தில் மிகப் பெரும் படையாகச் சோழர்களே இருந்தனர். இவர்களை வீழ்த்த வேண்டும் என்று நினைத்த இராஷ்டிரகூட மன்னன், மிகப்பெரிய படையைத் திரட்டியாக வேண்டும் என்று எண்ணி இருந்தார். இதன் பின்பு சோழர்களை வீழ்த்தத் தன் அருகில் உள்ள தேசங்களின் உதவியை நாடினான் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணா. சோழர்களை வீழ்த்த அவர்களுடன் ஐந்து தேசங்கள் கைகோர்த்தன. இச்செய்தியானாது சோழ தேசம் சென்றது. இதனை அடுத்து இராஜாஜித்த சோழன் மிகப் பெரிய படையைத் தயார் செய்ய வேண்டும் என்று எண்ணினான். அந்தக் கணம் இளவரசர் இராஜாதித்தார் அவர்கள், சோழ தேசத்தின் இளவரசராகவும், முதன்மைப் படைத் தளபதியாகவும் இருந்தார். இதனை அடுத்து அவருக்குத் துணைத் தளபதியாக இருந்தவரிடம், இளவரசர் இராஜாதித்தர் தளபதி அவர்களே, கூறுங்கள் இளவரசரே. இராஷ்டிரகூடர்களிடம் போருக்கான அழைப்பு வந்துள்ளதே என்ன செய்யலாம். அதற்குத் தளபதி அவர்கள், இளவரசே தமிழகத்தில் திரும்பும் திசை எங்கும், புலிக் கொடி பறந்து கொண்டிருக்கிறது. வீரத்தையும், போர்க் களத்தையும் வாழ்வின் அங்கமாகக் கொண்டிருந்த சோழப் படை வீரர்களுக்குப் போர்க் களம் என்பது குளத்தில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் மீன்கள்போல அரசே. ஆணையிடுங்கள் அரசே. ஒரு கைப் பார்த்து விடலாம் என்றார் தளபதி அவர்கள்.
இதற்குப் பின்பு, இளவரசர் இராஜாதித்த சோழன் சோழ மாந்தர்களுக்குப் போர்க்களம் என்ற ஒன்று புதுமையான ஒன்றா என்ன? இளவரசர் தளபதி அவர்களே, இளவரசரே. அனைத்துப் படைகளையும் போர்க் களத்திற்கு தயாராக இருக்கச் சொல்லுங்கள் என்று கட்டளை இடுகிறார் இராஜாதித்த சோழன். இதற்குப் பின்பு இளவரசர் அவர்கள், தளபதி அவர்களை அழைத்துப் போர்க் களம் எங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று கேட்கிறார். தளபதி அவர்கள், தக்கோலம் என்னும் இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அரசே என்று கூறுகிறார். ஆம், இன்றைய அரக்கோணம் தான். அக்காலக் கட்டத்தில் தக்கோலம் என்று அழைக்கப்பட்டது. இதற்குப் பின்பு, இளவரசர் தளபதி அவர்களே, தற்காலத்திற்கு இராஷ்டிரகூடப் படைகள் வந்து சேர எவ்வளவு நேரம் ஆகும். அதற்குத் தளபதி அவர்கள், குறைந்தது ஒரு மண்டலமாவது ஆகும் இளவரசே. இதற்குப் பின்பு இளவரசர், ம்ம் ஒரு மண்டலம் 48 நாட்கள். படைகளைத் தயார் செய்து வையுங்கள். போருக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் இராஜாதித்த சோழன்.
இதன் பின், இளவரசரான இராஜாதித்த சோழனின் ஆணைப்படி, சோழப் படைகளானது, தக்கோலம் நோக்கிப் பயணிக்கிறது. அப்போது சோழப் படைகள், போகும் வழியில் சோழ மக்கள் தண்ணீர் வளம் இல்லாமல், மிகவும் துன்பப் பட்டார்கள். இதைப் பார்த்த இளவரசர் தளபதி அவர்களே, செழிப்பான செந்நெல் பூமிகளும், வளமான ஆறுகளும் சோழ சாம்ராஜ்ஜியத்தை அலங்கரித்துக் கொண்டிருக்க, நம் தேசத்தின் இந்த அவல நிலையைத் தீர்க்க, நாம் ஏதாவது செய்ய வேண்டும் தளபதி அவர்களே என்று ராஜாதித்த சோழன் கூறினார். இதற்குத் தளபதி அவர்கள், அரசே உடனே, கட்டளையிடுங்கள் உங்கள் சிந்தனை எதுவாயினும் அதற்குச் செயல் வடிவம் அளிக்கும் சோழப் படைகளும், சோழ மாந்திரீகர்களும் காத்திருக்கிறோம் இளவரசே என்று கூறுகிறார் தளபதி அவர்கள். இதன் பின்பு இளவரசரான இராஜாஜித்த சோழர், அப்படியானால் சோழ மக்களின் துன்பத்தையும், துயரத்தையும் துடைக்க ஒரு பிரம்மாண்டமான ஏரியை வெட்டச் சொல்லுங்கள் எனக் கட்டளை இடுகிறார் இராஜாதித்த சோழர். அவர் கூறிய அடுத்த கணமே படைத்தளபதி அவர்கள் உத்தரவு இளவரசே என்று கூறுகிறார்.
பின்பு இளவரசர் தளபதி அவர்களே, போருக்குச் செல்லும் நம் சோழப் படைகளை இப்பெரும் ஏரியை வெட்டக் கூறி கட்டளை இட்டு விட்டேன். நம் வீரர்கள் சோர்வடைந்து போர்க் களத்திற்கு சென்று சரியாகப் போரிட முடியாமல், இருக்க நானே தவறான கட்டளை இட்டு விட்டேனா தளபதியாரே என்று கேட்க, இதனை அடுத்து தளபதி அவர்கள் இளவரசே, சோழ தேசத்தின் படை வீரர்கள் தங்கள் சோழ தேச மக்களின் துயர் துடைக்கவும், அவர்களின் குறை தீர்க்கவும் தங்கள் இறுதி மூச்சு உள்ள வரை போராடியே தீருவார்கள் நம் சோழ தேசப் படை வீரர்கள். சோழ தேச மக்களின், வீரத்தையும், துயரத்தையும் சேர்ந்தே சுவாசிக்கிறார்கள் நம் சோழப்படை வீரர்கள் இளவரசே என்று கூறுகிறார் தளபதி அவர்கள். இதனைக் கேட்ட இராஜாதித்த சோழன் அதுவும் சரி தான் படைத் தளபதி அவர்களே என்று கூறுகிறார். அடுத்த கணம் சோழ படை வீரர்கள் இரவு, பகல் பார்க்காமல் ஒரு பிரம்மாண்ட ஏரியை வெட்டினார்கள். அந்த ஏரிக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று இளவரசர் இராஜாதித்தர் தளபதி அவர்களிடம் கேட்டார். அதற்குத் தளபதி அவர்கள், நீங்கள் எந்தப் பெயர் கூறினாலும் புகழ் மிக்கதாகவே இருக்கும் என்று கூறினார். அதற்கு இளவரசர் அவர்கள், சோழ தேசத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் என் தந்தையான வீரநாராயணன் என்னும் முதலாம் பராந்தகச் சோழன் பெயரையே சூட்டலாம் என்று நினைக்கிறேன் படைத் தளபதி அவர்களிடம் கூறுகிறார் இராஜாதித்த சோழர். அதற்குப் படைத்தளபதி அவர்கள் வரலாற்றில் எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் இருந்தாலும், சோழ சாம்ராஜ்ஜியத்தில் முதுமையினால் தளர்ந்திருந்தவரும், உடம்பில் 96 காயங்கள் உள்ளவரும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நடக்க முடியாமல் இருந்தவரும் போர்க் களத்திற்கு சென்று போரிட்டு புலிக் கொடியைப் பேரரசாக மாற்றிய விஜயாலயச் சோழனின், மிகப் பெரும் வாரிசான காவிரியின் இரு கரை ஓரமும், 108 சிவாலயங்கள் எழுப்பிய ஆதித்த சோழனின் வாரிசான, நம் தேசத்தில் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் தில்லைக்கு பொன் கூரை வேய்த, வீரநாராயணன் என்னும் முதலாம் பராந்தகச் சோழ சக்கரவர்த்தியின் பெயரை வைப்பதே சிறப்பாக இருக்கும் இளவரசே என்று கூறுகிறார் தளபதி அவர்கள். இதனை அடுத்து அந்த ஏரிக்கு வீரநாராயணன் ஏரி என்று பெயர் சூட்டப்பட்டது. ஆம்,
பின்னாளில் இதனையே அனைவரும் வீராணம் ஏறி என்று அழைத்தனர். இத்தகைய ஏறியே சென்னைக்கு 235 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வீராணம் ஏரி ஆகும். இன்றைக்கும் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் முக்கியமான ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் நம் தமிழ் சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இந்த ஏரி உள்ளது. இதுவே சோழர்களின் ஆட்சித் திறனுக்கு முக்கியமான சான்றாகும். வீராணம் ஏரியைப் பற்றி, அமரர் கல்கி அவர்கள், பொன்னியின் செல்வனின் தொடக்கத்தில் மிகச் சிறப்பாக வர்ணித்துக் கூறியிருப்பார். இந்த ஏரியின் நீளமானது சுமார் 14 கிலோ மீட்டரும் நீளமும், 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஏரியை அக்காலகட்டத்தில் வடிவமைத்தவன் இராஜாதித்த சோழன். இத்தகைய செயலைச் செய்த இராஜாஜித்த சோழனை சோழ மக்கள் மற்றொரு மன்னனாகவே எண்ணினர். இதன் பின்னர், தக்கோலம் என்னும் இடத்தில் மூன்றாம் இராஷ்டிர கூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணாவும், அவருக்குத் துணையாக நான்கு நட்பு நாடுகளின் படைகளும், சோழர்களை எதிர்க்க, தக்கோலம் போர்க் களத்தின் ஒரு முனையில் வந்து நின்றன. இதன் பின்னரே மிகப்பெரிய சோழப் படையானது அங்கு வந்து நின்றது. போர்க்களத்தில் இடி, மின்னல்களின் சத்தத்தைவிட, வேள்களின் சத்தமும், வாள்களின் சத்தமும் மிக அதிகமாகக் கேட்டது. சோழ படை வீரர்கள் வெட்டிய வீராணம் ஏரியில் கூட அவ்வளவு தண்ணீர் ஓடவில்லை. அப்போர்க் களத்தில் ரத்த ஆறே ஓடியது. பல்லாயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். யானைகள் அனைத்தும் செத்து மடிந்தன. இருந்த போதிலும் புலிக்கொடி பதித்த சோழப் படையே முன்னேறிச் சென்றது. ஒரு கட்டத்தில் சோழர்களின் தாக்குதலால் எதிரில் நின்ற படைகள் சிதறி ஓட ஆரம்பித்தன.
இதன் பின்பு இராஷ்டிரகூடப் படைகளை வழி நடத்தி வந்த மூன்றாம் கிருஷ்ணா பின் வாங்குவது போலப் பதுங்கி இருந்தான். மனோ சாம்ராஜ்ஜியத்தின் படை வீரர்களும், கிழக்கு கங்க மன்னரின் படைகளும், வைடூங்கர மன்னனின் படைகளும், வானர் குலத்தின் படைகளும் போர்க்களத்தில் இணைந்து மீண்டும் சோழர்களை எதிர்த்தனர். இத்தகைய மிகப்பெரிய படையைக் கண்டும் சோழ சாம்ராஜ்யத்தின் இளவரசரான இராஜாதித்த சோழன் எதிரில் இருப்பது, எந்தப் படையாக இருந்தாலும், சோழப் படைகளே முன்னோக்கி செல்ல வேண்டும் என்று தனி ஒரு வீரனாகக் கர்ஜித்தார். அவர் கூறிய அடுத்த கணமே, சோழப் படை வீரர்கள் முன்னேறிச் சென்று பல வீரர்களைக் கொன்று குவித்தனர். ஒரு இளவரசராக இருந்து ஐந்து பெரும் சாம்ராஜ்ஜியங்களை எதிர்த்துப் போரிட்ட வீரன் தான் இந்த இராஜாதித்த சோழன். போர்க்களத்தில் எங்குப் பார்த்தாலும் சோழர்களின் புலிக்கொடியை பறந்திருந்தது. இத்தகைய, சூழலில் சோழர்களை எதிர்க்க இராஷ்டிரகூட மன்னருடன் வந்த கிழக்கு கங்க மன்னன், இரண்டாம் பூதங்கன், போர்க் களத்தின் நடுவே, இராஜாதித்த சோழனை நோக்கி வந்தான். மிகப் பணிவுடன் இராஜாதித்த சோழனை நோக்கி, கிழக்கு கங்க மன்னன் நான், இராஷ்டிரகூட மன்னருடன் சேர்ந்து, தங்களுக்கு எதிராக, மிகப் பெரிய தவறைச் செய்து விட்டேன். இவ்வுலகில் மிகப் பெரும் வீரத்தையும், அறத்தையும் கொண்டுள்ள சோழர்களை வீழ்த்த, எத்தனை பெரும் படைகளையும் ஒன்றிணைத்து வந்தாலும் முடியாது.
ஆதலால், எங்களை மன்னித்து விடுங்கள் என்று கிழக்குக் கங்க மன்னன் வருந்தினான். இதனைத் தொடர்ந்து கிழக்கு கங்க மன்னரின் படைகள்மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கட்டளையிடுகிறார் இளவரசர் இராஜாதித்த சோழர். அவர் கட்டளை இட்டுத் திரும்பி அடுத்த கணமே அவரது உடம்பில் உயிர் இல்லை. ஒரு விஷ அம்பானது அவரது மார்பில் குத்தி இருந்தது. ஆம், கிழக்குக் கங்க மன்னன் வஞ்சக முறையில் இராஜாதித்த சோழனை வீழ்த்தினான். ஆம், மிகப் பெரும் படைகளைக் கொண்டு கூட, வெல்ல முடியாத பெரும் வீரனான இராஜாதித்த சோழனைச் சூழ்ச்சி முறையினாலும், வஞ்சகத்தினாலும், காலில் விழுந்து, முதுகில் குத்தி வீழ்த்தினர் எதிராளியின் படைகள். அப்போரில் யானையின் மீது அமர்ந்திருந்தவாறே வீர மரணம் அடைந்தார் இராஜாதித்த சோழன். அவர் யானை மீது இருக்கும் பொழுது இறந்ததால், யானை மீது துஞ்சிய சோழன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மறு முனையில் இளவரசரை இழந்த போதிலும், சோழப் படைகள் சோர்வடைய வில்லை. அவர்கள் முடிந்த அளவிற்கு வீரத்துடன் போரிட்டனர். சிலர் இளவரசரைப் போலவே அப்போர்க் காலத்தில் உயிரையும் துறந்தனர். இருப்பினும் அப்போரில், இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்னா வெற்றி பெற்றான் வஞ்சக முறையில். இரண்டு தலைமுறைக்கு பின்னர், முதல் முறையாக சோழ தேசம் முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சி காலத்தில் தோல்வியைத் தழுவியது. வஞ்சக முறையில், சோழர்களை வீழ்த்தி வெற்றி மாலை சூடினான் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணா. இச்செய்தியானது இலங்கைக்கு மணி முடியையும், செங்கோலையும் தேடிச் சென்ற மன்னரான முதலாம் பராந்தகச் சோழனுக்கு சென்றது. மிகுந்த ஆத்திரம் அடைந்த, முதலாம் பராந்தகச் சோழன் இராஷ்டிர கூடர்களை முற்றிலுமாக அளிக்க நினைத்தார். அவர்களை, முழுவதுமாக வீழ்த்த வேண்டும் என்றால் மிகப் பெரிய படையை வழி நடத்திச் செல்ல வேண்டுமென்றால், ஒரு சிறந்த போர் வீரனும், படைத் தளபதியும், ஏன், அத்தேசத்தில் இளவரசரும் கூட இல்லை. அடுத்த இளவரசராக கண்டராதித்த சோழரே இருந்தார். மிகப் பெரிய சிவ பக்தனாகவும், இறைப் பணியியே அவரது ஆர்வத்தைக் காட்டினர். பின்னர் வேறு வழியின்றி கண்டராதித்த சோழரை இளவரசராக்கினார் முதலாம் பராந்தகச் சோழர்.
Beatmark Download
Effect Download
0 Comments