பெரியாரின் வாழ்க்கை வரலாறு

 தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்படும் தந்தை பெரியார் அவர்கள் இந்த நாட்டிற்காக செய்த நன்மைகள் எண்ணில் அடங்காதவை மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளை நீக்குவதற்காகவும் ஜாதி, இன வேற்றுமைகள் களைவதற்காகவும் அரும்பாடுபட்டவர். 

இவருடைய தந்தை பெயர் வெங்கட நாயக்கர். தாயின் பெயர் சின்னத்தாயம்மாள் ஆவார். தந்தை வெங்கட்டர் ஆரம்பத்தில் கூலி வேலை பார்த்தார்.பிறகு தட்டு கடை வைத்தார். பிறகு படிப்படியாக முன்னேறி வருவாய் மட்டுமின்றி வீடு, வாசல், சொத்து, பெயர், புகழ், அந்தஸ்து என அடுத்தடுத்து வளர்ந்தார். ஆனால், திருமணமாகி 10 ஆண்டுகள் வரை வெங்கட்-சின்னத்தாய் தம்பதியருக்கு குழந்தை இல்லை. அந்தக் குறையை தீர்க்கும் வகையில் வகையில் 1877 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்தனர். இரண்டு ஆண்டு கழித்து செப்டம்பர் 17, 1879 அன்று இன்னொரு ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தைக்கு கிருஷ்ணர் பெயர் வைத்த வெங்கட்டர் இந்தக் குழந்தைக்கு ராமசாமி என்று ராமனின் பெயரை வைத்தார். அதன் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது பொன்னுத்தாய் என்று பெயர் வைத்தார்கள்.

கிருஷ்ணசாமி அமைதியின் உருவம். ஆனால் ராமசாமியோ அண்ணனுக்கு நேர்எதிர் குறும்பின் உறைவிடம். திடீரென்று ஒருநாள் ராமசாமியை அழைத்த தந்தை வெங்கட்டர் இனிமேல் நீ இந்த அம்மாள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். ராமசாமிக்கு ஒன்றுமே புரியவில்லை கேட்டதற்கு தத்து கொடுத்து விட்டோம் என்றார்கள். அண்ணன் கிருஷ்ணசாமி செல்வ செழிப்பில் சத்தான உணவு அருகில் தாய் தந்தையர் என்று மகிழ்ச்சி கரகமாக வளர்ந்து கொண்டிருந்தார். ராமசாமியின் பாடோ திண்டாட்டமாக இருந்தது ஏழைப் பாட்டியின் வீட்டில் வளர தொடங்கினார். சாப்பிடுவதற்கு ருசியான சாப்பாடு கூட கிடைக்கவில்லை. வறுமை பல நாட்கள் வெறும் வயிற்றுடனே தூங்கி விடுவார். ராமசாமி ஈரோட்டில் ஒரு திண்ணை பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். ராமசாமி ஒழுங்காக படித்தாரை தவிர ஒருபோதும் குறும்புகளை குறைத்துக் கொள்ளவில்லை. தன்னுடன் படிக்கும் மாணவர்களை அடித்து விடுவதாக புகுவார்கள் வந்து கொண்டிருந்தன. 

ஒரு கட்டத்தின் ஆசிரியரையே அடித்து விட்டார் என்று தகவல் வரவே ராமசாமியின் படிப்புக்கு முடிவுரை எழுதிய வெங்கட்டர் மறுநாள் முதல் ராமசாமியை மண்டி கடைக்கு அழைத்துப் போக ஆரம்பித்தார். தந்தையிடமிருந்து வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொண்டார் ராமசாமி. இறைப் பக்தர்களிடம் எடக்கு மடக்காக கேள்விகளை கேட்பதும் அவர்கள் சொல்லும் பதிலுக்கு எதிர் கேள்வி கேட்பதும் ராமசாமியின் பிரியத்திற்குரிய பொழுதுபோக்காக இருந்தது. ஒரு கட்டத்தில் ராமசாமிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு எடுத்தனர். ஆனால் தனக்கு உறவு பெண்ணான நாகம்மையை பிடித்திருப்பதாக ராமசாமி சொல்ல அவரையே திருமணம்செய்து வைத்தனர் பெற்றோர். மனைவியிடம் நாத்திகம் பேசினார் ராமசாமி. அவர் பேசிய கருத்துக்கள் நாகம்மையின் பகுத்தறிவை தட்டி எழுப்பியன. மெல்ல மெல்ல ராமசாமியின் கருத்துக்களோடு ஒத்துப்போக தொடங்கினார் நாகம்மை. கிட்டத்தட்ட இந்த சமயத்தில் தந்தை வெங்கட்டருக்கும் ரமாசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறி காசிக்குப் போய் விட்டார் ராமசாமி. கெஜவாடா, காசி, கேரளா என்று சுற்றி திரிந்த ராமசாமியை நண்பர்கள் உதவியோடு மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார் வெங்கட்டர். அத்தோடு நிறுத்தமால் மண்டிக்கடையை ராமசாமியின் பொறுப்பில் ஒப்படைத்தார். ஏற்கனவே பெற்ற அனுபவம் தந்தையின் வழிகாட்டுதலோடு மெல்ல மெல்ல வியாபாரத்தை பெருக்கினார். அத்தோடு பல மனிதர்களையும் சம்பாதித்தார்.

ராமசாமி ஊரில் எந்த வீட்டில் நல்லது கெட்டது நடந்தாலும் அழைப்பு அறிவிப்பு எதையும் எதிர்பார்க்காமல் ஆஜராக தொடங்கினார். தேவைப்படும் இடங்களில் பொருள் உதவி செய்தார். சாதாரண பொதுமக்கள் தொடங்கி தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், ஜமீன்தார்கள், ஊர் பெரியோர்கள் என்று ராமசாமியின் தொடர்பு வட்டம் விரிவடைந்தது. ராமசாமி ஈ வெ ராமசாமி ஆனார். தீவிர நாத்திகரான ஈ வெ ராமசாமிக்கு ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியின் செயலாளர் பதவி வந்தது. ராமசாமியும் துளுயும் சலனப்படாமல் ஏற்றுக்கொண்டார்.ஈ வெ ராமசாமியின் சேவை ஈரோட்டிற்கு கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதாலோ அவருக்கு ஈரோடு நகராட்சி தலைவர் பதவி வந்தது. பம்பரமாக சுழன்று வேலை பார்க்க துவங்கினார். பல ஆண்டுகள் ஈரோட்டு மக்களுக்கு இருந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். அது மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது அப்படித்தான் சேல நகராட்சி தலைவராக இருந்த ராஜாஜிக்கு ஈ வெ ராமசாமியின் பெயர் அறிமுகமானது. ஈ வெ ராமசாமியுடன் பழக ஆரம்பித்த உடனயே ராஜாஜிக்கு புரிந்துவிட்டது இந்த மனிதர் காங்கிரசுக்கு தேவைப்பாடுவார் என்று. காரணம் அப்போது ஈ வெ ராமசாமியின் வசம் சுமார் 30 பதவிகள் இருந்தன. பெருத்த மக்கள் செல்வாக்கு பிராமணரல்லாதவர் வேறு போதாது. எப்படியாவது அவரை காங்கிரசில் சேர்த்து கொள்ள விரும்பினார். முறைப்படி ஈ வெ ராமசாமிக்கு அழைப்பு விடுத்தார் ஆனால் கட்சியில் சேர ஈ வெ ராமசாமிக்கு ஆரம்பத்தில் விருப்பம் இல்லை.

அதே சமயம் காந்தியின் மீதும் காங்கிரசின் மீதும் லேசான ஈர்ப்பு இருந்தது. குறிப்பாக ராஜாஜி, வரதராஜு நாயுடு போன்றோருடன் நட்பு பாராட்டி வந்தார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தான் வகித்து வந்த பதவிகளை எல்லாம் ராஜினாமா செய்யும் அளவிற்கு காந்தியின் மீதும் காங்கிரசின் மீதும் ஈ வெ ராமசாமிக்கு ஈர்ப்பு இருந்தது. அப்போது காங்கிரசுக்கு போட்டியாக சென்னை மாகாணத்தில் பிராமணர் அல்லாதவர்களின் உரிமை குரலாக செயல்பட்ட நீதிக்கட்சி காங்கிரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. ஆகவே அந்தக் கட்சியின் செல்வாக்கை குறைக்க காங்கிரசில் உள்ள பிராமணர் அல்லாத தலைவர்களைக் கொண்டு சென்னை மாகாண சங்கம் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் துணைத் தலைவராக ஈ வே ராமசாமியை தேர்ந்தெடுத்தனர். உண்மையில் சென்னை மாகாண சங்கத்தில் ராமசாமியை சேர்த்ததே அவரை காங்கிரஸில் சேர்ப்பதற்கான முதல் படி. அதுபோலவே காங்கிரஸில் முழுமையாக சேர்ந்து விட்டார் ராமசாமி. பகட்டான பட்டாடைகளை உடுத்தி வந்த ஈ வெ ராமசாமி கதர் ஆடைக்கு மாறினார். அத்தோடு காந்தியின் அழைப்பை ஏற்று கதர் ஆடை விற்பனையில் ஈடுபடத் தொடங்கினார் ராமசாமி. அவருக்குத் துணையாக மனைவி நாகம்மையும் சகோதரி கண்ணம்மாளும் சேர்ந்து கொண்டனர்.

அதே வேகத்தில் காந்தி அறிவித்த கல்லுக் கடை மறியல் போராட்டத்திலும் பங்கேற்றார் ஈ வெ ராமசாமி. வட மாநிலங்களில் எல்லாம் ஈச்ச மரங்களை வெட்டித் தள்ளிய செய்தி ராமசாமியின் காதுகளை வந்தடைந்தது. தனது தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்த உத்தரவிட்டார். அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது நடவடிக்கைக்கும் உள்ளானார். ஒருகட்டத்தில் அரசின் அடக்குமுறை காரணமாக போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை காந்தியிடம் முன் வைத்த போது அது என் கையில் இல்லை ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது என்று நாகம்மையையும் கண்ணமாளையும் சுட்டிக் காட்டினார் காந்தி. போராட்ட அரசியல் தாண்டி புராண எதிர்ப்பு மூடநம்பிக்கை எதிர்ப்பு கடவுள் மறுப்பு சுயமரியாதை சிந்தனை பகுத்தறிவு வகுப்புவாரி உரிமை என்று ராமசாமியின் பிரத்தியேகக் கொள்கையில் காங்கிரசில் இருந்த மூத்த தலைவர்களுக்கு மகிழ்ச்சியையும் பலருக்கு எரிச்சலையும் கொடுத்துக் கொண்டிருந்தன.

அந்த சமயத்தில்தான் கேரளப் பகுதியில் இருந்து ஈ வெ ராமசாமிக்கு ஓர் அழைப்பு வந்தது. அங்கே வைக்கம் என்ற ஊரில் உள்ள தெரு ஒன்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடமாடக் கூடாது என்கிற எழுதப்படாத சட்டம் அமலில் இருந்தது. காலம் காலமாக கடைப்பிடித்தே தீர வேண்டும் என்று வாய்மொழி மூலமாக ஆதிக்க சக்திகள் சார்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த சட்டம் அது. அதனை எதிர்த்து பொதுமக்களும் காங்கிரஸ்காரர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அந்தப் போராட்டத்திற்கு பிரபல காங்கிரஸ் தலைவர் ஜான் ஜோசப் தலைமை தலைமையேற்று நடத்தி வந்தார். ஆத்திரமடைந்த அரசுப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களையும் தொண்டர்களையும் அதிரடியாக கைது செய்தது. இதனால் போராட்டத்தின் வீரியம் குறைந்தது. அப்படியே வீரியம் குறையாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று சிறையில் இருந்தபடியே ஈ வெ ராமசாமிக்கு ரகசிய அழைப்பு விடுத்திருந்தன. அதை ஏற்று வைக்கம் சென்ற ராமசாமி திருவிதாகூர் சமஸ்தானம் மன்னரின் சமாதான முயற்சிகளை எல்லாம் நிராகரித்துவிட்டு போராட்டத்தை வீரியத்துடன் நடத்தினார். ஈ வெ ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

அதன் பிறகும் ராமசாமி போட்டுக் கொடுத்த பாதையில் போராட்டம் தொய்வின்றி தொடர்ந்தது. ஈ வெ ராமசாமியின் விடாமுயற்சியும் தொடர் போராட்டமும் வைக்கம் போராட்டத்தை வெற்றி பெற செய்தது. இப்போது ஈ வெ ராவுக்கு பத்திரிக்கை ஆரம்பிக்கும் எண்ணம் வந்திருந்தது. அநேக பத்திரிக்கைகள் நம்முடைய நாட்டில் இருந்தாலும் அவை தங்கள் மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதை தெரிவிக்க தயங்குகின்றன. அதனால் தான் நான் பத்திரிகையை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகைகள் போல் அல்லாமல் மனதில் பட்டதை தைரியமாக பொதுமக்களுக்கு உள்ளதை உள்ளபடி தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய அவிப்பிராயம் என்றார் ஈ வெ ரா. அந்த வகையில் அவர் தொடங்கிய பத்திரிகையின் பெயர் குடி அரசு. அந்தப் பத்திரிகையில் ஈ வெ ரா எழுதியவைகள் காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தின. வர்ணாசிரமத்திற்கு எதிராகவும் வகுப்புவாரி உரிமைகள் குறித்தும் நிறைய கட்டுரைகள் எழுதப்பட்டன. அப்போது சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதி கட்சி அறநிலை பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. இந்து மதத்திற்கே ஆபத்து ஏற்படுத்தும் முயற்சி என்று காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கருதினர். ஆனால் ஈ வெ ராவோ புதிய சட்டம் ஆலயங்களையும் அதன் சொத்துக்களையும் பாதுகாக்கும் நிர்வாகங்களை மேம்படுத்தும் என்றார்.

இது காங்கிரஸுக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்ச்சியாக வலியுற்தினார் ஈ வெ ரா. ஆனால் அதற்கு ராஜாஜி, திரு வி கா உள்ளிட்டோர் தனிப்பட்ட முறையில் ஆதரவளித்த போதும் பகிரங்கமாக ஆதரவளிக்கவில்லை. தீர்மானததை நிறைவேற்றுவதில் தொடர்ச்சியாக கால தாமதம் செய்வதால் அதிருப்தி அடைந்த ஈ வெ ரா காங்கிரஸிலிருந்தே விலகினார். சாதியையும் வர்ணாசிரமத்தையும் ஆதரித்து வரும் காங்கிரசை ஒழித்துக் கட்டுவது தான் என்னுடைய முதல் வேலை என்று சொல்லிவிட்டு வெளியேறினார். கிட்டத்தட்ட இந்த சூழ்நிலையில் தான் 1926 பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி தோல்வி அடைந்தது என்றாலும் பிராமணர் அல்லாதவரின் உரிமைக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு நீதிக்கட்சிக்கே இருப்பதாக சொன்ன ஈ வெ ரா சுயமரியாத இயக்கம் என்கிற சமூக சீர்திருத்த இயக்கத்தை துவங்கி நடத்தினார். 1929 பிப்ரவரி 17இல் செங்கல்பட்டில் சுயமரியாதை மாகாண மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டில் ஈ வெ ராவின் உயிர் நாடிக் கொள்கைகளான தீண்டாமை ஒழிப்பு புரோகித ஒழிப்பு பட்டப்பெயர்கள் துறப்பு போன்றவை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விதவை திருமணத்தை ஆதரியுங்கள், கலப்பு திருமணத்தை ஊக்கப்படுத்துங்கள், சாதி பட்டங்களை துறந்து விடுங்கள், கோயில்களில் இடைத்தரகர்களை தவிருங்கள், புரோகிதத்தை ஒழியுங்கள் என்பனவை போன்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. கலப்பு திருமணம் பற்றி மேடைக்கு மேடைப் பேசினார் பெரியார்.

விதவைத் திருமணத்தின் அவசியம் பற்றியும் பொதுமக்களிடம் நேரடி விவாதத்தில் ஈடுபட்டார். ராமசாமியின் தலைமையில் கலப்பு மற்றும் விதவை திருமணங்கள் அடிக்கடி நடத்தப்பட்டன. தன்னுடைய கருத்துக்களை மேலும் சில தரப்பு மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ரிவோல்ட் என்கிற ஆங்கில பத்திரிக்கையையும் தொடங்கி நடத்தினார் ஈ வெ ரா. இலங்கை, மலேசியா பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எல்லாம் ஈ வெ ராவுக்கு அழைப்புகள் வந்தன. சோவியத் ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, துருக்கி, கிரீஸ் உள்ளிட்ட தேசங்களையும் சுற்றிப் பார்த்தார். ஆனால் ஈ வெ ராவை வெகுவாக கவர்ந்தது சோவியத் ரஷ்யா மட்டுமே. சோவியத் பயணம் அவருடைய மனதுக்குள் ஆழமான சித்தார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இனிமேல் இயக்கத் தொண்டர்கள் பரஸ்பரம், ஸ்ரீ மான், ஸ்ரீ மகா என்றெல்லாம் அழைக்கக்கூடாது எழுதக் கூடாது தோழர் என்றே அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் ஈ வெ ரா. அடுத்தடுத்து இரண்டு தேர்தல்கள் தோற்றுப் போயிருந்த நீதிக்கட்சியை தேற்றும் பொறுப்பை தாமாக முன்வந்து ஏற்றுக் கொண்டார் ஈ வெ ரா. திடீர் திருப்பமாக சுய ராஜ்ய கட்சியின் ஆதரவுடன் சுய ஆட்சி முதல்வராக செயல்பட்டு வந்த சுப்பராயர் அரசுக்கு நீதிக்கட்சி ஆதரவளிக்க வேண்டிய சூழல் வந்தது கூட்டிக் கழித்து பார்த்தால் அரசை நீதிக்கட்சி வழி நடத்த நீதிக்கட்சியை ஈ வெ ரா வழி நடத்திக் கொண்டிருந்தார். சுப்பராயன் முதலமைச்சராக இருந்த போது தான் ஈ வெ ரா வின் உயிர்நாடிக் கொள்கையான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முதல் முறையாக அமலுக்கு வந்தது. முற்போக்கு திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றிய அரசு நீதிக்கட்சி அரசு என்ற போதும் 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சி நேரடியாக தேர்தல் அரசியலில் இறங்கியதும் நீதி கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் வெற்றி பெற்றது ராஜாஜி முதலமைச்சர் ஆனார்.

 பதவியேற்ற கையோடு பள்ளிகளில் இந்திப் பாடம் கட்டாயம் என்று அறிவித்தார் ராஜாஜி. அதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் ஈ வெ ரா. இந்து திணிப்பு எதிராக தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதல் மற்றும் மிகப்பெரிய போராட்டமாக 1937 மொழிப் போராட்டம் அமைந்தது. 1938 டிசம்பர் 13ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் தான் ஈ வெ ரா பெரியார் என்று முதன் முதலாக அழைக்கப்பட்டார். அன்று தொடங்கி இன்று வரை பெரியாராகவே தொடர்கிறார் ஈ வெ ரா என்கிற ஈ வெ ராமசாமி. ஆதரவாளராக, வழிகாட்டியாக செயல்பட்டு வந்த பெரியார் ஒரு கட்டத்தில் நீதி கட்சியின் தலைவராகவே பொறுப்பேற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட அந்த சமயத்தில் தான் படித்த அரசியல் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞர் அறிமுகமானார் அவர் பெயர் தான் அண்ணாதுரை. படிப்படியாக பெரியாரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக மாறினார் அண்ணாதுரை. 30 களின் மத்தியில் திராவிட நாடு கோசத்தை வலுவாக எழுப்பிய பெரியார் திராவிட நாடு பிரிவினை மாநாடு என்றே பெரிய மாநாடு ஒன்றை பகிரங்கமாக நடத்தினார். 

இந்தியா, இந்திய தேசியம், இந்தியர் என்பன போன்ற பிணைப்புகளில் இருந்து திராவிட நாடு தனியாக பிரிக்கப்பட்டு அதற்கென தனி அரசாங்கத்தை அமைத்து தனி நாடாக ஆக்கிக் கொடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 1944 ஆம் ஆண்டு சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு கூடியது. அந்த மாநாட்டில் தான் நீதிக்கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது. கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிடர் விடுதலைப்படை என்ற பெயரில் கருஞ்சட்டை படை என்ற உருவாக்கினார் பெரியார். கிட்டத்தட்ட இந்த சூழ்நிலையில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்ற பேச்சு மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. ஆனால் பெரியாரோ அப்படி கிடைப்பது சுதந்திரம் அல்ல வெறும் எஜமான் மாற்றமே என்றார். தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் ஆகஸ்ட் 15 குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அத்தோடு ஆகஸ்ட் 15ஐ துக்க தினமாக அனுசரியுங்கள் என்று அழைப்பு விடுத்தார் பெரியார். பெரியாரின் அறிக்கைக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் சுதந்திர நாளை இன்பநாளாக வர்ணித்து அறிக்கை வெளியிட்டார் அண்ணா. அதன் மூலம் பெரியார் அண்ணா இடையே மிகப்பெரிய கருத்து மோதல் வெடித்தது. விரிசல் விரிவடைந்து விடுமோ என்று பலரும் அஞ்சப்பட்ட தருணத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை ஓமந்தூர் ராமசாமி அரசு வெளியிட்டது. உடனடியாக எதிர்ப்பு காட்ட வேண்டிய தருணம் என்பதால் பெரியாரும் அண்ணாவும் கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு மொழி போராட்டத்தில் பங்கு பெற்றனர். திருவண்ணாமலையில் நடந்த ராஜாஜி பெரியார் சந்திப்பு அதை தொடர்ந்து நடந்த பெரியார் மணியம்மை திருமணம் ஆகியன திராவிட கழகத்தில் புகைச்சலை உருவாக்கியது.

அந்த திருமணத்தை பொருந்தா திருமணம் என்று விமர்சித்து அண்ணா. ஆனால் அந்த திருமணத்திற்கு பெரியார் கொடுத்த விளக்கம் இதுதான். எனக்கும் என் சொத்துகளுக்கும் சட்டப்படியான வாரிசு ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன். அதற்காக என்னுடன் ஐந்தாறு ஆண்டுகளாக பழகி நம்பிக்கை கொண்டவரும் என் நலத்திலும் இயக்க நலத்திலும் உண்மையான மற்றும் கவலையும் கொண்ட மணியம்மையை வாரிசாக ஆக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். திருமணம் என்பது சட்டப்படியான பெயரே தவிர நடைமுறைப்படி எனக்கான வாரிசு தான் மணியம்மை. ஆனால் பெரியாரின் விளக்கததை ஏற்றுக்கொள்ள அண்ணா விரும்பவில்லை. தனது ஆதரவாளர்கள் சரிதம் திராவிட கழகத்தில் இருந்து வெளியேறி அண்ணா திமுக என்கிற தனிக் கட்சியை தொடங்கினார். அதன் மூலம் பெரியார் உருவாக்கிய திராவிட கழகம் முதல் பிளவை சந்தித்தது. அதற்கு எதிர்வினையாற்றிய பெரியார் அண்ணாவையும் அவரது ஆதரவாளர்களையும் கண்ணீர் துளிகள் என்று விமர்சித்தார். கட்சி உடைந்தது பற்றி பெரியார் பெரிதாக கவலை கொள்ளவில்லை. வழக்கம் போல பகுத்தறிவு பிரச்சாரப் பணியை தீவிரப் படுத்தினார். கடைகளில் இருக்கும் சாதிப் பெயர்களை நீக்கும் போராட்டத்தை நடத்தினார். இப்படி இயக்கப் பணிகளில் பெரியார் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தான் சுதந்திர இந்தியாவிற்கு முதல் பொதுத் தேர்தல் வந்தது.

அந்த தேர்தலில் காங்கிரசும் கம்யூனிஸ்ட்களும் எதிரெதிர் துருவங்களில் நின்று போட்டியிட்டனர். புதிய கட்சியான திமுக தேர்தலில் பங்கேற்கவில்லை. காங்கிரசை ஒழிப்பதே தன்னுடைய வேலை என்று சொல்லி காங்கிரஸிலிருந்து வெளியேறிய பெரியார் 1951 தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். அந்த தேர்தலில் முடிவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலில் மூலம் அல்லாமல் நியமன உறுப்பினராகி முதல்வர் பதவியில் தொடர்ந்தார் ராஜாஜி. அதனை கடுமையாக விமர்சித்தார் பெரியார். போதாக்குறைக்கு புதிய கல்வி திட்டம் ஒன்றை கொண்டு வந்தார் ராஜாஜி. தகப்பன் செய்யும் தொழிலை பிள்ளை தொடர்வதற்கு ஏதுவான கல்வித் திட்டமாக இது அமையும் என்று கணித்த பெரியார் அந்த கல்வித் திட்டத்தை குலக் கல்வி திட்டம் என்று விமர்சித்தார். அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டத்தில் இறங்கினர். பெரியாருக்கு துணையாக ஜீவா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் நேரடியாகவும் காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மறைமுகமாகவும் சேர்ந்து கொள்ளவே ராஜாஜி பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அப்போது யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. காமராஜரை முதல்வராக வேண்டும் என்றார் பெரியார்.

அது போலவே காமராஜர் முதல்வரானார். காங்கிரசை தீவிரமாக எதிர்த்த பெரியார் காமராஜருக்காக காங்கிரசை ஆதரிக்க தயார் ஆனார். இன்னொரு கோணம் அண்ணா தலைமையிலான திமுகவை எதிர்த்தார் பெரியார் என்பதுதான். முதல்வரான கையோடு குலக்கல்வி திட்டம் என்ற புதிய திட்டத்தை ரத்து செய்தார் காமராஜர். அது முதல் காமராஜருக்கு தனது தார்மீக ஆதரவை கொடுத்தார் பெரியார். அதே சமயம் மத்திய அரசு இந்து திணிப்பு முயற்சியை எடுத்த போது இந்திய கொடியை எரிக்கும் போராட்டம் நடத்தவும் பெரியார் தவறவில்லை. ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களிலும் காமராஜரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக் கொண்டார் பெரியார். பெரியார் எழுதிய பச்சைத் தமிழர் காமராஜருக்கு வாக்களியுங்கள் என்ற முழக்கம் காமராஜரை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது. காமராஜர் ஆட்சியில் செய்த சாதனைகளை எல்லாம் மேடைகளில் பட்டியல் போட்டார். இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் காமராஜு க்கு வாக்களியுங்கள் என்றார். போதாக்குறைக்கு விடுதலை இதழில் காமராஜரின் சாதனைகள் அனுதினமும் வெற்றி செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தன. அதே சமயம் திமுக வென்ற இடங்களில் எல்லாம் சினிமாக்காரர்களை வைத்து கைப்பற்றியவை என்று விமர்சிக்கவும் பெரியார் தவரவில்லை. பெரியாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான காமராஜர் தனது கட்சி வளர்ச்சிக்காக புதிய திட்டம் ஒன்றை கண்டுபிடித்து தன்னுடைய தேசிய தலைமைக்கு அனுப்பி வைத்தார். கேப்லான் என்ற பெயரிடப்பட்ட அந்த திட்டத்தின் படி காமராஜ் தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அந்த முடிவை தற்கொலைக்கு சமமான முடிவு என்று காட்டமாக விமர்சித்தார் பெரியார்.

1965 ஜனவரி 26 இந்தியாவில் இந்தி ஆட்சி மொழியாக்கப்படும் என்று அறிவித்தது மத்திய அரசு. அதற்கு எதிராக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்தனர். மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. போராட்டம் வளர்த்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் மாணவர்கள் தீக்குளித்தும் விஷம் அருந்தியும் உயிர் நீத்தனர். கடந்த காலங்களில் இந்து திணிப்புக்கு எதிரான மொழி போராட்டங்களை முன் நின்று நடத்திய பெரியார் 1965 நடந்த மொழி போராட்டத்தை தீவிரமாக எதிர்த்தார். ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் மொழிப்போரை ஊக்குவிக்கிறது திமுக என்று விமர்சித்தார். ஒரு கட்டத்தில் திமுகவையே தடை செய்ய வேண்டும் என்றார் பெரியார். 1967 தமிழகத்தின் திருப்புமுனை தேர்தல் அந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்தித்தது. வழக்கம் போல காமராஜருக்காக காங்கிரஸ் பக்கம் நின்றார் பெரியார். பிரச்சாரத்திற்கு நடுவில் எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அது திமுகவிற்கு சாதகமாக போக் கூடும் என்று சொல்லப்பட்ட சூழ்நிலையில் எம்ஜிஆர் எம்ஆர் ராதா மோதலை கூத்தாடிகளின் சண்டைகளுக்கு அரசியல் முக்கியத்துவம் தரக்கூடாது என்று விமர்சித்தார் பெரியார். தேர்தலின் முடிவில் வெற்றியின் வாசனையோடு பெரியாரை நேரில் சந்தித்தார் அண்ணா.

அண்ணா கேட்டுக் கொண்டபடி திமுக அரசுக்கு அறிவுரைகளை கொடுத்தார் பெரியார். முக்கியமாக தற்போது வரும் கூட்டத்தையும் ஆரவாராத்தையும் முழுமையாக நம்ப கூடாது. சிபாரிசு லஞ்சம் முதலான விசயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அமைச்சர்கள் முடிவெடுக்கும் விவகாரத்தில் அவசரம் காட்டாமல் ஆழமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றார் பெரியார். திமுக ஆட்சி பெரியாருக்கான காணிக்கை என்று அண்ணா பேசியது மிக முக்கியமான பேச்சு. அரசுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டிய நேரத்தில் ஆலோசனை கொடுத்த பெரியார் கண்டிக்க வேண்டிய தருணத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. உதாரணமாக உலக தமிழர் மாநாட்டை திமுக நடத்தும் செய்தி வெளியானதும் முதல் கண்டனம் பெரியாரிடம் இருந்தே வந்தது. அதேபோல சாதி, மதம் தொடர்பான விழாக்கள் காலங்காலமாக அரசு விடுமுறை அனுசரிப்பது வழக்கம். இந்த நடைமுறையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பது பெரியாரின் விருப்பம். அண்ணாவின் அகால மரணத்தை தொடர்ந்து கட்சிக்கும் ஆட்சிக்கும் மாற்று தேட வேண்டும் என்ற சூழல் வந்த போது கருணாநிதி முதல்வராகவும் தலைவராகவும் வருவதற்கு பெரியார் ஆதரவளித்தார். நெடுஞ்செழியன் போன்றவர்கள் பிரச்சனை செய்த போது அவர்களும் கருணாநிதிக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று சட்டம் இயற்ற திமுக அரசை கோறினார் பெரியார். 

அதன்படியே சட்டம் ஒன்றை இயற்றினார் கருணாநிதி. ஆனால் அதற்கு சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் போடப்பட்டு விட்டன. இடைப்பட்ட காலத்தில் கருணாநிதி எம் ஜி ஆர் இடையிலான கருத்து மோதலால் திமுக உடைந்த போது அந்த விரிசலை தடுக்க எம்ஜிஆரை நேரில் அழைத்து பேசினார் பெரியார். ஆனால் பிளவை தவிர்க்க முடியாத சூழலில் கருணாநிதியின் பக்கமே நின்றார் பெரியார். இதற்கு இடையே ராஜாஜிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செய்திக் கேள்வி பட்டதும் உடனடியாக சென்று உடல் நலம் விசாரித்தார் பெரியார்.இறுதி ஊர்வலத்தில் வேனில் அமர்ந்த படியே கலந்து கொண்டதோடு மயானத்தில் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதார். அனைத்து சாதியினரும் ஆலயத்துக்குள் சென்று பூஜைகளை செய்வதற்கான சட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து மேடையில் முழங்கி பெரியார் அதற்கான அனுமதி கிடைக்காமல் இருப்பது தன் நெஞ்சில் முள் குத்தி இருப்பது போலவே இருக்கிறது என்றார். உடல்நிலை ஒத்துழைக்காத போதும் தொடர்ந்து செய்து வந்த இயக்கப் பணிகளை சமூக சீர்திருத்த பணிகளை எல்லாம் 1973 டிசம்பர் 24 ம் தேதியோடு முடித்துக் கொண்டார் பெரியார். பெரியாரின் மறைவுக்கு அரசு விடுமுறை அறிவித்ததோடு அரசு மரியாதையுடன் பெரியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் மறைந்து விட்டார். ஆனால் பெரியாரின் பணிகள் தொடர்கின்றன பெரியாரின் சிந்தனைகளில் உதித்த பல திட்டங்கள் பெரியாரின் வழிவந்த அரசியல் கட்சிகளின் ஆட்சிகளால் அமலுக்கு வந்துள்ளன. சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சமூக நீதி சார்ந்த பல திட்டங்கள் அணிவகுக்கின்றன. அந்த அணிவகுப்பு வரிசையை மென்மேலும் மென்மேலும் விரிவடைய செய்வதை பெரியாருக்கான பணி.

 

Beatmark Download

Effect Download


Post a Comment

0 Comments