முதலாம் பராந்தகச் சோழன் | பராந்தக சோழன் கட்டிய கோவில்கள்

ன்று நாம் முதலாம் பராந்தகச் சோழன் என்னும் சோழ மன்னனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். பண்டைய காலங்களில் மக்களை ஆட்சி செய்த மன்னர்களின் கட்டளைப்படியே நாட்டில் அனைத்தும் நடந்தது. இம்மன்னர் மட்டுமே, மக்களை மக்களே தேர்ந்தெடுத்து ஆட்சி செய்து கொள்ளும் தேர்தல் முறை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஆம், குடை ஓலை முறையில் தேர்தல் நடத்தி மக்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளித்தார் இம்மன்னர். இதனையே சென்னையிலிருந்து 90 கிலோ மீட்டர் அருகில் உள்ள உத்திர மேரூர் கல்வெட்டு இன்றும் உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ஆம், உலகிற்கே குடை ஓலை முறையின் தேர்தல் மகத்துவத்தை அளித்த உத்திர மேரூர் கல்வெட்டு இந்த மன்னரின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டது தான். இந்தக் குடை ஓலை முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த மன்னர் தான்.

நாம் கடந்து வந்த பாதையில் சோழர்களின் மத்திய காலக் கட்டத்தில் ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றிக் கண்டு வந்துள்ளோம். இவற்றுள், கிட்டத் தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாகச் சிற்றரசாக இருந்த சோழ தேசம் இவரது வருகையால் மிகப் பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்து அவர் தான் விஜயாலயச் சோழன். அவருக்குப் பின் அரியணை ஏறிய பெரும் வீரனான அவரது மகன் ஆதித்த சோழன், சோழ தேசத்தை அடுத்த எல்லைக்கே கொண்டு சென்றார். இவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளை ஏற்கனவே, நாம் வெளியிட்டுள்ளோம். படிக்காதவர்கள் அதைப் படித்து விட்டு வாருங்கள். மிகப் பெரிய வீரனான ஆதித்த சோழனைத் தொடர்ந்து, அவரது மகனான முதலாம் பராந்தகச் சோழன் அரியணை ஏறுகிறார். 


முதலாம் பராந்தகச் சோழன் இவரது ஆட்சி காலம் கி.பி. 907 முதல் 950 வரை. இவரது இயற்பெயர் வீரநாராயணன் ஆகும். இவர் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்துள்ளார். இவர் ஆட்சி செய்த காலம் சுமார் 48 ஆண்டுகளுக்கும் மேல். சோழ வம்சத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னர்களில் இவரும் ஒருவர். முதலாம் பரம்பரை சோழனுக்கு நான்கு மகன்கள். இராஜாஜித்த சோழன், கண்டராதித்தன், அருஞ்செழிய சோழன், உத்தம சீலி ஆகும். இதில் முதலாம் பராந்தகச் சோழன் மன்னராக இருக்கும்பொழுது தன்னுடைய மூத்த மகனான இராஜாஜித்த சோழனுக்கு இளவரசர் பட்டம் சூட்டினார். சோழப் படை வீரர்களுக்குப் படைத் தளபதியாகவும் இராஜாதித்த சோழன் இருந்து வந்துள்ளார். சோழ வம்சத்திலேயே ஒரு இளவரசர் படைத் தளபதியாக இருந்தது, இவரது ஆட்சிக் காலத்தில் தான். இதனை அடுத்து கண்டராதித்த சோழன். இவர் சிவனின் மீது உள்ள அதீத பற்றினால் எண்ணற்ற இலக்கியங்களை வடித்துள்ளார். 


அந்தக் காலக் கட்டத்தில் சில கோயில்களையும் புதுப்பித்துள்ளார். இதனை எடுத்து அருஞ்செழிய சோழன் அந்நாளில் மிகப் பெரிய வீரனாகவே கருதப்பட்டார். முதலாம் பராந்தகச் சோழனின் ஆட்சிப் பகுதிகள் தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை பரவி இருந்தது. இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மூன்றாவது ஆண்டிலேயே பொலிவிழந்து இருந்த பாண்டிய தேசத்துடன் போருக்குச் செல்ல வேண்டி இருந்தது. அப்போரில் முதலாம் பராந்தகச் சோழன் பாண்டிய மன்னரான இராஜ சிம்மனை வெற்றி பெற்றார். இதன் பின்னர் பாண்டிய மன்னரான இராஜ சிம்மன் இலங்கை மன்னரான ஐந்தாம் காசியப்பர் என்பரிடம் உதவியை நாடுகிறார். இதன் பிறகு பாண்டியப் படைகளுக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து மிகப் பெரிய படைகள் வந்தது. அந்தப் பெரும் படைகளை ஈழத்து மன்னனான ஐந்தாம் காசியப்பர் பாண்டிய படைகளுக்கு உதவியாகச் சோழ தேசத்திற்கு அனுப்பி வைத்தான். பின் நாளில் மிகப் பெரிய போரானது நடைபெற்றது. இப்போரில் பாண்டியப் படைகளும் சிங்களப் படைகளும் ஒரு புறம் நிற்க, மறு புறம் சோழப் படைகள் வந்து இறங்கின. இப்போரில் கடல் கடந்து பாண்டியப் படைகளுக்கு ஆதரவாக வந்த சிங்களப் படைகளைச் சிதறடித்தனர் சோழர்கள்.


பின்னர் இப்போரில் சோழர்கள் மிகப் பெரிய வெற்றி அடைந்து மதுரையை முழுவதுமாகக் கைப்பற்றினர். பின்னர் பாண்டிய மன்னர் தன் தேசத்தையும், அரியணையும் விட்டுத் தலை மறைவாகிறார். இதன் பின்னரே முதலாம் பாராந்தகச் சோழனை, அந்தக் காலக் கட்டத்தில் மதுரையும், ஈழமும் கொண்டான் என்று அனைவரும் அழைத்தனர். இவர், பாண்டிய மன்னரை வெற்றி பெற்றிருந்தாலும், அவரது செங்கோலையும், கிரீடத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அந்தக் கிரீடம் இலங்கை மன்னனால் கைப்பற்றப்பட்டு, இலங்கையில் உள்ள ரோகனா என்னும் மலையில் ஒளித்து வைக்கப்பட்டது. இதனை அடுத்து அப்போதைய இளவரசராக இருந்த இராஜாதித்த சோழனிடம், ஆட்சிப் பொறுப்பை அழித்து விட்டு, மகுடத்தையும், செங்கோலையும் தேடி இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார் முதலாம் பராந்தகச் சோழன். ஆனால், அவருக்கு அந்த மகுடமும், செங்கோலும் கடைசி வரை கிடைக்க வில்லை. இதனை இலங்கையின் நூலான மகாவம்சம் நமக்கு விவரித்துத் தெளிவாகக் கூறுகிறது. இதன் பின்னர் மிகுந்த ஆத்திரத்துடனும், கோபத்துடனும், முதலாம் பராந்தகச் சோழன் மதுரையில் உள்ள அனைத்துச் செல்வங்களையும் கைப்பற்றச் சொல்லித் தனது மகன் இராஜாதித்த  சோழனிடம் கூறினார். அதன் பின்னர், தமிழகத்தில் மிகப் பெரிய சாம்ராஜ்யமாகச் சோழர்களே இருந்தினர்.


இவர்களுக்கு இணையாக எந்த ஒரு சாம்ராஜ்ஜியமும் இல்லாத காலக் கட்டம் அது. ஏன், தமிழகத்தில் மிகப் பெரிய பேரரசுகளாக இருந்த பாண்டியர்களும், பல்லவர்களும் இல்லாத காலக் கட்டமும் கூட அது தான். இதனைத் தொடர்ந்து நாட்டின் வளத்தையும், சோழ சாம்ராஜ்யத்தின் மக்களையும் சிறப்பாகவே ஆட்சி செய்தனர். அதிலேயே முழு மூச்சாகக் கவனத்தையும் செலுத்தினர். இவருடைய ஆட்சி காலத்தில் தான், தன்னுடைய எல்லைக்குட்பட்ட ஒரு கோவிலுக்குச் செல்கிறார் முதலாம் பராந்தகச் சோழன். அப்போது, அமைச்சரே இந்தச் சோழ தேசத்தில் சிவனைப் பிரவேசிக்க எத்தனையோ ஆலயங்கள் இருந்தாலும் என் மனம் இந்த அண்டத்தை ஆளும் நாயகனான ஈசனைத் தரிசிக்க இக்கோவிலையே நாடுகிறதே ஏன், அதற்கு அமைச்சர் அரசே, இக்கோவிலின் சிறப்புக்களும், பெருமைகளும் நான் கூறிய உங்களுக்குத் தெரிய வேண்டும். தங்கள் முன்னோர்களின் தலை கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த சான்றாக இன்றும் உள்ள இக்கோவிலுக்கு உங்களை அந்த ஈசன் அழைத்து இருப்பார் அரசே. அது மட்டுமா, தான் ஆட்சி செய்த காலத்தில், தன் மகன் ஓட்டிச் சென்ற தேர் ஒரு பசுவின் கன்றுமீது ஏறிச் சென்று அதன் உயிரையும் பறித்தது. பின்னர் அந்தப் பசு நீதி கேட்டு அந்நாட்டின் நீதி மணியை அடித்தது. அந்தப் பசுவிற்கு நடந்ததைக் கேட்டு அந்த மன்னர் மிகவும் துயரம் அடைந்தார்.


பின்னர் அக்கன்றை கொன்ற தன்னுடைய மகனை அதே தேரிலை ஏற்றிக் கொன்று நீதியை நிலை நாட்டிய தங்களின் முன்னோர்களான மனுநீதிச் சோழன் வாழ்ந்த காலத்திற்கும் முன்பு கட்டிய கோவில் அல்லவா இது. இது மட்டுமா அரசே, தமிழகத்தை தங்களது கட்டளைக்குக் கீழ் ஆட்சி செய்யும் அனைத்து சோழ மன்னர்களும், முடி சூட்டிக் கொள்ளும் இடமாயிற்று அரசே இந்தக் கோவில். பின்னர் அரசர், அதுவும் சரி தான் அமைச்சரே.  இத்தகைய சிறப்புகளைப் பெற்றதால் தான் என்னவோ என்னைத் தரிசிக்க இந்தக் கோயில் அழைக்கிறது. அமைச்சரை அரசே, சோழ சாம்ராஜ்யத்தில் எத்தனையோ சிறப்புகளையும், பொறுமைகளையும் எனது முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளனர். என்னுடைய ஆட்சிக் காலத்தின் அடையாளமாகவும், சிறப்பு சேர்க்கும் விதமாகவும், இந்தக் கோவிலுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் அமைச்சரே. அமைச்சர் அரசே, உங்களின் கட்டளை எதுவாயினும், அதை நிறைவேற்ற இந்தச் சோழ தேசத்தின் மாந்தர்கள் நாங்கள் அனைவரும் உள்ளோமே. எதுவாயினும் கட்டளை இடுங்கள் அரசே, மிகவும் சிறப்பாகச் செய்கிறோம் என்றார் அமைச்சர். பின்னர், இதனைக் கேட்ட அரசர், அமைச்சரே அரசே, ஒரு தேசம் வlளமானதாகும், சிறப்பானதாகவும் இருக்க எது தேவைப்படுகிறது அமைச்சரே.


பின்பு அமைச்சர் அவர்கள் அரசே, சிறப்பாக ஆட்சி செய்யும் மன்னனும், வீரமிக்க படை வீரர்களும், வளமாக ஓடும் ஆறுகளும், செழிப்பான செந்நெல் பூமிகளும், பின்னர், பொன்னும், பொருளும் என்றார் அமைச்சர். இதனைக் கேட்ட அரசர், அமைச்சரே நீர் கூறிய அனைத்துமே நம்மிடம் உள்ளதே. ஆம், அரசரே என்றார் அமைச்சர். பின்னர், அரசர் இருந்த போதிலும் கடைசியாக நீர் ஏதோ கூறினீரே. செந்நெல் பூமிகள் செழிப்பாக இதனைக் கேட்ட அரசர் இல்லையே. அதற்கு முன்பு ஏதோ கூறினீரே, அதற்கு அமைச்சர் அவர்கள் பொன்னும், பொருளும் என்று கூறினேன் அரசே என்றார். அதற்கு அரசர் ஆம், பொன், பொன் இதற்கு மட்டும், நம் தேசத்தில் பஞ்சமா என்ன? என்னுடைய ஆட்சிக் காலத்தில் இந்தப் புண்ணிய கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாகத் தங்கத்தால் ஆன பொன் கூரையை வேயச் சொல்லுங்கள் என்று கட்டளை இட்டார் முதலாம் பராந்தகச் சோழன்.


இத்தகைய சிறப்பினை அக்காலத்தில் பெற்ற கோவில் தான்.  இன்றைய சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் ஆகும். இத்தகைய சிறப்புமிக்க செயலைச் செய்தவன் அப்போதைய மன்னன் முதலாம் பராந்தகச் சோழன். இதனாலேயே பின் நாளில் முதலாம் பராந்தகச் சோழனை தில்லை அம்பலத்திற்கு பொன் கூரை வேந்தவன் என்று சிறப்புப் பெயர் வைத்து அழைத்தார்கள். இதுவே இவன் சோழ தேசத்தை மிகவும் சிறப்பாக ஆட்சி செய்தமைக்கு கிடைத்த சான்றுகளில் ஒன்று. இந்நிலையில் ஒரு புறம் சோழ தேசம் அடிக்கடி போர்களைச் சந்தித்து வந்தது. சோழர்களைப் போன்ற வடக்கே இராஷ்டிரகூடர்கள் ஒடிசா, தெலுங்கானா வரை இவர்களின் எல்லைப் பகுதி விரிவடைந்து இருந்தது.

இந்நிலையில் சோழர்களுக்கு இடையான படை பலத்தை இராஷ்டிரகூடர்கள் வைத்திருந்தனர். பாண்டியர்களையும் பல்லவர்களையும் மொத்தமாக வீழ்த்தி இருந்த சோழர்களுக்கு அடுத்து இராஷ்டிரகூடப் படைகளுடன் போர் ஏற்பட்டது. இப்போரில் இராஷ்டிரகூட மன்னரான இரண்டாம் கிருஷ்ணாவைப், முதலாம் பராந்தகச் சோழன் வெற்றி பெறுகிறார். பின்னாளில் தொடர்ச்சியாக, சோழர்களுக்கும், இராஷ்டிரகூடர்களுக்கும் அடிக்கடி போர் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக நடைபெற்று வந்த அனைத்து போர்களையும் முறியடித்து வந்தார் பராந்தகச் சோழன். முதலாம் பராந்தக சோழன் தொடர்ச்சியாக நான்கு இராஷ்டிரகூட மன்னர்களை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். தொடர்ச்சியாக நான்கு மன்னர்களை வீழ்த்தி வடக்கே புலிக் கொடியை விரிவடையச் செய்தவர் முதலாம் பராந்தகச் சோழன். இத்தகைய சூழலில் தொடர்ச்சியாக நான்கு இராஷ்டிரகூட மன்னர்கள் வீழ்ந்திருந்த நிலையில், மூன்றாம் கிருஷ்ணா என்ற மன்னர் அரியணை ஏறுகிறார். இவர் சோழர்களின் மீதும், சோழ தேசத்தின் மீதும் மிகுந்த கோபத்தில் இருந்தார். இதற்குக் காரணம் தனது முன்னோர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக முதலாம் பராந்தகச் சோழன் வெற்றி பெற்று வீழ்த்தியது தான். இதனைத் தொடர்ந்து இராஷ்டிரகூட மன்னரான மூன்றாம் கிருஷ்ணா, முதலாம் பராந்தகச் சோழன் மீது படையெடுத்தார்.

இப்போரில் இரண்டு தலைமுறைக்குப் பின் சோழர்கள் தோல்வியைச்  சந்தித்தனர். ஆம், முதலாம் பராந்தகச் சோழ மன்னன், இராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணாவிடம் தோல்வியைத் தழுவினார். தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்று வந்த சோழர்கள், இப்போரில் இராஷ்டிரகூடர்களிடம் தோல்வியைத் தழுவினார்கள். பின்னர் தங்களது பலத்தை  அறிந்து கொண்ட இராஷ்டிரகூட மன்னன் இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினான். மூன்றாம் கிருஷ்ணா தக்க நேரம் பார்த்துச் சோழர்களை முழுமையாக வீழ்த்த எண்ணிக் கொண்டிருந்தான். இத்தகைய பெரும்படையை சமாளிக்கவும், வெற்றி பெறவும், சோழ தேசத்தில் ஒரு வீரன் அரியணையில் ஏறி ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலையில், அடுத்த சில காலங்களிலேயே வயது மூப்பின் காரணமாக முதலாம் பராந்தகச் சோழன் இறந்து விடுகிறார். இதனை அடுத்து மிகப் பெரிய வீரனான, முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகன் இராஜாதித்த சோழன் இருந்தார். அப்போதைய காலக் கட்டத்தில் அவரே இளவரசராக இருந்தார். ஆனால், இச்சூழலில் மன்னரானது என்னவோ, கண்டராதித்த சோழன் தான். ஏன், மாபெரும் வீரனான இராஜாதித்த சோழன் மன்னராகவில்லை என்றும், சோழர்களுக்கு இணையான படை பலத்தை வைத்திருந்த இராஷ்டிரகூடர்கள், பின் நாளில் சோழ தேசத்தை என்ன செய்தார்கள் என்று நம்முடைய அடுத்த பதிவில் பார்க்கலாம்.


Effect Download


Post a Comment

0 Comments