விஜயாலயச் சோழன் | விஜயாலயச் சோழன் வாழ்க்கை வரலாறு | சோழர் வரலாறு

இன்று நாம் பிற்காலச் சோழ மன்னர்களில் மகவும் புகழ் பெற்று விளங்கிய விஜயாலச் சோழனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். உலக வரலாற்றில் பல மன்னர்கள் இருந்தாலும், ஒரு சில மன்னர்கள் மட்டுமே தங்களின் ஆட்சி நிலை நிறுத்திக் கொள்ளவும், தங்களின் ஆட்சியின் எல்லைப் பகுதிகளை விரிவுபடுத்தவும், தங்களைப் பேரரசாகக் காட்டிக் கொள்ளவும் பல அரசர்கள் முயற்சி செய்தார்கள்.

இதே நிலையில் தான் கிட்டத்தட்ட 400 வருடங்களாக ஒரு தேசமானது சிற்றரசாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் ஒரே ஒரு மன்னரின் வருகையால் அந்தத் தேசம் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக வளர்ச்சி அடைகிறது. தென்னிந்தியாவை ஆண்ட பல மன்னர்கள் இருந்தாலும், ஒரு சில மன்னர்கள் மட்டுமே தங்களின் எல்லைகளை விரிவுபடுத்தித், தங்களை பேரரசாகக் காட்டிக் கொள்ளவும் முயற்சித்தனர். இந்நிலையில் பேரரசாக இருந்த ஒரு சாம்ராஜ்யமானது, கி.பி.  எட்டாம் நூற்றாண்டில் சிற்றரசாகவே இருந்து வந்துள்ளது. இந்த நிலையை மாற்றி ஒரு பேரரசரின் வருகையால் அந்தச் சிற்றரசானது மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுக்கிறது. ஆம், அவர் தான் விஜயாலய சோழன் என்னும் பரகேசரி வர்மன்.


இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 848 முதல் கி.பி. 871 வரை. இவரின் தந்தை ஸ்ரீ காந்த மனோகர சோழன் ஆவார். ஆரம்ப காலகட்டத்தில் தஞ்சை அடுத்த உறையுறைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வந்துள்ளார் விஜயாலய சோழன். இவரின் ஆட்சி காலத்தில் தான் பாண்டியர்களும், பல்லவர்களும் மிகப்பெரிய மிகப்பெரிய சாம்ராஜ்யங்களாக இருந்தார்கள். இவர்களுக்கிடையில் சோழ சாம்ராஜ்யம் ஒரு சிற்றரசாக இருந்து வந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. பெரும்பாலான போர்கள் அனைத்தும் சோழ தேசத்தில் தான் நடைபெற்றது. இதன் காரணமாகப் பாம்பும், கீரியும் சண்டை போடும்பொழுது நடுவில் மாட்டிக்கொண்ட எலிபோலச் சோழ தேசம் இடையில் மாட்டிக் கொண்டு மிகவும் அவதிப்பட்டது. சோழ தேச மக்கள் மிகவும் சேதம் அடைந்து, துன்பம் அடைந்தார்கள். இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விஜயாலய சோழன் எண்ணினார். 


பின்னாளில் இவரைப் போன்றே தஞ்சை ஆண்ட குறுநில மன்னரான முத்தரையரையும் வீழ்த்தி, 250 ஆண்டுகளுக்குப் பிறகு சோழர்களின் காலுக்குக் கீழே தலைநகராக மீண்டும் உருவெடுத்தது தஞ்சை நகரம். இச்செய்தியை அறிந்த மிகப் பெரிய பாண்டியப் பேரரசின் மன்னரான வரகுணவர்ம பாண்டியன் சோழ தேசத்தின் மீது படையெடுக்கத் தீர்மானித்தான். மிகப்பெரிய படைவீரர்களை வைத்திருந்த பாண்டிய தேசத்தை, மிகச் சிறிய படைப் பலத்தை வைத்து வென்று காட்டினான் விஜயாலய சோழன். இச்செய்தி காட்டுத் தீப்போல  அனைத்து திசைகளிலும் பரவ, விஜயாலய சோழனின் புகழும், சோழ தேசத்தின் புகழும் உலகெங்கும் பரவியது. இதன் பிறகு சோழ சாம்ராஜ்யம் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுக்க  ஆரம்பித்துவிட்டது, சோழ நாட்டை மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து வந்துள்ளார் விஜயாலய தோழன். பாண்டியர்களை வீழ்த்திய செய்தி அறிந்த பல்லவ மன்னனான மூன்றாம் நந்திவர்மப் பல்லவன், விஜய்காந்த சோழனை சந்தித்து பல்லவர்களுக்கு ஆதரவளித்தால் இன்னும் சில தேசங்களைத் தருவதாகவும், பல போர்ப் படைகளைத் தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.


இதனைக் கேட்ட விஜயாலய சோழர் இதன் மீது எனக்குத் துளியும் விருப்பம் இல்லை. இனிமேல் பல்லவ தேசத்திற்கு, சோழ தேசம் கப்பம் கட்டாது என்று கர்ஜித்தார். இந்த உடன்படிக்கை ஏற்படுத்திய சில ஆண்டுகளிலேயே மூன்றாம் நந்தி வர்மப் பல்லவர் உயிரிழந்து விடுகிறார். இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மூன்றாம் நந்தி வர்மப் பல்லவனின் இரண்டு மகன்களில் நிருபதுங்க வர்மன், அபராஜித வர்மன்  இவர்கள் இருவருக்கும் இடையே அடுத்த மன்னன் யார்? என்று மிகப்பெரிய சண்டையே ஏற்பட்டது. இந்நிலையில் அபராஜித வர்மனுக்கு விஜயாலய சோழனும், அவரது மகனும் ஆதரவளித்தனர். பின்னாளில் பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும் கும்பகோணம் அடுத்த திருப் புறம்பியம் என்னும் இடத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு போர் நடைபெற்றது. இந்தப் போர் தான் சோழ சாம்ராஜ்யம் அடுத்த 450 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவாவதற்கு மிக முக்கியமான ஒரு போராக இருந்தது. பாண்டியப் படைகள், பல்லவப் படைகள் இந்த இரண்டு படைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சோழப் படைகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருந்தன. இந்த முறை பாண்டிய தேசம் வெற்றி பெற்றால், சோழ தேசம் அடியோடு அழிந்துவிடும் என்று விஜயாலய சோழன் எண்ணியிருந்தார்.


பின்னர் போரில் மலையோடு மழை, முட்டுவது போல யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. புயலோடு புயல், மோதுவது போலக் குதிரைகளும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. ஒவ்வொரு வீரர்களின் கையில் இருந்த வேள்களும் மின் வெட்டுகளைப் போலப் பிரகாசித்தன. ஒவ்வொரு ரதமும் ஒன்றுக் கொன்று மோதி எல்லா திசைகளிலும் சுக்கு நூறாகப் பறந்தன. ஒவ்வொரு வீரர்களின் வாள்களோடு, வாள்களும் வேள்களோடு, வேள்களும் உராய்ந்த சத்தங்கள், அனைத்து திசையெங்கும் நடு நடுங்க வைத்தன. மூன்று நாட்கள் இடைவிடாமல் நடந்த இந்தப் போரில் ரணகள காட்சியுடன் ரத்தக் கடலாக இருந்தது போர்க் களம். அப்போர்க் களத்தில் அனைத்து யானைகளும், குதிரைகளும் செத்து மடிந்தன. இந்நிலையில் மூன்று நாட்கள் நடந்த இந்தப் போரில் பல்லவர்களின் ஒரு பகுதி மட்டும் மிஞ்சி இருந்தது. மிஞ்சி இருந்த வீரர்களும் மிகவும் களைத்துப் போய் இருந்தார்கள். இதன் பின்னர் எதிர்த்து நிர்க்க முடியாது, பின்வாங்கிச் சென்று விடலாம் என்ற முடிவுக்கே வந்தனர். இப்படிப்பட்ட நிலையில் தான் போர்க் களத்தில் ஒரு அதிசயம் நடந்தது.


முதுமையினால் தளர்ந்திருந்தவரும், உடம்பில் 96 காய வடுக்கள் உள்ளவரும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நடக்க முடியாதவருமான விஜயாலய சோழன், அந்தப் போர்க் களத்திற்கு வந்து சேர்ந்தார். அச்சூழலில் சோழதேசம் மீண்டும் நெடுங் காலம் தலை எடுக்க முடியாது என்று அறிந்த அந்தக் கிழட்டுச் சிங்கத்தின் கர்ஜனைப் பல வீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது. அந்தப் போர்க்களத்தில் விஜயாலய சோழன் எனக்கு ஒரு யானை கொடுங்கள் என்று சொன்னார். அதற்குப் படை வீரன் ஒருவன், ஒரு யானை கூட உயிருடன் இல்லை மன்னா என்று கூறினான். அதன் பின்னர் விஜயாலய சோழன் ஒரு குதிரையாவது கொண்டு வாருங்கள் என்று சொன்னார். அதற்கும் ஒரு படை வீரன், ஒரு குதிரை கூட உயிருடன் மிஞ்ச வில்லை மன்னா என்று கூறினான். அதன் பின்னர் விஜயாலய சோழன் சோழ நாட்டின் சுத்தமான வீரர்கள், யாரேனும் இருவர் உயிருடன் இருந்தால் என்னுடன் வாருங்கள் என்று கூறினார். அவர் கூறிய அடுத்த கணத்திலே 20 பேருக்குப் பதில் 200 பேர் முன்னாடி வந்து நின்றார்கள். இரண்டே இரண்டு பேர், தோளில் வலுவும், நெஞ்சில் உரமும் உள்ள இரண்டு பேர் என்னைத் தோள் கொடுத்து, தூக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் அனைவரும் இரண்டு, இரண்டு பேராக என் பின்னால் வந்து கொண்டே இருங்கள் என்று கர்ஜித்தார் விஜயாலய சோழன்.


பின்னர் இருவருடைய தோள்களில் அமர்ந்திருந்த விஜயாலய சோழன், அந்தப் போர் முனைக்குச் செல்லும்படி ஆணை இட்டார். இரண்டு கைகளிலும், இரண்டு பெரிய வாள்களை வைத்துக் கொண்டு, எதிரே வந்தவர்களின் தலையை வெட்டிச் சரித்துக் கொண்டே முன் நோக்கிச் சென்றார். அவர் கடந்து சென்ற பாதை எல்லாம் பாண்டியப் படை வீரர்களின் தலை இல்லாத முண்டங்களே விழுந்து கிடந்தன. இப்படிப்பட்ட அதிசயத்தைக் கண்டு பின்னோக்கி இருந்த அனைத்து வீரர்களும், முன்னோக்கி வந்து உற்சாகத்துடன் போர் முனையில் புகுந்தார்கள். பின்னர் பாண்டியப் படைகள் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தனர். பின்னர் விஜயாலயா சோழன் என்னும் மாபெரும் அரசனால்,  இப்போரில் பாண்டியர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள்.


இப்போருக்குப் பின்பு, சோழ தேசம் ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுக்கிறது. ஆம், அதற்கு வித்திட்டவர் அதே விஜயாலய சோழன் தான். வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்போர், இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடந்தது. இதற்குப் பின்பே, சோழ தேசம் ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்தது. இந்தப் போருக்குப் பின்னர் கிட்டத் தட்ட 450 ஆண்டுகளுக்கும் மேலாகச் சோழ சாம்ராஜ்யம் ஒரு மிகப் பெரிய பேரரசாக விளங்கியது. பின்பு சோழ தேசத்தின் எல்லைகள் விரிவடைய ஆரம்பித்தன. மெல்ல, மெல்ல சோழ தேசத்தின் புகழ் உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. அதன் பிறகு விஜயாலய சோழரை அழிக்கவும், சோழ தேசத்தை அழிக்கவும், பல்லவர்களும், பாண்டியர்களும் கைக்கோர்த்தனர். வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் ஒன்று சேர்ந்து நடுவில் இருக்கும் சோழ தேசத்தை, வீழ்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்று நினைத்தனர். விஜயாலய தோழன் முதுமை அடைந்ததை பயன்படுத்திக் கொண்டு, சோழ தேசத்தைக் கைப்பற்ற நினைத்து, போருக்கு  ஆயத்தமானர்கள் பாண்டியர்களும், பல்லவர்களும். இந்நிலையில் விஜயாலயச் சோழன் முதுமை நிலையை அடைந்திருந்ததால்,  போரில் அவர் கலந்து கொள்ளாமல், அவரின் படை மட்டுமே போருக்குச் சென்றது.


இப்போரில் அரசன் இல்லாமல் ஒரு புறம் சோழப் படைகளும், மறு புறம் காவிரி ஆற்றங் கரையில் பாண்டியப் படைகளும், பல்லவப் படைகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன. இப்போரில் பாண்டிய மன்னனான இரண்டாம் வரகுண வர்மன், தன் படைத் தளபதியிடம் அரசனின்றி வந்துள்ள படைகளிடம் போரிட எங்களுக்கு விருப்பமில்லை. ஆதலால், மண்டியிட்டுத் தங்களுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளுமாறு, எதிரில் உள்ள படைகளிடம் சொல்லிவிட்டு வருமாறு கட்டளை இட்டான். இதை அப்படியே வந்து சோழப் படை வீரர்களிடம் கர்வமாகக் கூறினான் பாண்டியத் தளபதி. இதைக் கூறிய அடுத்த கணமே அவனது தலை துண்டிக்கப்பட்டு உடல் மண்ணில் சரிந்து விழுந்தது. ஆம், புலிக்குப் பிறந்தது பூனையாக இருக்குமா?  அத்தகைய வீர செயலைப் புரிந்ததும், அவனது தலையைத் துண்டித்ததும், விஜயாலயச்  சோழனின் மகன் ஆதித்த சோழன் ஆவான். ஆதித்த சோழனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.


சோழ மன்னர்களின் மிகவும் சிறப்பு மிக்க சோழர்கள் நிறைய பேர் இருந்தாலும், அதில் விஜயாலயச்  சோழனுக்கும், ஆதித்த சோழனுக்கும் வரலாற்றில் மிக முக்கிய ஒரு இடம் உண்டு. இந்த உலகமுள்ள வரை விஜயாலயச் சோழனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். பிற்காலச் சோழ வம்சத்தை தோற்றுவித்தது விஜயாலயச்  சோழன் தான். இவர் மட்டுமில்லாமல் இருந்திருந்தால், இன்று ஆதித்த சோழன், கண்டராதித்தன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் என்று பல அறிய பொக்கிசங்கள் நம் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்காது.


Beatmark Download


Effect Download


Post a Comment

0 Comments