பொருளடக்கம்:
பாரதியார் சிறப்புகள்
பாரதியார் பெற்றோர் பெயர் மற்றும் பாரதியாரின் பிறப்பு
பாரதியார் கவிதைகள் எழுதத் தொடங்கியது
பாரதியார் அறிந்த மொழிகள்
பாரதியார் எழுதிய நூல்கள்
பாரதியாரின் பெண் விடுதலை
பாரதியார் இறப்பு
பாரதியார் சிறப்புகள்;
தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் பலர் அவர்களில் பாரதியார் தனக்கென்று தனியிடம் அமைத்துள்ளார். "அச்சமில்லை அச்சமில்லை" என்று தம் கவிதைகள்மூலம் நம்மிடையே விடுதலை உணர்வை ஊட்டியவர் மகாகவி பாரதியார். "யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவதெங்கும் காணோம்" என்று தமிழை வியந்து போற்றுகிறார் பாரதியார். பண்போடும் பணிவோடும் வகுக்கப்பட்ட பட்டறிவோடும் பெண்ணியம் போற்றுகின்ற பகுத்தறிவினை வளரச் செய்து "பாட்டு திறந்தாலே இவ்வையகத்தை பாலித்திட வேண்டும்" என்று எழுச்சியோடு பாடினார் மகாகவி பாரதியார். முறுக்கிய மீசையும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் எளிமையான தோற்றமும் கொண்ட பாரதியார் காலம் காலமாக இருந்து வந்த செய்யுள் நடை கவிதை மரபை மாற்றிப் புது கவிதை மரபை மாற்றிப் புது கவிதைகளுக்கு வித்திட்ட யுவபாரதியாவார்.
பாரதியார் பெற்றோர் பெயர் மற்றும் பாரதியாரின் பிறப்பு;
இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசுவாமி லட்சுமி அம்மையாருக்கு 1882 டிசம்பர் 11ஆம் தேதி மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம். இவர் ஐந்து வயது இருக்கும் போதே இவரது தாயார் காலமானார்.
பாரதியார் கவிதைகள் எழுதத் தொடங்கியது;
இவர் தனது ஏழு வயதிலேயே கவிதை எழுதத் துவங்கி விட்டார். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது கவிபாடும் ஆற்றல் கண்டு எட்டயபுரம் மன்னன் அவையில் இவருக்கு "பாரதி" என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவரது பெயர் சுப்பிரமணிய பாரதி என்றானது."பெண் அறிவை வளர்த்தால் வையம் பேதமை யற்றிங் காணீர்" என்று பாடிய பாரதிக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாளோடு 1897இல் திருமணம் நடந்ததேறியது அப்போது பாரதிக்கு 14 வயது. அன்றைய சமூகம் இது போன்ற கொடுமைகளைப் பெண்களுக்கு இழைத்து வந்தது. இது போன்ற கொடுமைகளைக் கண்டு பாரதி கொதிக்கலானார். இது போன்று இனியும் நடக்கக் கூடாது எனப் போராடினார். 14 வயதில் தன் தந்தையை இழந்த பாரதியார் இதன் பிறகு வறுமையில் வாடித் தவித்தார்.
பாரதியார் அறிந்த மொழிகள்;
பின்பு ஒருவாறு சிரமப்பட்டு காசிக்கு சென்று, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளைக் கற்றுக் கொண்டார். ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். தன் வாழ்க்கையில் எவ்வளவு துயரங்களைப் பாரதியார் சந்தித்தாலும் தமிழ் பற்றும் தேசப்பற்றும் சமூக அக்கறையும் துளியும் குறைந்ததில்லை. பாரதியார் இலக்கியங்களை ஐயம் திரிபுற கற்று அவற்றைத் தழுவி அழகான பல கவிதைகளை நமக்குத் தந்துள்ளார். இவை இலகு நடையும் இலக்கிய நயமும் பொருள் செறிவும் உடைய புதுக்கவிதை ஆகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் புது கவிதைகள் தமிழுக்கு அறிமுகம் செய்த பெருமை பாரதியையே சாரும்.
பாரதியார் எழுதிய நூல்கள்;
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பாரதமாதா, திருப்பள்ளி எழுச்சி, பெண்கள் விடுதலைக்கும்மி போன்ற பல கவிதைகளைப் பாரதியார் தமிழுக்கு தந்துள்ளார். பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தார்.மேலும் எட்டயபுர அரசவையில் அரசவைக் கவிஞராகப் பணிபுரிந்து பல கவிதைகளை இயற்றினார். இவரின் எழுத்துக்கள் 1903 இல் அச்சடித்து வெளியாகத் துவங்கின. அதன் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார். "பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்றார். இப்படிப்பட்ட நம் பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதை எண்ணி "நெஞ்சு பொறுக்குதில்லையே" பாடினார். வெள்ளையரின் அடக்குமுறைக்கு அஞ்சாது விடுதலை உணர்வு மிக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார். சுதந்திர போராட்ட வேட்கை மிகுந்த பாரதி பத்திரிக்கை மூலமாக அடிமைப்பட்டு கிடந்த சுதேச மக்களைத் தனது எழுத்துக்கள் மூலமாகக் கிளர்ந்தள செய்தார். மக்களிடையே சுதந்திர எண்ணத்தை விதைத்த பாரதி பின்வருமாறு பாடுகிறார்.
"அக்கினி குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிடை
பொண்டிடைக்காடு தழல் வீரத்தில்
மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ."
-என பாடினார்.
பாரதியாரின் பெண் விடுதலை;
பாரதி வாழ்ந்த காலப்பகுதியில் ஆணாதிக்கம் மேலோங்கிப் பெண்கள்மீதான அடக்குமுறை அதிகமாகக் காணப்பட்டது. பெண்கள் கல்வி கற்க கூடாது. ஆண்களுக்கு இணையாக வேலை பார்க்கக் கூடாது. சிறு வயது திருமணம் சீதனக்கொடுமைகள் இவற்றுக்கு எதிராகப் பாரதி குரல் கொடுத்தார். "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி இருந்தவர் மாய்த்து விட்டார்" என்று பெண்கள் விடுதலை கும்மி எனும் கவிதையில் பாடினார். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமை தன்னை கொழுத்துவோம்" என்று பாடினார். பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். கல்வி கற்க வேண்டும். ஆண்களுக்கு இணையாக வேலை செய்ய வேண்டும். விரும்பியவர்களை திருமணம் செய்து வேண்டும் என்ற கருத்துக்களை சமூகத்தில் வலியுறுத்தி "வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" என்ற வரிகள் மூலமாக வெளிப்படுத்துகின்றார். இதுவே பிற்காலத்தில் பாரிய சமூக மாற்றத்தையும் பெண்கள் சுதந்திரம் அடைவதற்கான விதை அன்று பாரதியினால் போடப்பட்டதாகும். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இன்று தலைநிமிர்ந்து வாழப் பாரதி அன்று போராடி இருந்தார்.
ஒருமைப்பாட்டுணர்வு மிக்க பாரதியார் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்திய மக்கள் என்றார். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மிடம் ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வேயெனப் பாடி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார். பாரதி என்ற மகா கவிஞன் தான் வாழ்ந்த காலத்தில் தமிழையும் தன் தேசத்து மக்களையும் நேசித்து மக்களிடையே பகுத்தறிவினை வளர்த்து இருண்டு கிடந்த மக்கள் வாழ்வில் தன் எழுத்துக்களால் வெளிச்சம் கொடுத்து "இனி ஒரு விதி செய்வோம்" என்று பாடினார் புதுமை கவிஞன். பாரதியைத் தமிழ் பெற்றது தமிழ் செய்த தனித்தவம். புரியாதவர்கள் வேண்டுமானால் அவரைக் குறைகள் கூறலாம். புரிந்த புரட்சிக் கவிஞருக்கும், நமக்கும் அவரைப் போல் தமிழ் புலவன் அகிலத்தில் இல்லை என்றே எடுத்து இயம்ப வேண்டியுள்ளது. "செந்தமிழ் நாடெனும் போதினிலே- இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே"என்று பெருமையுடன் கூறியதோடு நில்லாமல் "சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்" என்று ஆணையிட்டார்.
பாரதியார் இறப்பு;
மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த கவிஞன் என்றால் அது மிகை அல்ல. கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர் எனப் பன்முகம் கொண்ட பாரதியார் 1921 செப்டம்பர் 11ஆம் நாள் இவ்வுலகை விட்டு நீங்கினார்.பாரதி காட்டிய வழியில் நாமும் தமிழையும் நம் சமூகத்தையும் நல்வழியில் இட்டுச் செல்வோம்.
"பாட்டுக்கொரு புலவன் பாரதியின் புகழ் ஓங்குக".
கரிகால சோழன் ஆட்சி காலம
Effect Download
0 Comments