தமிழுக்கும், தமிழனுக்கும் வணக்கம். இன்று நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகும் ஒரு மன்னர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பாண்டிய மன்னர். யாத்திசை திரைப்படத்தின் முன்னோட்டத்தில் ஒளிந்திருக்கும் ஒரு சில விஷயங்களைப் பற்றி நாம், ஒரு சில நாட்களுக்கு முன்பு சில பதிவுகளைப் பதிவிட்டோம். அதன் பிறகு முழு படத்தைப் பார்த்தப் பிறகு நான் வியந்து விட்டேன். ஏனென்றால் அந்த அளவிற்கு படம் மிகச் சிறப்பாக இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு, ஏன் சொல்லப்போனால் அந்தப் படத்தைவிட பல மடங்கு, பல விஷயங்களை இந்தப் படத்தின் இயக்குனர் இந்தப் படத்தில் வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில், ஒளிந்து இருக்கும் பல விஷயங்களைப் பற்றி நாம் இதற்கு முன்பே பேசி இருந்தோம். ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த இரண்டு மணி நேர இந்தப் படத்தில் பல விஷயங்கள் ஒளிந்து இருக்கின்றன. படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் நுணுக்கமாகவும், அழகாகவும், அற்புதமாகவும் இருக்கிறது.
முதலில் நாம் இந்தப் படத்தில் காட்டப்பட்ட
உண்மையான கோச்சடையான் ரண தீரன் என்ற மன்னனை பற்றிப் பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். பாண்டியர்களைப் பற்றியும், பாண்டிய நாட்டைப் பற்றியும் பல வரலாற்று நிகழ்வுகளை நாம் தெரிந்து கொள்வதற்கு மிக முக்கியமான காரணமே ஒரு செப்பேட்டுத் தொகுதி தான். வேள்விக்குடி என்ற ஊரில் கிடைத்த இந்த வேள்விக்குடி என்ற ஒரு செப்பேட்டில் தான் மூலம் தான் அந்த நாம் இந்த அனைத்து தகவல்களை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதன்படி பார்க்கும்போது பாண்டிய நாட்டைப் பற்றியும், பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மற்ற மன்னர்களைப் பற்றியும், கோச்சடையான் ரண தீரன் பற்றியும் நாம் இங்கே பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
பாண்டியர்கள் தான் களப்பிரர்களை வென்றார்கள் என்ற ஒரு தகவல்களும் மொத்தம் பத்து செப்பெட்டுத் தொகுதிகள் ஒரு வளையத்தின் மூலம் பூட்டப்பட்டு மாடக்குலம் என்ற ஊரில் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்தச் செப்பேட்டு தொகுதியைத் தான் நாம் வேள்விக்குடி செப்பேடு என்று சொல்கிறோம். வேள்விக்குடி என்ற ஊரில் தானம்பற்றிய பல விஷயங்கள் இந்தச் செப்பேட்டில் குறிப்பிடுவதால் வேள்விக்குடி செப்பேடு என்று சொல்கிறோம். இந்தச் செப்பேட்டில் காலம் கிபி 769 ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தச் செப்பேட்டில் திறந்த எழுத்தில் சமஸ்கிருத மொழியிலும், வட்ட எழுத்திலும் தமிழ் மொழியிலும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் செப்பெட்டியில் தான் பல பாண்டிய மன்னர்களின் பெயரும், அவர்களின் வாழ்க்கை வரலாறும் தெளிவாகக் குறிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்தச் செப்பேட்டை வெளியிட்ட மன்னன் நெடுஞ்சடையன் பராந்தகன் என்ற பாண்டிய மன்னன் ஆவான். இந்தச் செப்பேட்டை வெளியிட ஒரு காரணம் இருந்தது ஆட்சி காலத்திற்கு முன்பாக, ஆட்சியில் இருந்த பாண்டிய மன்னன் முதுகுடுமி பெருவழுதி என்ற ஒரு மன்னன், கொற்கைக் கீட்டா நற்கோட்டன் என்பவனுக்கு ஒரு கிராமத்தை வரியில்லாத கிராமமாக இலவசமாக ஒரு சன்மானமாகக் கொடுத்தான். அதற்குப் பிறகு கலப்பிரர்கள் ஆட்சி வருகிறது. அவர்கள் காலத்தில் அந்த வேள்விக்குடி என்ற கிராமம் கைப்பற்றப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட பராந்தக நெடுஞ்சடையன், கொற்கைக்கு கீடா நரசிம்ம வர்மனுக்கு, மீண்டும் அந்தக் கிராமத்தைப் பரிசாகக் கொடுக்கிறான். மீண்டும் அந்தக் கிராமத்தை அவன் திரும்பத் தரும்போது அவன் சாட்சியாய் கொடுத்தது தான் இந்த வேள்விக்குடி செப்பேடு.
இந்த வேள்விக்குடி செப்பேடுகள் சங்க கால பாண்டிய மன்னர்கள் மறைந்து பல ஆண்டுகள் கழித்துதான், இந்த வேள்விக்குடி செப்பேடுகள் எழுதப்பட்டது. ஆகவே இந்தச் சிற்பத்தை எழுதிய பராந்தக நெடுஞ்சடையன் அவன் வழி நெடுக கேட்ட பல கதைகளை முன்னிறுத்தி இந்தச் செப்பேட்டை அவன் எழுதியிருக்கிறான். இந்தச் செப்பேட்டின் வழியாகத்தான் களப்பிரர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்தது பற்றியும், அப்படி ஆட்சி புரிந்த களப்பிரர்களை கடுங்கோன் என்ற ஒரு பாண்டிய மன்னன் விரட்டி அடித்தது பற்றியும் நமக்குத் தெரிந்திருக்கிறது. அப்படி கோச்சடையான ரண தீரன் என்ற மன்னனை பற்றிய பல விஷயங்கள் இந்தச் செப்பேட்டையில் இருந்தது. அவனுடைய பெயர் இந்த வேள்விக்குடி செட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சமஸ்கிருதத்தில் ரண தீரன் என்றும், தமிழில் கோச்சடையான் என்றும் குறிக்கப்பட்டு இருக்கிறது.
அரிகேசரி மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனின் மகன் தான் இந்தக் கோச்சடையான் ரணதீரன். இந்த ரணதீரபாண்டியன் ஒரு மாவீரன். அந்தக் காலகட்டத்தில் பாண்டியர்கள் ஆட்சிப் பரப்பை மிகவும் பரந்து விரிந்து கிடக்க செய்தான். சேர, சோழர்களை வெற்றி பெற்றிருக்கிறார். அதோடு கொங்கு நாட்டையும் கைப்பற்றி இருக்கிறான். அதேபோல் திருநெல்வேலி முதல் திருவனந்தபுரம் வரை உள்ள பகுதிகளை ஆய் நாடு என்று சொல்கிறோம். அந்தப் பகுதிகளையும் போரிட்டு வென்று இருக்கிறான். அதுமட்டுமல்ல ஆய் நாட்டின் தலைவனையும் போரிட்டு வெற்றி பெற்று இருக்கிறான். சேர, சோழர்களை வெற்றி பெற்றதன் வாயிலாக இவனுக்குப் பல பட்டங்கள் வழங்கப்பட்டன. நெடுவயல், குறுவடை, மாங்குறிச்சி, திருமங்கை, பூவலூர், கொடும்பாளூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களிலும் இவன் வெற்றி பெற்று இருக்கிறான். கொழும்பூரிலிருந்து பல்லவ மன்னனை தோற்கடித்து அவனிடமிருந்து பல யானைகளையும், குதிரைகளையும் கைப்பற்றி இருக்கிறான்.
கி.பி. 700 முதல் 730 வரை ஒரு சிறப்பான வீரம் நிறைந்த ஒரு மிகச்சிறந்த ஆட்சியைக் கோச்சடையான் ரண தீரன் நடத்தி இருக்கிறான். இவனுடைய படையானது கடல் போன்ற மிகப்பெரிய படை என்று குறிக்கப்பட்டு இருக்கிறது. ஆகச் சேரர், சோழர், கொங்கர் கர்நாடகர், ஆய் மன்னர் என்ற அனைத்து மன்னர்களையும் போரில் வென்ற ஒரே மன்னன் கோச்சடையான் ரணதீரன் தான். அதுமட்டுமல்லாமல் செங்கோல் தென்னன், வானவன், செம்பியன், கொங்கர் கோமான் மருத கர்நாடகன், மன்னர்மன்னன் என்ற பல பட்டங்கள் இவனுக்கு உள்ளது. இந்தப் பட்டங்கள் அனைத்தும் வெட்றுப் பட்டங்கள் அல்ல. இவன் வெற்றி பெற்றதால் கிடைத்த பட்டங்கள். பாண்டியர்களின் வரலாற்றில் ஒரு மிகச் சிறந்த ஒரு பாண்டிய மன்னனாக இந்தக் கோச்சடையான் ரண தீரன் விளங்கி இருக்கிறான். சேர, சோழ, பாண்டியர்கள் அனைவரும் அனைத்திலும் மிகச் சிறப்பாகத் தான் விளங்கி இருக்கிறார்கள். என்றும் மூவேந்தர்கள் புகழ் ஓங்குக. வாழ்க தமிழ்.
பாரதியாரின் வாழ்க்கை வரலாறு
Beatmark Download
0 Comments